Wednesday 24 February, 2010

ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி

டோயோட்டா, ஹோண்டா வரிசையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் காரில் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்த அவற்றை திரும்பப்பெற்று உதிரிபாகங்களை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.
'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.
'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார் கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.
இதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.
டாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.
இதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை இன்று (24-02-2010) தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
 * மேலும் 10 துரந்தோ ரயில்கள் அறிமுகம்
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 21 ரயில் மார்க்கங்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
* 2011 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.
* வரும் நிதி ஆண்டிற்குள் மேலும் 117 ரயில்கள் இயக்கப்படும்.
* ஒரே ஆண்டில் 1000 கி.மீ., இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* 16 வழித்தடங்களில் புதிதாக 16 சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில் நிலையங்கள் இயக்கப்படும்.
* காமன்வெல்த் 2010 போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள் இ‌யக்கப்படும்.
* மேலும் பல மேம்படுத்தப்‌பட்ட சரக்கு காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* ஏ.சி., வகுப்பு சேவை கட்டணம் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைப்பு.
* ஐ.ஐ.டி., காரக்பூரில் ரயில்வே துறை குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
 * சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும்.
* பயணிகள் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த 1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் ரயில் டிக்கட் கவுன்டர் அமைக்கப்படும்.
* செகந்தரபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு அகடமிகள் தொடங்கப்படுகின்றன.
* ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பரிசோதனை நிலையம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
* உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு.
* ரயில்வே பெண் ஊழியர்கள் வசதிக்காக அவர்கள் குழந்தைகளுக்கென பாதுகாப்புமையங்கள் அமைக்கப்படும்.
* ரயில்வே துறைக்காக குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* ரவீந்தரநாத் ‌தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாரத் தீர்தா என்ற பெயரில் நாட்டின் அனைதது முக்கிய யாத்திரை இடங்களுக்கும் ரயில் விடப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* மொபைல், இ. டிக்கெட் சேவையை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் பெற ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இன்று குவாலியரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் பெட்ச்மன் ஒருவர் அடிக்கும் முதல் இரட்டை சதமாகும். சச்சின் அடித்த 200 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோராகும்.
இதற்க்கு முன் பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் ஜிம்ப்பாவேயின் கோவன்ட்ரி ஆகியோர் அடித்த 194 ரன்களே ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஸ்கோராக இருந்து வந்தது. இன்று சிறப்பாக அடித்து விளையாடிய சச்சின் தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரான 186 ரன்களை கடந்தும், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

Thursday 18 February, 2010

மாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்

சிறிய ரக கார் களுக்கு பிரசித்தி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய மாடலான 'மாருதி சுசுகி கிஸாஷி'யை இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டில் ஃபிராங்க்பர்ட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த மாடலுக்கான 'கான்செப்ட்' காரை மாருதி சுசுகி காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் இந்த மாடல் காணப்பட்டது.

இந்தாண்டு இந்தியாவில் இம்மாடலின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவுன் இதுபற்றி கூறுகையில்,
'கிஸாஷி இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையை துவக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்று குறிப்பிட்டார்.
21 இன்ச் வீல்களைக் கொண்ட இந்த கிஸாஷி, ஸ்டைலான வடிவமைப்புடன் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் விலை சுமாராக ரூ.10 லட்சம் இருக்கும். இந்திய சந்தையில் ஆடி ஏ 4, டொயோட்டா கரோல்லா, அக்யூரா டிஎஸ்எக்ஸ், ஹோண்டா சிவிக், ஃபோர்ட் ஃபோகஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக கிஸாஷி அமையும்.
லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Friday 12 February, 2010

Nokia's 3G Phone Launched for Rs. just 4,499

Nokia has launched its most affordable 3G handset in the country earlier today with the launch of the Nokia 2730 Classic. The phone, priced at just Rs. 4499, comes loaded with a host of features rarely seen on a device in is price range.
The 2730 Classic packs in Ovi Mail, Nokia Messaging, Nokia Life Tools, and full HTML browsing as well. It also comes with Opera Mini preloaded. The 2730 Classic has a 2-inch QVGA display that can display 262k colours. At just 88grams, the phone is quite light-weight. As expected, it runs Nokia's S40 interface. The 30 MB of internal memory can be augmented using a microSD card and the phone comes with a 1GB card - preloaded. It offers a maximum of 7.4 hours talk time and 16.5 days standby time. Music lovers on a budget can rejoice - thanks to the 3.5mm slot this one comes with. If that wasn't all, there is Bluetooth and microUSB support as well.
There is a decent 2 megapixel camera at the rear that should be good enough for casual imaging. Along with 3G, it also supports class 32 EDGE - making it a good device for browsing while on the move. There's FM Radio with RDS as well.
The 2730 Classic should make a decent buy for a feature packed, cheap first phone.

Thursday 4 February, 2010

பார்வையற்றோருக்கு தனி வெப்சைட்

http://www.socialjustice.nic.in/
அரசின் சார்பிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் சமூக விஷயங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் ஐயாயிரம் இணையதளங்கள் உள்ளன. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இப்போது கூட இவற்றில் ஒன்றேனும், உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக் கின்றன. குறிப்பாக, கண்பார்வையற்றோர், நிறங்களை அடையாளம் காண இயலாதோர், மங்கலான பார்வை உடையோர் போன்றோர் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலையில் தான் உள்ளன.
முதன்முறையாக சமூகநீதி மற்றும் அதிகாரத்துக்கான மத்திய அமைச்சகத்தின் இணையதளம் கண்பார்வையற்றோர் போன்றவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. “ஊனமுற்றவர்களுக்கும் இணையதளங்களைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்பதில் ஐயமில்லை’ என்கிறார் இத்துறையின் அமைச்சர் முகுல் வாஸ்னிக். “ஒரு அரசு இணையதளம் முதன் முறையாக இதுபோன்று இயங்குவதற்கு எனது துறையின் இணையதளம் வழிகாட்டியாக இருக்கிறது’ என்கிறார் அவர். படங்களுக்குப் பதில் மாற்று எழுத்து வடிவங்கள், மெதுவாகப் படிப்பவர்களின் வசதிக்காக எழுத் துக்களுக்கிடையில் போதுமான இடைவெளி, பெரிய வடிவ எழுத் துக்கள், தேவையான இணைப் புகள், வீடியோக்கள் என்பதாக அந்த இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மவுஸ் பயன்படுத்த இயலாதவர்கள் முழுக்க முழுக்க கீபோர்டை மட்டுமே பயன்படுத்தலாம். கடந்த 2008, டிசம்பர் 3ம் தேதி, தங்கள் உரிமைகளை வலியுறுத்தி டில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இவர்களின் பிரதிநிதிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அரசு இணையதளங்களை ஊனமுற்றோரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைக்கும்படி மத்திய தகவல் அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. “இது நடந்து ஒரு ஆண்டுக்குப் பின், முதன்முறையாக இப்போதுதான் ஒரு அரசு இணையதளம் எங்களுக்கும் சேர்த்து உருவாகியிருக்கிறது. இணையதளங்கள் வைத்துள்ள அரசின் 50 துறைகளுக்கு எங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தோம். அவர்களில் ஒருவரும் இதுவரை அதற்குப் பதில் அனுப்பியதில்லை’ என்கிறார் தேசிய ஊனமுற்றோருக்கான மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குனர் அபிதி.

வந்துவிட்டது ஆப்பிளின் புதிய ‘ஐபேட்’

பல மாதங்களாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த, மேம்படுத்தப்பட்ட புதிய “ஐபேட்’ விற்பனைக்கு வந்துள்ளது.இப்போது மொபைல்போனிலேயே எல்லா வசதிகளும் வந்துவிட்டாலும், வேறு சில காரணங்களுக்காக கம்ப்யூட்டரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “ஐபேட்’, மொபைல்போனாகவும், லேப்டாப்பாகவும் செயல்படும் என்பதுதான் அதன் விசேஷம்.
இதற்கு “டேப்லெட்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.அரை அங்குல தடிமன், 680 கிராம் எடை , 9.7 அங்குல திரை என்று சிறப்பம்சங்களோடு சந்தையில் உலாவரப் போகிறது ‘ஐபேட்’. இதன் பேட்டரி பத்து மணி நேரம் தாக்கு பிடிக்கும். எலக்ட்ரானிக் உலகில் இது ஒரு முக்கிமான சாதனையாகவும் கருதப்படுகிறது.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றில் இல்லாத புதிய பல வசதிகளுடன் “ஐபேட்’ தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் செயல்வசதிகள் உள்ளன. 16 ஜி.பி., 32 ஜி.பி., 64 ஜி.பி., அளவுக்கு தகவல்களை வைத்துக் கொள்ளும் வகையில் பல மாடல்களில் கிடைக்கின்றன.இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள “ஐபேட்’ டில் லேப்டாப் மற்றும் மொபைல்போன்களில் உள்ள சில வசதிகள் குறிப்பாக கேமரா, வீடியோ மற்றும் அனிமேஷன் மென்பொருள் கொண்ட இணையங்களைப் பார்க்கும் வசதி போன்றவை இதில் இல்லை. ஆனால், இ-புத்தகங்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டுகளுக்கும் இக்கருவி பெரிதும் பயன்படும். இது பெரிய அளவிலான ஐபாட் ஆக இருந்தாலும், லேப்டாப் போன்று இடத்தை அடைக்காமல் கையடக்க அளவிலேயே இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டேப்லெட் கருவிகளை வெளியிட்டாலும் ஆப்பிளின் மார்க்கெட்டைப் பிடிப்பது என்பது சற்றுக் கடினம்தான் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். வரும் மார்ச் மாதத்திலிருந்து இது மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday 3 February, 2010

Ford Figo rollout from Chennai plant on Feb 5th

Having successfully completed the trial production of its first subcompact car-Figo-recently, Ford India is now gearing up to begin its commercial rollout from its Chennai facility on 5th February, 2010. Furthermore, Tamil Nadu’s chief minister M Karunanidhi and deputy chief minister Stalin would inaugurate the plant on Friday, as claimed PTI. It may be recalled that Ford India, which currently rolls out Fiesta, Ikon, Endeavour, had inked an MoU with the Tamil Nadu government last year, under which it would invest an additional Rs. 1,500 crore to expand the M.M.Nagar facility. The investments also involved enhancing making new engines and Figo’s production.
Despite being absent from the high-decibel 2010 Auto Expo, Ford India is gearing up to introduce its first semi-compact car-Figo- by March this year. Based on the Fiesta’s platform, Ford Figo will be built exclusively in India and exported to Asia-Pacific and Africa regions. Ford Figo will be the made for India car and it will be launched in both petrol and diesel engine options which will be specially made by keeping in mind Indian road conditions and traffic. The car will be equipped with a 1.2L Rocam engine (known as Duratec to new buyers) or 1.4L diesel engine (Duratorq). Figo’s 1.2L which is essentially a stripped down unit of Fiesta’s duratec produces 70bhp of peak power at 6250rpm and a maximum torque of 104Nm at 4000rpm. Ford Figo 1.4L diesel engine pumps out 68bhp of peak power at 4000rpm and 160Nm of peak torque at 2000rpm.
The car will come in three variants – base, mid and high end (called platinum). The Titanium variant will have an optional pack (high plus). The 5-door hatchback car will come in seven colours: Diamond white, Panther Black, Moondust Silver, Chille, Sea Grey, Squeeze and Colorad Red. Although the price range of the model has yet not been announced by the company yet, there is a lot of buzz that the model would be available between Rs. 3.5-4.5 lakh (depending on the versions and the variants).
It may be recalled that the Ford Figo model was first unveiled in New Delhi in September this year. To facilitate the manufacturing of this model and also to double its manufacturing capacity to 2 lakh units the company is spending US$500 million on the Chennai plant. A senior company official had earlier indicated that Ford Figo will feature an array of advanced third generation safety features like Dual Front Airbags that offers safety in case of front collision, ABS (Antilock Brake System) with EBD (Electronic Brake-Force Distribution) that enhance the stability of the car and provides more comfortable driving experience. Belt tensioners and Belt Force limiters, Seatbelt warning indicator, Door-ajar warning and many more safety features will be available with Ford Figo.
News from - Wheels Unplugged Automobile Industry News