Monday 24 August, 2009

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 197 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எட்ட முடியாத 546 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (40), காடிச்(43) சிறப்பான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்களுக்கு உருவானது. ஆனால், பாண்டிங் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிளின்டாப்பினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையடுத்து போட்டி தலைகீழாக மாறிபோனது. அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள். வருவதும் உடனே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். மனம் தளராமல் போராடிய ஹசி சதம் கடந்து அவுட்டானார். அவர் 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடு்ததார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது.
197 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கப்பட்டது.

ஆவின் பால் விலை ரூ. 2.50 உயர்வு

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் விற்கப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ.2.50 உயர்த்தப்படுகிறது.
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந் நிலையில் இன்று பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன்,, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர்கள், பால்வளத்துறையின் ஆணையர், ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
பசும்பால் தற்போது லிட்டர் 13 ரூபாய் 54 காசு என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இனி இது 15 ரூபாய் 54 காசுக்கு கொள்முதல் செய்யப்படும். அதேபோல எருமை பால் 18 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இனி இது 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும்.
இந்த கொள்முதல் விலை உயர்வு அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.பாலை கொள்முதல் செய்யும் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விற்பனை விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆவின் மாதாந்திர பால் அட்டையின் விலை உயர்த்தப்படுகிறது.அட்டைக்கு 15 ரூபாய் 75 காசு என்ற விலைக்கு வழங்கப்பட்ட ஒரு லிட்டர் பால் இனி 17 ரூபாய் 75 காசுக்கு விற்கப்படும். இதன்மூலம் இந்தப் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்கிறது.

Tuesday 18 August, 2009

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள்

ஆக.18- டுனிசியா நாட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் 12 குழந்தைகள் உருவாகியுள்ளன.
ஆசிரியையாக பணிபுரியும் அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மூலம் அவர் 12 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இதில், 6 ஆண் குழந்தைகள், 6 பெண் குழந்தைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறக்கவுள்ள மகிழ்ச்சியில் அந்தத் தம்பதியினர் உள்ளனர். எனினும், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் செயல் 'பொறுப்பற்றதாக உள்ளது' என்று ஏனைய செயற்கைக் கருவூட்டல் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணிற்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுளளனர். இதே கருத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் சைமன் பிஃஷர் கூறியுள்ளார்.
தனது மனைவி சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்வார் என்று அவரது கணவர் கூறியுள்ளார். எனினும், இது சாத்தியமில்லாதது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Monday 17 August, 2009

ரோஜர்ஸ் கோப்பை - பூபதி ஜோடி சாம்பியன்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கனடாவின் மான்ட்ரியல் நகரில் ஏடிபி அந்தஸ்து பெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியுடன் மோதியது.
இதில் பூபதி ஜோடி புயல்வேக சர்வீஸ்களால் எதிர் ஜோடியை திணறச் செய்தது. ஆட்டம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய பூபதி ஜோடி முதல் செட்டை 6-4 என வென்றது. இரண்டாவது செட்டிலும் அசத்திய இந்த ஜோடி, அதை 6-3 என்றது.
இறுதியில் சுமார் ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பூபதி ஜோடி 6-4, 6-3 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
இது பூபதி கைப்பற்றும் ஐந்தாவது ரோஜர்ஸ் கோப்பை இரட்டையர் பட்டமாகும். முன்னதாக பூபதி, லியாண்டர் பயசுடன் 1997 மற்றும் 2004லிலும், மேக்ஸ் மிரின்யியுடன் 2003லும், பாவெல் விஸ்னருடன் 2007லும் ஜோடி சேர்ந்து இங்கு பட்டம் வென்றுள்ளார்.

Sunday 16 August, 2009

2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவிப்பு

இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் டிராவிட் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கிறது.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம், தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 'இந்திய சுவர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2007 அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டிராவிட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
அதே போல் கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பங்கேற்காத சச்சின், ரெய்னா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக யுவராஜூம் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மேலும், சில நாட்களில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.

Saturday 15 August, 2009

பொக்கிஷம் - விமர்சனம்

Movie - Pokkisham, Director - Cheran
Producer - Hitesh Jabak, Music - Sabesh Murali,
Cast - Cheran, Padmapriya, Vijayakumar
Rate -
தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.
லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.
காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.
எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.
ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.
தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.
காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!.

அமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் 2 மணி நேரம் விசாரணை

ஆக.15- அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற நடிகர் ஷாருக் கானிடம் விமான நிலையத்தில் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அங்கு ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு நடிகர் ஷாருக் கானை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். இதையடுத்து அமெரிக்கா சென்ற அவர் நேற்றிரவு நியூஜெர்சியில் அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று அதிகாலை நெவார்க் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஷாருக், ""என்னை அடுத்தகட்ட விசாரணைக்காக விமான நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டாம் நிலை விசாரணைக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். என்னிடம் தொலைபேசி எண்கள், ஓட்டல் அறை எண் போன்ற மிகச் சாதாரண கேள்விகளையும் கேட்டார்கள். இது எனக்கு கூச்சமாகவும் வருத்தமளிப்பதாகவும் இருந்தது. எனது பாதுகாவலர்களுக்கு விசா வழங்கப்படாத நிலையில் தனியாக வந்த என்னிடம் விசாரணை நடத்தியபோது மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். எனினும், எனது குடும்பத்தினர் என்னுடன் வராமல் இருந்தது சற்று ஆறுதலானது. அமெரிக்காவுக்கு வருவதற்கு எனக்கு எப்போதும் தயக்கமாக இருக்கிறது'' என்று கூறினார்.
தான் ஒரு இந்திய நடிகர் என்று ஷாருக் கூறியதை அமெரிக்க அதிகாரிகள் பொருட்படுத்தாமல் விதிமுறைகளை பின்பற்றுகிறோம் என்று அவரிடம் தெரிவித்துவிட்டு விசாரணையை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் அவரது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் தொடர்புகொள்ளவும் அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
எனினும், தான் தடுத்து நிறுத்தப்பட்டவுடன் மும்பையில் உள்ள தனது குடும்பத்தினருக்கும் செயலாளருக்கும் செல்போன் மூலம் அவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், 2 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஷாருக் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரிடம் கேட்டபோது, ''என்ன நடந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். நடிகரும் சர்வதேச பிரமுகருமான நடிகர் ஷாருக் கான் அமெரிக்காவில் மிகவும் வரவேற்கப்படும் விருந்தினர் ஆவார். ஏராளமான அமெரிக்கர்கள் அவரது திரைப்படங்களை விரும்புகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

Thursday 13 August, 2009

சென்னையில் 17 பேருக்கு ஸ்வைன் - தமிழகத்தில் 57 பேர்

சென்னை: சென்னை தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் இதுவரை 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளவர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது 27 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடத்த்பபட்ட மருத்துவ பரிசோதனையில் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.மற்ற பத்து பேரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகளுக்காக டாக்டர்கள் காத்துள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் அந்த மாணவன் 4-ம் வகுப்பு படிக்கிறான். இந்த பள்ளியில் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியாட்களின் குழந்தைகள் படிக்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 57 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Monday 10 August, 2009

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் மரணம்

ஆக. 10: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் சஞ்சய் உயிரிழந்தார்.
யு.கே.ஜி. படித்து வந்த அந்தச் சிறுவனுக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டை வலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டான்.
சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவனது ரத்த மாதிரி சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி மையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. பன்றிக் காய்ச்சல் இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதியானது.
பன்றிக் காய்ச்சல் காரணமாக சிறுவனின் கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மயக்க நிலை ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். இதையடுத்து வேளச்சேரியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. உயிரிழந்த சிறுவன் படித்த பள்ளி மாணவர்களின் அனைவரது வீடுகளுக்கும் மருத்துவர்கள் சென்று பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுவனின் பலியை அடுத்து பன்றிக் காய்ச்சலால் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Sunday 9 August, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

Movie - Sindhanai Sei
Director - Yuvan
Music - Thaman.
Cast - Yuvan, Bala, Seshanth, Nithish Kumar, Sabi, Madhu Sharma, Dharsha
Rate -

யுவன், நித்திஷ், பாலா, செஷாந்த், சபி ஆகிய ஐவரும் மேற்படி நடு பெஞ்ச் மாணவர்களாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து பெரியவர்களானவர்கள். சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைப்பு நடத்தும் ஐவரும் ஒரு கட்டத்தில் மொத்தமாக கொள்ளையடித்து பெரிதாக செட்டிலாக திட்டமிடுகின்றனர். அதன்படி ஒரு பெரிய வங்கியில் ஐந்து கோடி கொள்ளையடிக்கும் ஐவரும், பணத்தாசையில் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்துக் கட்ட முயன்று, அதில் யார் வெற்றி பெறுகின்றனர், அப்படி வெற்றி பெறுபவர் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்பது சிந்தனை செய் படத்தின் சிந்தனை செய்ய வேண்டிய மீதிக்கதை! இதனூடே யுவன் - மதுசர்மாவின் காதல் கல்யாண கலாட்டாக்களையும் கலந்து கட்டி பிரமாதமாக கதை சொல்லி இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதல் நாயகனாக நடித்தும் இருக்கும் ஆர்.யுவன்.
ஐந்து நாயகர்கள், நாயகி மதுசர்மா மாதிரியே காதல் தண்டபாணி, மயில்சாமி, கோட்டை குமார், அண்ணாத்துரை கண்ணதாசன், சபியின் மனைவியாக வரும் தர்ஷா உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு.
டூ வீலரில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவரிடமும், காரில் காதலியுடன் வந்து மாட்டுபரிடமும் இந்த நடந்து கொள்ளும் முறையிலேயே இவர்களது குணாதிசயங்களை புட்டு புட்டு வைத்து விடும் இயக்குனர், இறுதியில் இப்படி ஒரு கொள்ளையையும், இத்தனை கொலைகளையும் யுவன் செய்வதற்காக கூறும் காரணத்தையும், அதன்பின் அவனுக்கு நிகழும் கொடூரத்தையும் மிக அழகாக படம் பிடித்து முன்னணி இளம் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விடுகிறார் யுவன். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து தர பெரிதும் ஒத்துழைக்கின்றனர் இசையமைப்பாளர் தமன்.எஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீபவன் சேகர், படத்தொகுப்பாளர் கே.தணிகாச்சலம் உள்ளிட்ட அனைவரும்.
இப்படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவராலும் சிந்தனை செய் ஒவ்வொரு ரசிகனின் சிந்தனையையும் தூண்டச் செய்யும் படமாகும்.

Saturday 8 August, 2009

Prakash Raj Marries Mahila Rajyam Chief Shobha Rani

A Telugu news channel turned out to be a reason behind flutter at Kollywood and Tollywood after it carried non-stop reports that Prakash Raj has married Shobha Rani, the chief of Mahila Rajyam.
Other reports also claimed that, Shobha Rani, being a censor board member, had known the actor and that she had even distributed a couple of his flicks which bombed at the box office.
Meanwhile, circles close to the actor and the woman politician denied the reports and dubbed them as mere rumours.

Elesh Parujanwala is the Rakhi Sawant Ka Swayamvar Winner

Rakhi Sawant choosing Toronto-based Elesh Parujanwala as her life partner in NDTV Imagine’s Rakhi ka Swayamvar.
The show had started with 16 contestants and after 26 episodes there were three remaining men standing.
At the finale held at the Hotel Leela Kampinsky in Mumbai, Rakhi looked the perfect bride dressed in a red and gold lehenga-choli designed by Neeta Lulla. The prospective grooms were dressed in traditional sherwanis and turbans; in fact all that was missing were the saat phere.
With the audience cheering and clapping, Rakhi garlanded Elesh, thereby signaling her decision to become engaged to him. The happy couple exchanged vows of commitment and rings as well as romantically saying ‘I love you’ to one another.
In making her choice Rakhi said, "I have been watching Elesh from day one. On and off the camera, he has been the same and has really taken care of me. He is everything I was looking for and I am glad to have found him on the Swayamvar. The swayamvar means finding a jeevan saathi and I have found Elesh."
"Today is our engagement. I am ready to get married now, but we need to understand each other better off camera. We will soon get married in front of all of you in keeping with all our traditions," Rakhi said after announcing her choice to a waiting audience across the country.

Friday 7 August, 2009

Malayalam Actor Murali Died at 55!

Aug 8: Murali one of the leading Malayalam actor died at 55 years at a hospital in Thiruvanathapuram. According to actor Murali’s close family sources that actor was suffered from diabetics and was under treatment for years but the situation goes serious this evening.
Actor Murali was popular in cine industry with his versatile acting and he was awarded as a best actor in 2002 for the movieNeythukaran“.
Actor Murali begins his careerin Malayalam industry but with his multitalented acting he appeared in other languages like Tamil as well. More than this he was also the Chairman of the Kerala Sangeeth Natak Academy.
He was survived by his wife and a daughter. All of us Hearty condolences to the great artist. May his Soul Rest in Peace.

செல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டார்

ஆக.7: செல்வராசா பத்மநாபன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அவர் விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பத்மநாதன் தற்போது இலங்கையில் உள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்புகள் குறித்து விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என தம்மை அறிவித்துக்கொண்ட 54 வயதான பத்மநாதன் இலங்கைக்கு நேற்று நள்ளிரவு பாங்காக் வழியாகக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 'கேபி' எனப் பலராலும் அழைக்கப்பட்ட பத்மநாதன் சர்வதேச போலீசின் தேடுதல் பட்டியலில் இருந்தவர்.
விடுதலைப்புலிகளை ராணுவம் முற்றிலுமாக நெருங்கியபிறகு, அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார். பிரபாகரன் இறந்ததை புலிகள் தரப்பில் பத்மநாதன்தான் முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவித்துக்கொண்டார்.
முன்னதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எனினும் தாய்லாந்து அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பத்மநாதன் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு பாங்காக் வழியாக கொழும்பு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
தமிழர் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday 6 August, 2009

2003 Mumbai blasts accused get death sentence

August 6: A special POTA court in Mumbai has awarded death sentence to the three accused held guilty last week for the 2003 blasts that killed over 50 people.
This is the first time a husband and wife have been held guilty of terror activities in the country.
The court had held them guilty of conspiracy, murder and also under the prevention of terrorism act or POTA. This has been the biggest blasts case after the 1993 serial blasts trial and took six years to complete.
The special POTA judge M R Puranik had convicted Ashrat Ansari (32), Hanif Sayed Anees (46) and his wife Fehmida Sayed (43) last week for their role in carrying out the blasts in which 52 people were killed and 100 injured.
The convicts were also involved in placing an unexploded bomb in a bus at suburban SEEPZ on December 2, 2002, and another explosive device in a bus at Ghatkopar on July 28, 2003 in which two persons were killed due to the explosion.

Wednesday 5 August, 2009

Somdev Devvarman beats Marin Cilic

Aug 5: Somdev Devvarman registered the biggest win of his fledgling career when the wiry Indian upstaged sixth seeded Marin Cilic in straight sets in the second round of the USD 1.4 million Legg Mason Tennis Classic in Washington.
The Indian qualifier, who lost to Cilic in his maiden ATP final in the Chennai Open earlier this year, took one hour and 42 minutes to sent the Croatian packing 7-5, 6-4 to reach the third round where he would meet either the big-hitting Croatian Ivo Karlovic or German Raine Scheuttler.
"It's definitely the biggest win of my career. He's a great player. He's in top 15 already and on his way to the top 10," Somdev gushed after the win.
"All along I played well. My plan was to compete as hard as possible. I took my chance and I'm proud of the result," said Somdev who saved five of the seven break points that his opponent had.
Cilic had ended Somdev's dream run in January in Chennai, where the 24-year-old had reached his first ATP final with wins over players like Carlos Moya and Ivo Karlovic.
Somdev said he did not have any butterflies in the stomach in the second round match and neither was he out to settle an old score. "It wasn't my first Tour final tonight so I wasn't as nervous going out," said the 153rd-ranked Indian.

Sunday 2 August, 2009

BMW catches fire in Ahmedabad; four die

August 1, 2009 In a tragic accident in Ahemdabad, four people were burnt to death as the BMW they were travelling in, caught fire.
The four people, reportedly all mechanics of BMW, had taken a new car for a test drive when it caught fire after ramming into a trailer.
It appears the car's central locking system failed and all four got trapped inside the car. Three hours of operation by a large team of fire officials finally managed to take out the charred remains of the four people.
Sources said the four occupant of the car were employees of Parsoli Motors, the BMW dealership in the city. They were on a test drive of the vehicle, which had come to Parsoli’s workshop for repairs and service.
Police said the accident took place around 6.30 pm near Ognaj. The four occupants could not escape and got burnt to death as the car doors got locked automatically and had jammed.
BMW officials say that they have never heard of any BMW go up in flames like this.

Saturday 1 August, 2009

Honda recalls 440,000 cars for airbag risk

DETROIT: Honda Motor Co said on Friday that it is recalling another 440,000 vehicles - including some of its best-selling Accord and Civic models - for a potentially lethal airbag defect.
Honda said that the airbag inflators in some of its top-selling sedans can rupture because of too much air pressure causing metal fragments to shoot through the airbag and strike vehicle occupants.
One fatality and a number of injuries have been linked to the defect, Honda spokesman Sage Marie said.
The recall covers certain 2001 and 2002 Accords, 2001 Civics and some 2002 and 2003 model Acura TL sedans. The driver's side airbag is the defective component on the affected vehicles. Honda said owners of those models can check to see if their vehicle is covered by the recall by checking the automaker's website at www.owners.honda.com/recalls.
The Japanese automaker said it was encouraging owners to wait until they received a recall notice to go to a dealership and have the inflator for the steering-wheel airbag replaced.
Honda had originally announced that it would recall some 2001 Accord and Civic sedans for the defect last November. The notice issued on Friday added another 440,000 vehicles to the recall.