Monday 28 December, 2009

நாடு, மதம், மொழி... கடந்தது காதல்!

தருமபுரி, டிச. 27: தமிழ் கலாசாரப்படி, தருமபுரியில் ஆஸ்திரிய நாட்டுப் பெண்ணை நடனப் பயிற்சியாளர் திருமணம் செய்துகொண்டார் (படம்).
தருமபுரியை அடுத்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், மல்லிகா தம்பதியரின் மகன் செந்தில் (28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் சென்னையில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டின் அரசு விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் எலிசபெத் (25) சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு அண்மையில் வந்தார்.
சென்னையில் செந்திலிடம் நடனப் பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தமது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து, செந்தில் குடும்பத்தினர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எலிசபெத் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

Saturday 19 December, 2009

தோனிக்கு இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பந்துவீசிக் கொண்டிருந்த இந்திய அணியினர் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் முடிவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து ஐசிசி விதிப்படி நடுவர் ஜெஃப் க்ரோ தோனிக்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்தத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. உடனடியாகத் தடை அமலுக்கு வரும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. எனினும் தோனி இல்லாமல் போனால், அடுத்து இலங்கையுடன் ஆட வேண்டிய ஆட்டங்களில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இலங்கையுடனான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

Monday 14 December, 2009

மக்கள் விரும்பினால் மாநிலங்களைப் பிரிக்கலாம்: அப்துல்கலாம்


இந்தூர்: மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். எனவே தனி மாநிலம் குறித்து அந்தந்த மாநில மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்வது நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து தெரிவித்தார்.
மாநிலங்களைப் பிரிப்பதைக் காட்டிலும் மக்களின் விருப்பமே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அப்துல் கலாமிடம் தனி மாநில கோரிக்கைகள் பரவலாக அதிகரித்து வருவது குறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்கையில்,
'இந்த மாநிலத்தை பிரிக்கலாம், இதை பிரிக்கக் கூடாது என்று சொல்வது மிகவும் சிரமம். என்னை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் கருத்து, விருப்பம் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவர்களின் விருப்பப்படியே செய்யவும் வேண்டும்.
ஏனெனில் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் வரை நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாத ஒன்று. தனித்தனி மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருவது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்றால், இதை வளர்ச்சிக்கான அரசியலாக பார்க்கவேண்டுமே தவிர, அரசியலின் அரசியலாக அணுகக்கூடாது.
தற்போது நாட்டில் இளம் தலைவர்கள் நிறைய வருவது நல்லது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் வளர்ச்சியை நோக்கி வீறுகொண்டு எழவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதமாக்கி அடுத்த 10 ஆண்டுகளிலும் அதை தக்க வைத்துக்கொண்டால், 2020 வல்லரசு என்ற இலக்கை எட்டிவிட முடியும்' என்று கலாம் கூறினார்.

Saturday 12 December, 2009

Volkswagen-Suzuki to roll out Rs 2.5-lakh car in India


The Volkswagen-Suzuki alliance plans to develop a brand new small car for the Indian market in the Rs 2-2.5 lakh range, which could replace the Alto when the Indian arm of Suzuki decides to retire its top-selling model.
"We will need a car in the Rs 2.5-lakh apiece range. First we had the M800, then the Alto. At some point we will need a replacement for the Alto. That price range is the entry level for Indian customers today, so we can't leave that segment open," Maruti Suzuki chairman RC Bhargava told ET.
Volkswagen and Japan’s Suzuki Motor had, on Wednesday, announced a deal which will see the German carmaker picking up a 19.9% stake in Suzuki for $2.5 billion. The companies plan to develop small cars and electric vehicles under both brands. The new car that will be priced at $4000-5000 in the European market will be the cheapest car from the Volkswagen stable below the Up, which carries a price tag of around $8800.

Friday 11 December, 2009

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா- 9 நாட்கள் நடக்கிறது

சென்னை: இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் இந்தாண்டு சர்வதேச திரைப்பட விழா சென்னை யில் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி தங்கராஜ் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
சென்னையில் இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் 7வது திரைப்பட விழாவை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க நாளன்று ஸ்பெயின் நாட்டு சினிமா திரையிடப்பட உள்ளது. விழாவில் மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.
பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கேன்ஸ் பட விழாவில் திரையிடப் பட்ட சில படங்களும் திரையிடப்படும். ஜெர்மனி இயக்குநர் ரோலான் ரிபர் பற்றி ஆய்வு நடைபெற உள்ளது.
விழாவில் வெளிநாட்டு இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் அமல் செய்யப்பட உள்ளது. 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பொக்கிஷம்', 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சலுகை அளிக்கப்படும் என்றனர்.

Sunday 6 December, 2009

கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் இந்தியா நம்பர்- 1

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இலங்கை அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.

Wednesday 2 December, 2009

Now Tata Nano goes green

One of the most prominent events for the automobile industry in the year was the launch of Tata Nano, the poor man’s car. The car is out there to fit in the budget of most people who desire to possess a car but are not financially in a position to do so.
Tata has now announced plans to produce a green version of the car. The car will be going hybrid. Mr Rattan Tata, Chairman of the Tata group and Tata Motors announced the ambitious plan on a visit to South Korea. Mr Tata is also believed to have said that the price war will continue and will soon see the low priced car emerging the winner.
Hybrid cars use dual power. The car runs on battery when possible and only falls back on primary power supply of petrol or diesel when there is a requirement. This leads to a very low consumption of fossil fuels and a high mileage. No further details were available but the project looks very interesting.

Tuesday 1 December, 2009

இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம்.

தேகப்பயிற்சி செய்யும் மாணவர் புத்திக்கூர்மை அடைகிறார்கள்..
ஆட்டுக்கொத்து சாப்பிடும் தமிழருக்கு வருகிறது ஆபத்து..
இன்றைய டேனிஸ் பத்திரிகைகளில் இரண்டு செய்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதில் முதலாவது இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் 30 வீதம் அதிகமாக உள்ளது என்பதாகும். உலகப்புற்றுநோய் ஆய்வுக்கழகமான ( டபிள்யூ.சி.ஆர்.எப் ) ஐ மேற்கோள்காட்டி முதலாவது செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தினரால் பேராசிரியர் ஜோர்ஜ் குன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வின் பிரகாரம் தேகப்பயிற்சியை சிறந்த முறையில் செய்யும் 15 – 18 வயதுள்ள மாணவர்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளோடு, கடந்த மூன்று மாதங்களாக வெளிவரும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் உணவில் சரியான ஒழுங்கமைப்பையும், அத்தோடு தேகப்பயிற்சியையும் சரியாக நெறிப்படுத்தினால் கண்டிப்பாக ஆரோக்கிய வாழ்வை அடையலாம் என்பதே இன்றைய ஐரோப்பாவின் முக்கிய குரலாக ஒலிப்பது தெரியவருகிறது.
உலகப் புற்றுநோய் ஆய்வுக்கழகமும், அமெரிக்கா புற்றுநோய் ஆய்வுக்கழகமும் சென்ற மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இறைச்சியை அதிகமாக உண்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 வீதம் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளன. வாராந்தம் 1.100 கிராம் இறைச்சி சாப்பிடுவோரையும் அதேபோல வாரம் 150 கிராமிற்குக் குறைவாக இறைச்சி சாப்பிடுவோரையும் ஒப்பிட்டால் 1100 கிராம் சாப்பிடுவோருக்கு 30 வீதம் அதிக ஆபத்து என்றும் தெரிவிக்கின்றன. இறைச்சியால் பெருங்குடல், சிறுகுடல் இரண்டும் தாங்கமுடியாத களைப்படைந்து புற்று நோய்க்குள் விழுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகமாக இறைச்சியை விரும்பி உண்போர் வாழும் முதலாவது நாடாக டென்மார்க் இருக்கிறது. மேலும் வருடாந்தம் 4000 டேனிஸ்காரர் பெருங்குடல் புற்றுநோய்க்கு உள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் டேனிஸ் ஆரோக்கிய வாழ்விற்கான உணவு வரையறைப் பிரிவினர் வாரந்தம் சாப்பிட வேண்டிய இறைச்சியின் அளவு எத்தனை கிராம் என்பதை இன்றுவரை துல்லியமாக வரையறை செய்யவில்லை. எனினும் வாராந்தம் 500 கிராம் இறைச்சிக்கு மேல் வேண்டாம் என்பதே பொதுவான ஆலோசனையாக உள்ளது. இறைச்சியில் இரண்டுகால் பறவைகள், காலில்லாத மீன் இவைகளின் ஊன் (சதை) நாலுகால் விலங்குகளின் இறைச்சிகளோடு ஒப்பிட்டால் சிறந்தது.

இறைச்சி உணவு என்றதும் நேரடியான இறைச்சி மட்டுமல்ல லிவர்பூஸ்ரேக் எனப்படும் ஈரல்பசை, பூல்சர், பேர்கர் என்று சகலவகை இறைச்சி உப உணவுகளும் இதற்குள் அடங்கும். அதேவேளை பெருங்குடல் மட்டுமல்ல உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும் புற்று நோய்களுக்கு இவை காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை இப்படியான ஆய்வுச் செய்திகள் இறைச்சி விற்பனைத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இறைச்சி உண்போருக்கு விரக்தியையும் உண்டு பண்ணும். ஆகவே இரு தரப்பிலும் ஓர் அமைதியை ஏற்படுத்துமுகமாக டேனிஸ் விசேட வைத்திய நிபுணர் அனா ரியோனலான்ட் இன்னொரு கருத்தையும் முன்வைத்துள்ளார். பெருங்குடல் புற்றுநோய்க்கு இறைச்சி ஒன்றுதான் காரணமாக இருப்பதாகக் கூற முடியாது என்பது அவரது ஆறுதல் செய்தியாகும்.
அடுத்து சுவீடன் ஆய்வைப் பொறுத்தவரை கடந்த 1964 முதல் 1994 வரை கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட 1.2 மில்லியன் சுவீடிஸ் இளையோரின் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்து அறிக்கையைப் பார்த்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு கடும் தேகப்பயிற்சிகள் வழங்கப்பட்ட இளையோரில் பெரும்பான்மை சிறந்த நுண்ணறிவுடையோராக மிளிர்வதாக தெரிவிக்கிறது. எனவே இளவயதில் தேகப்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு மட்டுமல்ல நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கிறது. பெற்றோர் 15 – 18 வயதுக்கிடைப்பட்ட மாணவரை பிரத்தியேக வகுப்பிற்கு அனுப்பி அறிவாளியாக்க முயல்வது மட்டும் போதியதல்ல, அதுபோல தேகப்பயிற்சிக்கும் அனுப்புவது அவசியமானது என்ற கருத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
நிறையப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஆடு பிடித்து இறைச்சியடித்து வாரத்தில் பல தடவைகள் சமைக்கும் பழக்கம் உடையோராக இருக்கிறார்கள். ஆட்டுக் கொத்துறொட்டி அடிக்கடி கடைகளில் சாப்பிட எண்ணுகிறார்கள். அதுபோல பிள்ளைகளுக்கு மக்டொனால்ஸ் உணவில் ஆர்வத்தையும் பல பெற்றோர் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயத்தை இந்த இரண்டு ஆய்வுகளும் தருகின்றன.

Monday 16 November, 2009

Michelin signs MoU with TN for tyre project near Chennai

Coming as yet another big ticket investment attracted by Tamil Nadu in the auto sector, the global tyre giant, Michelin Group, France
signed an Mou with Tamil Nadu government on Monday for setting up its tyre manufacturing plant, near Chennai.
The project with an investment of Rs 4,000 crore will come up on 290 acres at the new Sipcot complex at Thervoy Kandigai, 50 km north of Chennai in Thiruvallur district.
The MoU was signed by State industries Secretary M F Farooqui and Michelin Africa-India-Middle East President, Prashant Prabhu before the State Chief Minister, M Karunanidhi, deputy CM, M K Stalin and senior officials.
"The manufacturing facility will focus on a range of radial\bus tyres. The plant will start operations in 2012 and will focus on the growing Indian market," the company said in a statement. It will absorb 1,500 workers locally.
It is learnt the plant will produce heavy commercial vehicles tyres besides off-road heavy tyres fitted in construction equipment made by players like Komatsu, JCB, John Deere and Caterpillar.
It is also understood that the investments could touch Rs 7,000 crore once the project takes off, considering the supplier chain that would be developed.
Apparently, Michelin would use TN as the centralised facility and to achieve economies of scale, it could also consider shifting its existing plant in Maharashtra. Also, since the tyre mix has not been finalised, the plant capacity could not be ascertained.
Soon after inking the MoU, Mr Prabhu, who will be steering the newly formed, Michelin Tires India (Tamil Nadu) told ET, "We are attracted to TN both from the people and professional point of view. It has a very good manufacturing environment and offers multi-model connectivity. Besides the availability of good people and professionals, the State has a good educational system and recreational facilities".
Stating it is looking at catering to both customers (OEM market) as well as users (replacement market), he said capacity for the plant will depend on the requirements. He declined to comment on the status of Michelin’s project earlier announced in Maharashtra. But, he said the plant near Chennai will be its first greenfield project in India.

Thursday 12 November, 2009

TN clears M&M's 1800 cr auto project near Chennai

Tamil Nadu Cabinet on Thursday cleared the proposal of Mahindra & Mahindra to set up an automobile project at Cheyyar near Chennai with
an investment tag of Rs 1800 crore.
The Government has already allotted 200 acres of the total 450 acres required for the project which will have a capacity of 1.5 lakh that will primarily manufacture tractors, SUVs and commercial vehicles besides auto parts. It will have the flexiability to make cars if the company desired so. The investment will also cover a dedicated test track so that the company will have an integrated operation.
Besides this facility, M & M will utilise its existing landbank of 100 odd acres at Mahindra world city at Maraimalainagar to set up one of the world’s largest R & D and vehicle design centres. The MoU for the project is expected to be inked in about two months.
Official sources said the investment will generate direct jobs for 2500 people and several thousand jobs indirectly.
The multiplier effect of the project will mean an additional investment of over Rs 5000 crore, they said.
"By default, it would have gone to Maharashra where M & M has huge land bank. But, it is a hard won project for Tamil Nadu considering the slow down in the global market. It is expected to make it an undisputed leader in the auto space which will be difficult to be challenged by other States", the sources.
It is also a striking victory for the State considering the series of labour unrest and disputes the State had witnessed in the last couple of months.
The sources said the State has already signed MoUs and cleared projects for creating a capacity of 13.5 lakh cars per annum. "Given the global slow down, the M & M investment is a big victory for the State. It will reinforce its leadership position in the auto sector", they said.
M & M clinching the deal in TN also comes close on the heels of its strained relationship with Renault ( Over the failure of Logan car) and the three way venture between Renault-Nissan and Bajaj for the small car project finally taking shape.
M & M’s mega investment near Chennai will also herald the entry of Indian’s numero uno tractor major into the State, which already has the second largest tractor manufacturer, Tafe and Deutsche-Same.
It also signals Mahindra’s big bang return to the Detroit of India after it had exited the JV with Ford Motors which was floated to set up the greenfield project near Chennai.

Friday 6 November, 2009

கேப்டனாக கங்குலி மீண்டும் நியமனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சவுரங் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக தேவ் வாட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) 3ஆவது தொடரில் கங்குலி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு போட்டித் தொடராகும். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உரிமையாளர் ஆவார்.
ஐ.பி.எல். முதல் தொடரில் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சரியாக சோபிக்கவில்லை. இதையடுத்து 2ஆவது ஐ.பி.எல். தொடருக்கு கங்குலிக்குப் பதிலாக மெக்குல்லம் கேப்டனா நியமிக்கப்பட்டார்.
ஆனால் 2ஆவது ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வியைச் சந்தித்து.
இந்த நிலையில் ஐ.பி.எல். 3ஆவது தொடரில் கங்குலி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என இன்று அறிக்கப்பட்டுள்ளது.

Saturday 31 October, 2009

திரு‌ப்ப‌தி ஏழுமலையா‌ன் கோ‌யி‌லி‌ல் வரு‌ம் டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தே‌தி இரவு ச‌ந்‌திர ‌கிரகண‌ம் ‌நிக‌ழ்வதா‌ல், ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டு ‌பிற‌ப்‌பி‌ன்போது ‌கோ‌யி‌ல் நடை சா‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் டிச‌ம்ப‌ர் 31ஆ‌ம் தே‌தி இரவு 12 ம‌ணி‌க்கு மே‌ல் ஆங்கிலப் புத்தாண்டு‌ப் ‌பிற‌ப்பையொ‌ட்டி ஒ‌வ்வொரு கோ‌யி‌ல்க‌ளிலு‌ம் ‌சிற‌ப்பு பூஜைக‌ள் நட‌த்த‌ப்படுவது வழ‌க்க‌ம்.
அதிலும் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அன்று இரவு முதலே கோவிலுக்கு வந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆனால் வருகிற ஆங்கிலப் புத்தாண்டு அன்று இரவு ச‌ந்‌திர ‌கிரகண‌ம் ‌நிக‌ழ்வதா‌ல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும் என்று கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவிலின் தேவஸ்தான அதிகாரி கூறுகையில், `ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ச‌ந்‌திரக ‌கிரகண‌ம் வருகிறது. இதனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி மாலை 7 மணிக்கு கோவில் மூடப்படும். மறுநாள், ஜனவரி 1-ந் தேதி காலை 7 மணிக்கு‌த்தா‌ன் கோவில் திறக்கப்படும். கிரகணம் முடிந்த பிறகு ஆலயத்தை தூய்மைப்படுத்தி பரிகார பூஜைகள் முடிந்த பிறகு வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்' என தெரிவித்தார்.
எனவே இ‌ந்த ஆ‌ண்டு ஆ‌ங்‌‌கில‌ப் பு‌த்தா‌ண்டை ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் கொ‌ண்டாட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தவ‌ர்க‌ள் பெரு‌ம் ஏமா‌ற்ற‌த்‌தி‌ற்கு‌ள்ளா‌கி‌யிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

Thursday 29 October, 2009

கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு மரணம்

லண்டன், அக்.29 (டிஎன்எஸ்) - இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு அக்டோபர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.
டேவிட் ஷெப்பர்டு 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 1996, 1999, 2033ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும்.
282 முதல் தர போட்டியில் விளையாடி உள்ள ஷெப்பர்டு 1981ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Friday 9 October, 2009

ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள்து.
அணு ஆயுத பரவலை தடுக்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காகவும், உலக அமைதிக்காக பாடுபட்டு வருவதற்காகவும் 2009 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபர் பதவியை வகிக்கும் முதல் ஆப்ரிக்க - அமெரிக்கரான ஒபாமா, அணு ஆயுத ஒழிப்புக்கு குரல் கொடுத்துவருவதோடு,அமெரிக்க அதிபராக தாம் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் நின்றுபோய் இருக்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காகவும் பாடுபட்டு வருகிறார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒரு ஆண்டுக்கும் குறைவான காலக்கடத்திற்குள்ளாகவே, உலக அரங்கில் அசாதாரணமான அளவில் இராஜ்ஜிய நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், மக்களிடையே ஒத்துழைப்பு நிலவ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அமைதிக்கான நோபல் பரிசு தேர்வுக் கமிட்டி ஒபாமாவை பாராட்டியுள்ளது.

Wednesday 7 October, 2009

நோபல் பரிசை வென்ற 3வது தமிழர் வெங்கி!

சென்னை: நோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.
தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்.
1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார்.
இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு சர். சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார். இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்.
இந்தியாவில்...
இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

Tuesday 6 October, 2009

சோழவந்தான் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

மதுரை, திண்டுக்கல் இடையே உள்ள ஊர் சோழவந்தான். இங்குள்ள ரயில் நிலையத்தில், இன்று மாலை 6.05 மணிக்கு ஈரோடு - நெல்லை ரயில் வந்து நின்றது.
வந்து நின்று சில நிமிடங்களுக்குள் ரயில் நிலையத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. வெடித்த வேகத்தில் அங்கு ரயிலுக்காக காத்திருந்த 2 ஆண்கள் உடல் சிதறி பலியானார்கள். மேலும் ரயில் நிலையத்தின் மேற்கூரை நாலாபக்கமும் சிதறி நொறுங்கி விழுந்தது.
பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்ததால் ரயில் நிலையத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. ஈரோடு - நெல்லை ரயிலில் இருந்த பயணிகள், ரயிலிலிருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர்.
குண்டுவெடிப்பில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆறுமுகம் உள்பட பலர் படுகாயமடைந்தனர். அவர்களை ஆம்புலன்கள் மூலம் போலீஸார், மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரயில்வே நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததா அல்லது கிணறு தோண்ட அல்லது குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படும் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததா என்று தெரியவில்லை.
காவல்துறை தரப்பில் கூறுகையில், என்ன மாதிரியான குண்டுவெடிப்பு என்று விசாரணைக்குப் பின்னர்தான் தெரிய வரும். இருப்பினும் தீவிரவாத செயலாக இது இருக்க வாய்ப்பில்லை என்றனர்.
குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் வந்து நின்ற நெல்லை பாசஞ்சர் ரயிலில் குண்டுகள் ஏதேனும் உள்ளதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த ரயிலை நிலையத்திலிருந்து கொண்டு செல்லாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
ரயில்வே போலீஸார், உள்ளூர் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ரயில் வே மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சோழவந்தான் விரைந்துள்ளனர்.

Monday 5 October, 2009

டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்பு

டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகள், குறிப்பாக கங்கையின் ஆரோக்கியத்திற்கு டால்பின்களின் சேவை மிகப் பெரியது.
இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
டால்பினை தேசிய நீர் விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பீகார் முதல்வர் நிதீஷ் குமார்தான் முன்வைத்தார். அவரது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது என்றார்.

Friday 2 October, 2009

டோங்காவில் மீண்டும் நிலநடுக்கம்-சுனாமி பலி 189 ஆக உயர்வு

சமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.
சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலி யாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

Wednesday 30 September, 2009

தேக்கடி படகு கவிழ்ந்ததில் பலியானோர் 38

கேரள மாநிலம் தேக்கடியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 38 பேரின் உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை படகுகளில் ஏற்றிச் சென்று, அங்கு நீரருந்த வரும் யானைகள் உள்ளிட்ட விலங்குளை காட்டுவர். இந்தப் படகுகளை கேரள மாநில சுற்றுலாத் துறை இயக்கிவருகிறது.
அப்படி சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று இன்று மதியம் கவிழ்ந்தது. இதில் இருந்த 76 சுற்றுலாப் பயணிகள் நீரில் முழ்கினர். தேக்கடியில் நடுப்பகுதியில் இது நடந்ததால் விபத்து விவரம் தெரிவதற்கே கால தாமதமாகியுள்ளது. விவரம் கிடைத்ததும் மீட்புப் பணிகள் துவங்கியது.
இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 38 உடல்கள் இரவு 8.00 மணி வரை மீட்கப்பட்டுள்ளன. நீரில் தத்தளித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரும் ஒருவர். இவர் தனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்ததாக கதறிக் கொண்டு கூறியுள்ளார்.
தற்பொழுது அப்பகுதியில் மழை பொழியத் துவங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப் படகில் 50 பேர் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், ஆனால் விபத்திற்குள்ளான படகில் மிக அதிகமாக 76 பேர் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அதனால்தான் படகு கவிழ்ந்தது என்றும் செய்திகள் கூறுகின்றன.

Tuesday 29 September, 2009

ஆர்த்தி-மாஸ்டர் கணேஷ் அக். 23ல் குருவாயூரில் திருமணம்

சி‌னிமா ம‌ற்று‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் நகைச்சுவை பா‌த்‌திர‌ம் ஏ‌ற்று நடி‌க்கு‌ம் நடிகை ஆர்த்தியும் நடிகர் மாஸ்டர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் திருமணம் அக்டோபர் 23-ந் தேதி குருவாயூ‌ர் கோவிலில் நடக்கிறது.
ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் ப‌ல்வேறு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் மாஸ்டர் கணேசுக்கும் காதல் ஏ‌ற்ப‌ட்டு அது ‌திரு‌மண‌த்‌தி‌ல் முடி‌கிறது.
இவ‌ர்களது காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட இருவரது பெ‌ற்றோ‌ர்க‌ள் கல‌ந்து பே‌சி அக்டோபர் 23-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் ‌திருமண‌த்தை நட‌த்த முடிவெடு‌த்து‌ள்ளன‌ர். மணமக்க‌ள் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. மணமகள் ஆர்த்தி நடித்து கொண்டே ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். இதுவரை 3 முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கிறார்.
த‌ங்களது காத‌ல் ‌திருமண‌ம் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆ‌ர்‌த்‌தி, நானு‌ம் கணேசு‌‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் இணை‌ந்து ப‌ணியா‌ற்று‌கிறோ‌ம். எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம், தங்கவேலு-சரோஜா ஜோடிகளை போல் நானும் கணேசும் சிறந்த நகைச்சுவை ஜோடியாக திரையுலகில் வாழ்ந்து காட்டுவோம் எ‌ன்று நடிகை ஆர்த்தி கூறினார்.

Friday 25 September, 2009

குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட் - ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

செப்டம்பர் 24,இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை போர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார்.
இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75 சதவீதம் குட்டி கார்கள் என்பதால் சூசுகி, டாடாவுக்கு போட்டியாக போர்டும் பிகோ கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் சென்னை போர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
போர்டு நிறுவனம் 1996ம் ஆண்டில் சென்னை மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இதில் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தத் தொழிற்சாலையை ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவவும் போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது.
இதனால் சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவுள்து.
இதன்மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் , இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

Monday 21 September, 2009

ஐநா சபைக்கூட்டத்தில் இந்திய சிறுமி உரை

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் முன்னிலையில், சுற்றுச் சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவின் லக்னோ நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்று உரையாற்ற இருக்கிறாள்.
யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா என்ற அந்த சிறுமி, லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள.
ஐக்கிய நாடு சபையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக "புவி வெப்பமடைதல்" குறித்து பேச உள்ளாள் இந்த சிறுமி.
இந்த கூட்டத்துக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.இந்தியா சார்பில் அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறாள் யுக்ரத்னா.
ஐ.நா.வில் உரையாற்ற உள்ளது குறித்து சிறுமி யுக்ரத்னா கூறுகையில்," ஒபாமாவிடம் உங்களின் கொள்கைகள் எங்களை பாதிக்கலாம். நீங்கள் இப்போதே சரியான முடிவை எடுத்தால் எங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் " என தாம் கூற இருப்பதாக தெரிவித்தாள்.

Thursday 17 September, 2009

எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் ரூ.250: ஜிப்மரில் தொடரும் பாரம்பரிய பெருமை

புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 250 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
1964-லிருந்து இக் கட்டணத்தை ஜிப்மர் நிர்வாகம் மாற்றாமல் உள்ளது. மேலும் நூலகம், விளையாட்டு, வளர்ச்சி நிதி போன்ற வகையில் ரூ. 3,906 மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஆயிரம் ரூபாய் மாணவர்கள் படிப்பை முடித்துச் செல்லும்போது திரும்ப வழங்கப்படுகிறது.
சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்கூட எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 முதல் 1000 வரை வசூலிக்கப்படுகிறது. நன்கொடை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நம் நாட்டில் இப்படியொரு கல்வி நிறுவனம் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ஜிப்மரில் பணியாற்றும், நோய் தடுப்பு மற்றும் சமூகவியல் மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் பாலசுதர்சனன் கூறுகையில், ""ஜிப்மரில் நானும் ரூ.250 கொடுத்துதான் படித்தேன். இப்போது என்னிடம் படிக்கும் மாணவர்களும் ரூ. 250தான் கொடுத்து படிக்கின்றனர்'' என்றார்.
நாட்டிலேயே புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவக் கல்லூரியிலும்தான் இந்த அளவுக்கு குறைவான படிப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஜிப்மர் டீன் கே.எஸ். ரெட்டி கூறினார்.
""இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன. தில்லியில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மத்திய அரசின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரியில் படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது'' என்றார்.
புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவை அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன. இதில் 4 கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாறிவிட்டன. இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை. அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணயக் குழு மீதியுள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மட்டும் பரிந்துரை செய்ய முடியும். இக் கல்லூரிகளிலும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்புக் கட்டணம் ரூ. 1.5 லட்சம் முதல் 1.75 வரை வசூலிக்க கட்டண நிர்ணய குழு அனுமதி அளித்துள்ளது. அதைத் தவிர கூடுதல் கட்டணமாக ரூ.35 ஆயிரம் முதல் ரூ.53 ஆயிரம் வரை வசூல் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரியில் மருத்துவக் கல்விக்காக அதிகம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. குறைந்தக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரியும் இருக்கிறது. ஆனால் புதுச்சேரி அரசுக்கென்று இதுவரை சொந்த மருத்துவக் கல்லூரி கிடையாது. இதற்காக தொடங்கப்பட்ட கட்டடப் பணி பாதியில் நிற்கிறது.

Wednesday 16 September, 2009

தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்

சென்னை, செப்.16- பிரபல தமிழ்ப் பேச்சாளர் தென்கச்சி சுவாமிநாதன் (63) இன்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
தென்கச்சி சுவாமிநாதன் அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். நல்ல கருத்துக்களை நகைச்சுவையான பாணியில் அவர் கூறி வந்தது அவருக்கு ஏராளமான வானொலி நேயர்களைப் பெற்றுத் தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வந்தார்.
இவர் சிறுகதைகளும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஆதரவாளர்களாலும் நேயர்களாலும் இவர் தென்கச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார்.

Saturday 12 September, 2009

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் போலோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
இந்தியா கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும்.
போட்டித் தொடக்க விழாவில் இசை ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.

Monday 24 August, 2009

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 197 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எட்ட முடியாத 546 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (40), காடிச்(43) சிறப்பான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்களுக்கு உருவானது. ஆனால், பாண்டிங் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிளின்டாப்பினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையடுத்து போட்டி தலைகீழாக மாறிபோனது. அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள். வருவதும் உடனே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். மனம் தளராமல் போராடிய ஹசி சதம் கடந்து அவுட்டானார். அவர் 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடு்ததார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது.
197 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கப்பட்டது.

ஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர்கள், பால்வளத்துறையின் ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பசும்பால் தற்போது லிட்டர் 13 ரூபாய் 54 காசு என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இனி இது 15 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்யப்படும். அதேபோல எருமை பால் 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி இது 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.பாலை கொள்முதல் செய்யும் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விற்பனை விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டையின் விலை உயர்த்தப்படுகிறது.அட்டைக்கு 15 ரூபாய் 75 காசு என்ற விலைக்கு வழங்கப்பட்ட ஒரு லிட்டர் பால் இனி 17 ரூபாய் 75 காசுக்கு விற்கப்படும். இதன்மூலம் இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.

Tuesday 18 August, 2009

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்

ஆக.18- டுனிசியா நாட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள் உருவாகியுள்ளன.
ஆசிரியையாக பணிபுரியும் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் 'பொறுப்பற்றதாக உள்ளது' என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர். இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.
தனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Monday 17 August, 2009

ரோஜர்ஸ் கோப்பை - பூபதி ஜோடி சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் ஏடிபி அந்தஸ்து பெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது.
இதில் பூபதி ஜோடி புயல்வேக சர்வீஸ்களால் எதிர் ஜோடியை திணறச் செய்தது. ஆட்டம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய பூபதி ஜோடி முதல் செட்டை 6-4 என வென்றது. இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்த ஜோடி, அதை 6-3 என்றது.
இறுதியில் சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பூபதி ஜோடி 6-4, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
இது பூபதி கைப்பற்றும் ஐந்தாவது ரோஜர்ஸ் கோப்பை இரட்டையர் பட்டமாகும். முன்னதாக பூபதி, லியாண்டர் பயசுடன் 1997 மற்றும் 2004லிலும், மேக்ஸ் மிரின்யியுடன் 2003லும், பாவெல் விஸ்னருடன் 2007லும் ஜோடி சேர்ந்து இங்கு பட்டம் வென்றுள்ளார்.

Sunday 16 August, 2009

2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவிப்பு

இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் டிராவிட் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கிறது.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம், தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 'இந்திய சுவர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2007 அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டிராவிட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
அதே போல் கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பங்கேற்காத சச்சின், ரெய்னா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக யுவராஜூம் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மேலும், சில நாட்களில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.

Saturday 15 August, 2009

பொக்கிஷம் - விமர்சனம்

Movie - Pokkisham, Director - Cheran
Producer - Hitesh Jabak, Music - Sabesh Murali,
Cast - Cheran, Padmapriya, Vijayakumar
Rate -
தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.
லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.
காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.
எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.
ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.
தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.
காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!.

அமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் 2 மணி நேரம் விசாரணை

ஆக.15- அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகர் ஷாருக் கானிடம் விமான நிலையத்தில் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அங்கு ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு நடிகர் ஷாருக் கானை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். இதையடுத்து அமெரிக்கா சென்ற அவர் நேற்றிரவு நியூஜெர்சியில் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை நெவார்க் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாருக், ""என்னை அடுத்தகட்ட விசாரணைக்காக விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டாம் நிலை விசாரணைக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். என்னிடம் தொலைபேசி எண்கள், ஓட்டல் அறை எண் போன்ற மிகச் சாதாரண கேள்விகளையும் கேட்டார்கள். இது எனக்கு கூச்சமாகவும் வருத்தமளிப்பதாகவும் இருந்தது. எனது பாதுகாவலர்களுக்கு விசா வழங்கப்படாத நிலையில் தனியாக வந்த என்னிடம் விசாரணை நடத்தியபோது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். எனினும், எனது குடும்பத்தினர் என்னுடன் வராமல் இருந்தது சற்று ஆறுதலானது. அமெரிக்காவுக்கு வருவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமாக இருக்கிறது'' என்று கூறினார்.
தான் ஒரு இந்திய நடிகர் என்று ஷாருக் கூறியதை அமெரிக்க அதிகாரிகள் பொருட்படுத்தாமல் விதிமுறைகளை பின்பற்றுகிறோம் என்று அவரிடம் தெரிவித்துவிட்டு விசாரணையை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் அவரது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் தொடர்புகொள்ளவும் அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எனினும், தான் தடுத்து நிறுத்தப்பட்டவுடன் மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருக்கும் செயலாளருக்கும் செல்போன் மூலம் அவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஷாருக் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரிடம் கேட்டபோது, ''என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். நடிகரும் சர்வதேச பிரமுகருமான நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவில் மிகவும் வரவேற்கப்படும் விருந்தினர் ஆவார். ஏராளமான அமெரிக்கர்கள் அவரது திரைப்படங்களை விரும்புகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

Thursday 13 August, 2009

சென்னையில் 17 பேருக்கு ஸ்வைன் - தமிழகத்தில் 57 பேர்

சென்னை: சென்னை தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இதுவரை 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்த்பபட்ட மருத்துவ பரிசோதனையில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற பத்து பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக டாக்டர்கள் காத்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அந்த மாணவன் 4-ம் வகுப்பு படிக்கிறான். இந்த பள்ளியில் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday 10 August, 2009

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் மரணம்

ஆக. 10: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் சஞ்சய் உயிரிழந்தார்.
யு.கே.ஜி. படித்து வந்த அந்தச் சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டை வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான்.
சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவனது ரத்த மாதிரி சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. பன்றிக் காய்ச்சல் இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதியானது.
பன்றிக் காய்ச்சல் காரணமாக சிறுவனின் கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மயக்க நிலை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து வேளச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவன் படித்த பள்ளி மாணவர்களின் அனைவரது வீடுகளுக்கும் மருத்துவர்கள் சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவனின் பலியை அடுத்து பன்றிக் காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Sunday 9 August, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

Movie - Sindhanai Sei
Director - Yuvan
Music - Thaman.
Cast - Yuvan, Bala, Seshanth, Nithish Kumar, Sabi, Madhu Sharma, Dharsha
Rate -

யுவன், நித்திஷ், பாலா, செஷாந்த், சபி ஆகிய ஐவரும் மேற்படி நடு பெஞ்ச் மாணவர்களாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து பெரியவர்களானவர்கள். சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைப்பு நடத்தும் ஐவரும் ஒரு கட்டத்தில் மொத்தமாக கொள்ளையடித்து பெரிதாக செட்டிலாக திட்டமிடுகின்றனர். அதன்படி ஒரு பெரிய வங்கியில் ஐந்து கோடி கொள்ளையடிக்கும் ஐவரும், பணத்தாசையில் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்துக் கட்ட முயன்று, அதில் யார் வெற்றி பெறுகின்றனர், அப்படி வெற்றி பெறுபவர் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்பது சிந்தனை செய் படத்தின் சிந்தனை செய்ய வேண்டிய மீதிக்கதை! இதனூடே யுவன் - மதுசர்மாவின் காதல் கல்யாண கலாட்டாக்களையும் கலந்து கட்டி பிரமாதமாக கதை சொல்லி இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதல் நாயகனாக நடித்தும் இருக்கும் ஆர்.யுவன்.
ஐந்து நாயகர்கள், நாயகி மதுசர்மா மாதிரியே காதல் தண்டபாணி, மயில்சாமி, கோட்டை குமார், அண்ணாத்துரை கண்ணதாசன், சபியின் மனைவியாக வரும் தர்ஷா உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு.
டூ வீலரில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவரிடமும், காரில் காதலியுடன் வந்து மாட்டுபரிடமும் இந்த நடந்து கொள்ளும் முறையிலேயே இவர்களது குணாதிசயங்களை புட்டு புட்டு வைத்து விடும் இயக்குனர், இறுதியில் இப்படி ஒரு கொள்ளையையும், இத்தனை கொலைகளையும் யுவன் செய்வதற்காக கூறும் காரணத்தையும், அதன்பின் அவனுக்கு நிகழும் கொடூரத்தையும் மிக அழகாக படம் பிடித்து முன்னணி இளம் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விடுகிறார் யுவன். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து தர பெரிதும் ஒத்துழைக்கின்றனர் இசையமைப்பாளர் தமன்.எஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீபவன் சேகர், படத்தொகுப்பாளர் கே.தணிகாச்சலம் உள்ளிட்ட அனைவரும்.
இப்படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவராலும் சிந்தனை செய் ஒவ்வொரு ரசிகனின் சிந்தனையையும் தூண்டச் செய்யும் படமாகும்.

Saturday 8 August, 2009

Prakash Raj Marries Mahila Rajyam Chief Shobha Rani

A Telugu news channel turned out to be a reason behind flutter at Kollywood and Tollywood after it carried non-stop reports that Prakash Raj has married Shobha Rani, the chief of Mahila Rajyam.
Other reports also claimed that, Shobha Rani, being a censor board member, had known the actor and that she had even distributed a couple of his flicks which bombed at the box office.
Meanwhile, circles close to the actor and the woman politician denied the reports and dubbed them as mere rumours.

Elesh Parujanwala is the Rakhi Sawant Ka Swayamvar Winner

Rakhi Sawant choosing Toronto-based Elesh Parujanwala as her life partner in NDTV Imagine’s Rakhi ka Swayamvar.
The show had started with 16 contestants and after 26 episodes there were three remaining men standing.
At the finale held at the Hotel Leela Kampinsky in Mumbai, Rakhi looked the perfect bride dressed in a red and gold lehenga-choli designed by Neeta Lulla. The prospective grooms were dressed in traditional sherwanis and turbans; in fact all that was missing were the saat phere.
With the audience cheering and clapping, Rakhi garlanded Elesh, thereby signaling her decision to become engaged to him. The happy couple exchanged vows of commitment and rings as well as romantically saying ‘I love you’ to one another.
In making her choice Rakhi said, "I have been watching Elesh from day one. On and off the camera, he has been the same and has really taken care of me. He is everything I was looking for and I am glad to have found him on the Swayamvar. The swayamvar means finding a jeevan saathi and I have found Elesh."
"Today is our engagement. I am ready to get married now, but we need to understand each other better off camera. We will soon get married in front of all of you in keeping with all our traditions," Rakhi said after announcing her choice to a waiting audience across the country.

Friday 7 August, 2009

Malayalam Actor Murali Died at 55!

Aug 8: Murali one of the leading Malayalam actor died at 55 years at a hospital in Thiruvanathapuram. According to actor Murali’s close family sources that actor was suffered from diabetics and was under treatment for years but the situation goes serious this evening.
Actor Murali was popular in cine industry with his versatile acting and he was awarded as a best actor in 2002 for the movieNeythukaran“.
Actor Murali begins his careerin Malayalam industry but with his multitalented acting he appeared in other languages like Tamil as well. More than this he was also the Chairman of the Kerala Sangeeth Natak Academy.
He was survived by his wife and a daughter. All of us Hearty condolences to the great artist. May his Soul Rest in Peace.

செல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டார்

ஆக.7: செல்வராசா பத்மநாபன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அவர் விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பத்மநாதன் தற்போது இலங்கையில் உள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்புகள் குறித்து விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என தம்மை அறிவித்துக்கொண்ட 54 வயதான பத்மநாதன் இலங்கைக்கு நேற்று நள்ளிரவு பாங்காக் வழியாகக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 'கேபி' எனப் பலராலும் அழைக்கப்பட்ட பத்மநாதன் சர்வதேச போலீசின் தேடுதல் பட்டியலில் இருந்தவர்.
விடுதலைப்புலிகளை ராணுவம் முற்றிலுமாக நெருங்கியபிறகு, அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார். பிரபாகரன் இறந்ததை புலிகள் தரப்பில் பத்மநாதன்தான் முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவித்துக்கொண்டார்.
முன்னதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எனினும் தாய்லாந்து அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பத்மநாதன் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு பாங்காக் வழியாக கொழும்பு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
தமிழர் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday 6 August, 2009

2003 Mumbai blasts accused get death sentence

August 6: A special POTA court in Mumbai has awarded death sentence to the three accused held guilty last week for the 2003 blasts that killed over 50 people.
This is the first time a husband and wife have been held guilty of terror activities in the country.
The court had held them guilty of conspiracy, murder and also under the prevention of terrorism act or POTA. This has been the biggest blasts case after the 1993 serial blasts trial and took six years to complete.
The special POTA judge M R Puranik had convicted Ashrat Ansari (32), Hanif Sayed Anees (46) and his wife Fehmida Sayed (43) last week for their role in carrying out the blasts in which 52 people were killed and 100 injured.
The convicts were also involved in placing an unexploded bomb in a bus at suburban SEEPZ on December 2, 2002, and another explosive device in a bus at Ghatkopar on July 28, 2003 in which two persons were killed due to the explosion.

Wednesday 5 August, 2009

Somdev Devvarman beats Marin Cilic

Aug 5: Somdev Devvarman registered the biggest win of his fledgling career when the wiry Indian upstaged sixth seeded Marin Cilic in straight sets in the second round of the USD 1.4 million Legg Mason Tennis Classic in Washington.
The Indian qualifier, who lost to Cilic in his maiden ATP final in the Chennai Open earlier this year, took one hour and 42 minutes to sent the Croatian packing 7-5, 6-4 to reach the third round where he would meet either the big-hitting Croatian Ivo Karlovic or German Raine Scheuttler.
"It's definitely the biggest win of my career. He's a great player. He's in top 15 already and on his way to the top 10," Somdev gushed after the win.
"All along I played well. My plan was to compete as hard as possible. I took my chance and I'm proud of the result," said Somdev who saved five of the seven break points that his opponent had.
Cilic had ended Somdev's dream run in January in Chennai, where the 24-year-old had reached his first ATP final with wins over players like Carlos Moya and Ivo Karlovic.
Somdev said he did not have any butterflies in the stomach in the second round match and neither was he out to settle an old score. "It wasn't my first Tour final tonight so I wasn't as nervous going out," said the 153rd-ranked Indian.

Sunday 2 August, 2009

BMW catches fire in Ahmedabad; four die

August 1, 2009 In a tragic accident in Ahemdabad, four people were burnt to death as the BMW they were travelling in, caught fire.
The four people, reportedly all mechanics of BMW, had taken a new car for a test drive when it caught fire after ramming into a trailer.
It appears the car's central locking system failed and all four got trapped inside the car. Three hours of operation by a large team of fire officials finally managed to take out the charred remains of the four people.
Sources said the four occupant of the car were employees of Parsoli Motors, the BMW dealership in the city. They were on a test drive of the vehicle, which had come to Parsoli’s workshop for repairs and service.
Police said the accident took place around 6.30 pm near Ognaj. The four occupants could not escape and got burnt to death as the car doors got locked automatically and had jammed.
BMW officials say that they have never heard of any BMW go up in flames like this.

Saturday 1 August, 2009

Honda recalls 440,000 cars for airbag risk

DETROIT: Honda Motor Co said on Friday that it is recalling another 440,000 vehicles - including some of its best-selling Accord and Civic models - for a potentially lethal airbag defect.
Honda said that the airbag inflators in some of its top-selling sedans can rupture because of too much air pressure causing metal fragments to shoot through the airbag and strike vehicle occupants.
One fatality and a number of injuries have been linked to the defect, Honda spokesman Sage Marie said.
The recall covers certain 2001 and 2002 Accords, 2001 Civics and some 2002 and 2003 model Acura TL sedans. The driver's side airbag is the defective component on the affected vehicles. Honda said owners of those models can check to see if their vehicle is covered by the recall by checking the automaker's website at www.owners.honda.com/recalls.
The Japanese automaker said it was encouraging owners to wait until they received a recall notice to go to a dealership and have the inflator for the steering-wheel airbag replaced.
Honda had originally announced that it would recall some 2001 Accord and Civic sedans for the defect last November. The notice issued on Friday added another 440,000 vehicles to the recall.

Wednesday 29 July, 2009

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்

ஜூலை.29: சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் இன்று அதிகாலை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 58.

ராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.


ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.