Thursday 28 July, 2011

குஜராத்தில் இரண்டவது கார் ஆலை: ஃபோர்டு

அமெரிக்காவின் பிரபல போர்ட் கார் நிறுவனம் இந்தியாவில் மேலும் ஒரு தொழிற்சாலையை நிறுவ இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அமைய இருக்கும் இந்தத் தொழிற்சாலை, சுமார் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என போர்ட் நிறுவன தலைமை நிர்வாகி ஜோன் ஹின்ரிக்ஸ் தெரிவித்தார்.
சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இந்தப் புதிய தொழிற்சாலையில், சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் கார்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் போர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.