Thursday 19 May, 2011

58வது தேசிய திரைப்பட விருதுகள் - தமிழுக்கு 14

தேசிய திரைப்பட விருதுகள் இன்று தில்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில், நடிகர் தனுஷ்க்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது.
ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஆடுகளத்தில் நடித்த ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது (படம் - தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.
எந்திரன் - சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
எந்திரன் - சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
சிறந்த தமிழ்ப் படம் - தென்மேற்கு பருவக்காற்று
மைனா படத்தில் நடித்த தம்பி ராமய்யாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது.
சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.