Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Tuesday, 1 January 2013

2013 மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும்: வைகோ


கூட்டணி தொடர்பான முடிவுகளை இப்போது தெரிவிக்க முடியாது. ஆனால், மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
புத்தாண்டு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:-
மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும். தேர்தல் கூட்டணி, தேர்தல் வியூகம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. சுயமரியாதையை நிலைநாட்டும் வகையில் எங்கள் முடிவுகள் இருக்கும்.
மக்களவைத் தேர்தலில் நான் (வைகோ) போட்டியிடுவது பற்றி இப்போது சொல்ல முடியாது. ஆனால் கட்சி போட்டியிடும்.
மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') தன் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
"டிராய்' தமிழக அரசுக்கு கேபிள் டிவிக்கு உரிமம் வழங்க முன் வரவேண்டும். குறைவான செலவில் அதிக சேனல்களை மக்கள் பார்க்கலாம் எனும்போது, அதை வழங்குவதில் தவறில்லை.
நாஞ்சில் சம்பத் கட்சியை விட்டு விலகியதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்க கடுமையான தண்டனைகள் வழங்குவதுதான் தீர்வாக அமையும் என்று நான் கருதவில்லை. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மதுதான் முக்கிய காரணம்.
எனவே, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு மகளிர் பேராதரவு தருகின்றனர்.
காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றார் அவர்.

Sunday, 20 March 2011

தேர்தலில் போட்டியில்லை - மதிமுக

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது.
தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.
தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல, சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய தேவை மதிமுகவுக்கு இல்லை என்றும் மதிமுக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday, 14 March 2011

அதிமுக- கம்யூனிஸ்ட் உடன்பாடு

அஇஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்)க்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ)க்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது.
வைகோவின் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும்தான் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகே அதிமுக போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.
அதிமுக கூட்டணியில் இதுவரையான தொகுதிப்பங்கீடு: தேமுதிக - 41, சிபிஎம் - 12, சிபிஐ - 10, மனித நேய மக்கள் கட்சி - 3, புதிய தமிழகம் , அகில இந்திய சமத்துவ் மக்கள் கட்சி - தலா 2, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை - தலா 1.

Thursday, 10 March 2011

அ.தி.மு.க. அணியில் சரத்குமார் கட்சிக்கு 2 இடம்

அ.தி.மு.க. அணியில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அக்கட்சியுடன் இணைந்த நாடார் சங்கங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் சரத்குமார் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அ.தி.மு.க. அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அதனுடன் இணைந்த நாடார் அமைப்புகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்குவது என்று ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தில் ஜெயலலிதா, சரத்குமார், திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Tuesday, 8 March 2011

திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.

முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.

Saturday, 5 March 2011

தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிவு

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது.
இத்தகைய நிலையில் தி.மு.கவின் உயர்நிலை குழு கூட்டம் கூடியது.
இதன் முடிவில், காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் நியாயமற்ற வகையில் இருந்ததால் தாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்றும், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துக்கு பிரச்சனைகள் அடிப்படையில் ஆதரவு கொடுக்க போவதாகவும் தி.மு.க கூறியுள்ளது.

Friday, 4 March 2011

விஜயகாந்த்-ஜெயலலிதா கூட்டணி

தேமுதிகவுக்கு 41 இடங்கள் : விஜயகாந்த்-ஜெயலலிதா பேச்சுவார்த்தையில்
உடன்பாடு.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்தது.
தேமுதிக கட்சியின் அவைத்தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் அதிமுக முக்கிய பிரமுகர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இரவு 9.30 மணி முதல் 9.50 வரை இந்த பேச்சுவார்த்தை நடந்தது.   இந்த சந்திப்பின் போது தொகுதி குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.    தொகுதி உடன்பாடு ஏற்பட்டதில் மகிழ்ச்சியுடன்  வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்.

Friday, 18 February 2011

தமிழக தேர்தல் 2011: திமுக-பாமக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதிக்கும், பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் இதே போன்று 31 தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
அப்போது அக்கட்சி 18 இடங்களில் வென்றது. அதன் பிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி நாடாளுமன்ற தேர்தலில் அ இ அ தி மு க கூட்டணியில் அது இணைந்து போட்டியிட்டது.
ஆனால் தாம் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலுமே பாமக தோல்வியடைந்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் புதுடில்லியில் பாமகவுடன் கூட்டு என்று கருணாநிதி அறிவிக்க, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ராமதாஸ் கூற, கூட்டணி பற்றிய கேள்விகள் எழுந்தன.
திமுக கூட்டணியில் பாமகவைத் தவிர விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் உட்பட சில கட்சிகள் உள்ளன.
இதனிடையே பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Monday, 10 January 2011

அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்பேன்: சீமான்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.

 மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் "நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமான் திங்கள்கிழமை சந்தித்தார். சுமார் 40 நிமிஷ சந்திப்புக்குப் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியது: "தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவது குறித்து சீமான் பேசியதற்காக அவரைத் தமிழக அரசு கைது செய்தது. அதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. 
சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டப்படியான வழகு தவறு என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. சீமான் எந்தத் தவறும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை யாராலும் தடுக்க முடியாது. வரப்போகும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்' என்றார். 
இதைத்தொடர்ந்து சீமான் கூறியது: "தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அதற்கு நன்றி சொல்வதற்காக அவரைச் சந்தித்தேன். 
வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். வைகோ பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் இருந்துவிட்டார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் கூறினேன். யோசிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு பெரிய கட்சி அதிமுக தான். எனவே இந்த முறையும் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன்' என்றார்.

Thursday, 23 December 2010

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்.

நீண்ட நாட்கள் நோய்வாய்பட்டிருந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கருணாகரன்(93) , நீண்ட நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 ஆம் தேதியன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இநநிலையில் நேற்று மீண்டும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றதாகவும், இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை மரணமடைந்தார்.
கேரள முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Saturday, 9 October 2010

எஸ்.எஸ். சந்திரன் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னாள் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சந்திரன் அவர்கள், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் வெள்ளிகிழமையன்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் சந்திரன். அதன் பிறகு நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ். சந்திரன், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து இன்னாள் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ். சந்திரன்.
திரைப்படங்களில் மட்டுமன்றி, அரசியலிலும் ஈடுபாடு காட்டிய எஸ்.எஸ். சந்திரன், துவக்கத்தில் திமுகவில் செயல்பட்ட போதிலும், அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் எந்தப் பிரச்சினையிலும், தமிழிலேயே பேசி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன்.
திருவாரூரில் இருந்து அவரது உடல், சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Thursday, 19 August 2010

டாப் 10 உலகத் தலைவர்களில் மன்மோகனுக்கு முதலிடம்

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறவில்லை.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.

Sunday, 27 June 2010

மாரடைப்பால் சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் மரணம்

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல.ஏவுமான சுதர்சனம் நேற்று கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
67 வயதாகும் சுதர்சனம், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 23ம் தேதி முதலே கோவையில் முகாமிட்டிருந்த அவர் 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
24ம் தேதி இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென சிறுநீருடன் ரத்தம் கலந்து போனது. உடலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சுதர்சனத்தின் நிலைமை மோசமானது. இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில விநாடிகளில் அவர் உயிரிழந்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மாநாட்டுத் திடலுக்கும் சுதர்சனம் இறந்த செய்தி பரவியதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விரைந்து சென்று மலர்அஞ்சலி செலுத்தினர். கதறி அழுத சுதர்சனத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
இன்று சுதர்சனத்தின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மறைந்த சுதர்சனம், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராவார். காமராஜர் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். பின்னாளில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் வலது கரம் போல திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 20 வருடங்கள் இருந்தவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி கிராமத்தில் 1943ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தவர் சுதர்சனம். பத்தாவது வரை படித்துள்ளார். அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி வரை உயர்ந்தவர்.
கடந்த 1991, 96, 2001 ஆகிய தேர்தல்களில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் பூந்தமல்லி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்றார்.
சுதர்சனத்திற்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

Friday, 14 May 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Sunday, 11 April 2010

மாநிலங்களவையில் 100 கோடீஸ்வர எம்பிக்கள்

ஏப்.11: மாநிலங்களவை எம்பிக்களில் சுமார் 100 பேர் தங்களுக்கு 1 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒரு தனியார் தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் இந்த விவரங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபரும், சுயேச்சை எம்பியுமான ராகுல் பஜாஜ், தனக்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக 300 கோடிக்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பின்படி மாநிலங்களவை எம்பிக்களில் அதிக சொத்து உள்ளவர்களில் பஜாஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக மதச்சார்பற்ற ஜனதாதள எம்பி எம்ஏஎம்.ராமசாமி தனக்கு ரூ 278 கோடி சொத்து இருப்பதாகவும், காங்கிரஸ் எம்பி சுப்ரமணி ரெட்டி தனக்கு ரூ 272 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்பி ஜெயா பச்சனுக்கு ரூ 215 கோடி மதிப்பிலும், சமாஜவாதிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் எம்பிக்கு ரூ 79 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக தனியார் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவித்தன.

Tuesday, 23 June 2009

இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்

சென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:
என் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
அந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.
தற்போது நான் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).

Wednesday, 3 June 2009

Meira Kumar elected Lok Sabha Speaker 2009


Meira Kumar on 3rd June Wednesday made history in the Lok Sabha when she was unanimously elected its Speaker and thus became the first woman to occupy one of the highConstitutional posts.
Sixty four-year-old Kumar, Congress' Dalit face, a former foreign service official and Union Minister, was elected after a resolution moved by UPA chairperson Sonia Gandhi and seconded by Leader of the House Pranab Mukherjee was approved by a voice vote amidst thumping of desks by the entire House.
Kumar, elected from Sasaram in Bihar in the recent elections, is the daughter of the late Jagjivan Ram.
Earlier, leaders cutting across the political spectrum, including L K Advani (BJP, Mamata Banerjee (Trinamool Congress), T R Baalu (DMK), Arjun Charan Sethi BJD), SharadYadav (JD-U), Mulayam Singh Yadav (SP), Lalu Prasad (RJD), Ram Sundar Das (JD-U), Sharad Pawar (NCP), Farooq Abdullah (NC) and E Ahmed (Muslim League) also tabled their motions proposing Kumar for the post.
After Gandhi's motion was approved by a voice vote, Prime Minister Manmohan Singh, Mukherjee and Advani escorted Kumar, who was sitting in the front benches, to the Speaker's Chair.
After Kumar took the Chair, Singh hailed her election as a historic moment and said her services as a distinguished diplomat, 25 years in Parliament and her role as a Minister would stand her in good stead to execute her onerous job well.

Friday, 29 May 2009

Indian central ministers by state & party

Andhra Pradesh 6
Assam 2
Bihar 1
Chandigarh 1
Gujarat 3
Haryana 1
Himachal Pradesh 2
Jammu and Kashmir 2
Jharkhand 1
Karnataka 5
Kerala 6
Madhya Pradesh 4
Maharashtra 9
Meghalaya 2
NC Territory of Delhi 3
Orissa 1
Puducherry 1
Punjab 3
Rajasthan 4
Tamil Nadu 9
Uttarakhand 1
Uttar Pradesh 5
West Bengal 8

M.K.Stalin - Deputy CM, Tamilnadu

M.K. Stalin, the popular younger son of Tamil Nadu Chief Minister M. Karunanidhi, was Friday named deputy chief minister in a clear signal that he would get to head the DMK and rule the state at a future date.

With Karunanidhi, one of India's longest surviving politicians, in poor health and confined to the wheelchair, Stalin's elevation had been expected in the DMK for a long time. But it caught most people by surprise Friday.

Wild celebrations erupted outside Stalin's residence in the heart of Chennai after Governor Surjit Singh Barnala issued a statement appointing the 56-year-old as deputy chief minister on the advice of Karunanidhi.

Hundreds of DMK cadres including legislators and MPs, converged at Stalin's residence, presenting him garlands, bouquets and shawls. Some touched his feet in reverence.
Many more people celebrated outside, bursting crackers on the streets. Even some police officers came and shook hands with Stalin.

'We didn't expect the announcement today. It was a surprise,' a DMK leader told IANS.
According to a statement from the governor's office, Stalin, the rural development and local administration minister, will look after the departments of general administration, district revenue offices, industries, minorities welfare, social reforms, passports and special initiatives.
All these were the chief minister's responsibilities until now.

Stalin's elevation comes a day after his elder brother M.K. Azhagiri was sworn in as the central minister for chemicals and fertilisers Thursday in New Delhi. Stalin had attended the event.
DMK insiders and political analysts said Friday's appointment was the clearest indication that Karunanidhi had named his heir apparent and also signalled that he was about to retire from active politics.

Named after Joseph Stalin, the DMK treasurer and youth wing secretary is popularly known as 'thalapathi' or 'commander' by party cadres. He was the mayor of Chennai from 1996 to 2002.
A graduate from the University of Madras, he has been elected to the state assembly four times since 1989 but became a minister only in 2006. He now represents Chennai's Thousand Lights constituency, a DMK bastion that his father represented for a long time.

Stalin took to politics in 1973 and was jailed in 1976-77 under the Maintenance of Internal Security Act (MISA) during the Emergency regime of prime minister Indira Gandhi.

At one point, long-time DMK MP Vaiko was seen as a threat to the political aspirations of Stalin. Once Vaiko left the DMK, Stalin's stature increased dramatically. Stalin, who has a son and a daughter, has acted in television serials.

Thursday, 28 May 2009

Indian central ministers & their portfolios

Cabinet Ministers:
Pranab Mukherjee: Finance
Sharad Pawar: Agriculture, Food & Civil Supplies, Consumer Affairs & Public Distribution
A K Antony: Defence
P Chidambaram: Home Affairs
Mamata Banerjee: Railways
S M Krishna: External Affairs
Virbhadra Singh: Steel
Vilasrao Deshmukh: Heavy Industries and Public Enterprises
Ghulam Nabi Azad: Health and Family Welfare
Sushil Kumar Shinde: Power
M Veerappa Moily: Law and Justice
Farooq Abdullah: New and Renewable Energy
S Jaipal Reddy: Urban Development
Kamal Nath: Road Transport and Highways
Vayalar Ravi: Overseas Indian Affairs
Meira Kumar: Water Resources
Dayanidhi Maran: Textiles
A Raja: Communications and Information Technology
Murli Deora: Petroleum and Natural Gas
Ambika Soni: Information and Broadcasting
Mallikarjun Kharge: Labour and Employment
Kapil Sibal: Human Resource Development
B K Handique: Mines and Development of North Eastern Region
Anand Sharma: Commerce and Industry
C P Joshi: Rural Development and Panchayati Raj
Selja: Housing and Urban Poverty Alleviation; Tourism
Subodh Kant Sahay: Food Processing Industries
M S Gill: Youth Affairs and Sports
G K Vasan: Shipping
Pawan K Bansal: Parliamentary Affairs
Mukul Wasnik: Social Justice and Empowerment
Kantilal Bhuria: Tribal Affairs
M K Azhagiri: Chemicals and Fertilizers

Ministers of State (Independent Charge)
Praful Patel: Civil Aviation
Prithviraj Chavan: Science and Technology; Earth Sciences and Minister of State in the Prime Minister's Office; Personnel, Public Grievances and Pensions and Parliamentary Affairs
Sriprakash Jaiswal: Coal; Statistics and Programme Implementation
Salman Khursheed: Corporate Affairs; Minority Affairs
Dinsha J Patel: Micro, Small and Medium Enterprises
Krishna Tirath: Women and Child Development
Jairam Ramesh: Environment and Forests.

Ministers of State
Srikant Jena: Chemicals and Fertilizers
E. Ahamed Minister : Railways
Mullappally Ramachandran : Home Affairs
V. Narayansamy : Planning, and Parliamentary Affairs
Jyotiraditya Scindia : Commerce and Industry
D.Purandeswari Minister : Human Resource Development
K.H. Muniyappa Minister : Railways
Ajay Maken Minister : Home Affairs
Panabaka Lakshmi : Textiles
Namo Narain Meena : Finance
M.M. Pallam Raju : Defence
Saugata Ray : Urban Development
S.S. Palanimanickam : Finance
Jitin Prasad : Petroleum and Natural Gas
A. Sai Prathap : Steel
Preneet Kaur : External Affairs
Gurdas Kamat : Communications and IT
Harish Rawat : Labour and Employment
K.V. Thomas : Agriculture, and Consumer Affairs, Food & Public Distribution
Bharatsinh Solanki : Power
Mahadev S. Khandela : Road Transport and Highways
Dinesh Trivedi Minister : Health and Family Welfare
Sisir Adhikari : Rural Development
Sultan Ahmed : Tourism
Mukul Roy : Shipping
Mohan Jatua : Information and Broadcasting
D. Napoleon Minister : Social Justice and Empowerment
Dr. S. Jagathrakshakan : Information and Broadcasting
S. Gandhiselvan : Health and Family Welfare
Tusharbhai Chaudhary : Tribal Affairs
Sachin Pilot : Communications and IT
Arun Yadav : Youth Affairs and Sports
Pratik Patil : Heavy Industries and Public Enterprises
R.P.N. Singh : Road Transport and Highways
Shashi Tharoor : External Affairs
Vincent Pala : Water Resources
Pradeep Jain : Rural Development
Agatha Sangma : Rural Development