Monday 29 June, 2009

ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் அறிமுகம்

ஜூன் 28: உலக அளவில் பிரபலமாகியுள்ள ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய மோட்டார் கார் நிறுவனங்களை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதற்குப் பிறகு அவ்விரு நிறுவனங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த கார்கள் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியச் சந்தைக்கு இவ்விரு நிறுவனங்களின் வாகனங்கள் நேரடியாக விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரவி காந்த், ஜாகுவார் நிறுவன நிர்வாக இயக்குநர் மைக் ஓ டிரிஸ்கால், லேண்ட் ரோவர் நிர்வாக இயக்குநர் பில் பாபம், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கூட்டு நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ஸ்மித் ஆகியோர் பங்கேற்றனர். நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர். ரூ.92 லட்சம் விலை: ஜாகுவார் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.92 லட்சம் என்று இரு மாடல்களில் விற்கப்படும். அவை எக்ஸ்-எஃப், எக்ஸ்-கே-ஆர் ரகங்களாகும். லேண்ட் ரோவர் கார்கள் ரூ.63 லட்சம், ரூ.89 லட்சம் ஆகிய விலைகளில் கிடைக்கும். இவை டிஸ்கவர், ரேஞ்ச் ரோவர் என்ற இரு மாடல்களாகும். ஜாகுவார் என்ற மோட்டார் கார் நிறுவனம், மோட்டார் சைக்கிள்களில் மூன்றாவது நபரை அமரவைத்து உடன் அழைத்துச் செல்லும் பக்கவாட்டு கார் பகுதியைத் தயாரிப்பதில் புகழ் வாய்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் தயாரிப்பில் ஈடுபட்டதால் டாடா குழுமத்துக்கு 2008-2009-ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2,505.25 கோடி இழப்பு ஏற்பட்டது. சர்வதேசச் சந்தையில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதால் இந்த இழப்பு ஏற்பட்டது. அப்படியும் டாடா குழுமம் மனம் தளராமல் தான் புதிதாக வாங்கிய இரு மோட்டார் கார் நிறுவனங்களின் உற்பத்தியை முடக்காமல் தொடர்ந்து மேற்கொண்டு வருவதும், அதன் தயாரிப்புகளை விற்க முற்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மும்பையில் இவ்விரு நிறுவனங்களின் மோட்டார் கார் வாகனங்களுக்கு உள்ள தேவையைப் பொருத்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவோம் என்றார் மைக் ஓ டிரிஸ்கால்.
இந்தக் கார்கள் மிகவும் விலை அதிகமானவை. மிகப்பெரிய பணக்காரர்களால்தான் வாங்க முடியும் என்பதால் இவற்றை விற்க இலக்கு எதையும் நாங்கள் நிர்ணயிக்கவில்லை, இந்தியச் சாலைகளில் இந்தக் கார்களை அறிமுகப்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம் என்றார் பில் பாபம்.
இந்தக் கார்களின் தொழில்நுட்பமும் திறனும் இந்திய வாகன ஓட்டிகளுக்குப் புதிய அனுபவமாக இருக்கும். நவீனத் தொழில்நுட்பங்களிலான கார் என்றால் எப்படி இருக்கும் என்று ஏராளமான இந்தியர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பாக இருக்கும் என்றார் ரத்தன் டாடா.
இந்தியாவில் எங்களுடைய நிறுவனத் தயாரிப்புகளை விற்பதற்கு ஒரு தளம் வேண்டும் என்று முன்னர் தேடிப் பார்த்தோம், இப்போது அந்த வாய்ப்பு நன்றாகக் கிடைத்திருக்கிறது என்றார் டேவிட் ஸ்மித். ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்கள் பிரேசில், சீனா, ரஷியா ஆகிய நாடுகளில் நன்றாக விற்க ஆரம்பித்துள்ளது, எனவே இந்தியாவிலும் விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் டேவிட் ஸ்மித். (Dinamani)

Sunday 28 June, 2009

தேசிய அடையாள அட்டை திட்டம்: தலைவர் நந்தன் நிலகேணி

புது தில்லி, ஜூன் 25: தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் துறையின் தலைவராக இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்படுகிறது. திட்டக் குழு தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.
அரசு செயல்படுத்தும் பிரபலமான திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை இந்த ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் நலத் திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதோடு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகச் செயல்படுத்தும்.
அரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ -அனைவருக்கும் கல்வித் திட்டம்), தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், பாரத் நிர்மான் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதன் பலன் உரியவர்களைச் சேர்கிறதா என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும்.

Saturday 27 June, 2009

சென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை

சென்னை, ஜூன் 27: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர். குமார் (47) குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.ஆர். குமார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தாராம்.

இன்று காலை 7.45 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலை அருகே காரனை கூட்ரோடு சந்திப்பில் தனது காரில் இருந்தபடி நண்பர் ஒருவருடன் குமார் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது காரை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 7 பேர், குமார் இருந்த காரின் மீது 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மேலும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.

Tuesday 23 June, 2009

இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்: நடிகர் விஜய்

சென்னை, ஜூன் 22: இப்போதைக்கு கட்சி தொடங்க மாட்டேன்; ஆனால் மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தனது 35-வது பிறந்த நாளை சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி சென்னை சாலிகிராமம், ரெங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் இரண்டு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களைத் தொடங்கி வைத்தார். வடபழனியில் உள்ள அவருடைய திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும் மெர்சி ஹோம் இல்லத்திலும் மதிய உணவு வழங்கினார். இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் விஜய் பேசியதாவது:
என் பிறந்த நாளை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அன்றைய தினம் என்னுடைய ரசிகர்கள் மக்கள் நலப் பணிகளில் முழுமையாக ஈடுபடுவார்கள் என்பதுதான் காரணம். இந்த ஆண்டு, நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் உதவிகளைச் செய்துள்ளனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். என்னுடைய ரசிகர் மன்றங்களை இப்போது மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ரசிகர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
அந்தக் கருத்தை நான் ஒதுக்கவில்லை. மனதில் நிறுத்தி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாக மாறிவிட்டார்கள். ஆனாலும் இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்க மாட்டேன். மக்கள் பிரச்னைக்காக ரசிகர்களுடன் இணைந்து போராடுவேன்.
தற்போது நான் நடித்து வரும் "வேட்டைக்காரன்' படம், 70 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. என்னுடைய 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார் என்றார். நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், இயக்குநர்கள் ராஜா, செல்வபாரதி, ரமணா, கோபி, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செüத்ரி, மோகன் நடராஜன், சங்கிலி முருகன் ஆகியோரும் ஏராளமான ரசிகர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். (Dinamani).

Monday 22 June, 2009

Saina Nehwal wins Indonesian Open 2009

Indian world number eight Saina Nehwal won her first Super Series event in Indonesia on Sunday to raise her country's hopes of a strong performance at the world championships they host in August.

The world junior champion beat China's Lin Wang 12-21 21-18 21-9, having lost to the world number three at the Singapore Super Series the previous week.

"Saina's achievement is huge not just for Indian badminton but for Indian sport," former all-England winner and national coach Pullela Gopichand told Reuters.

"In terms of quality, the Indonesian event is as good as the all-England, the Olympics or the world championships with eight of the world's top 10 figuring in it."

Nehwal, 19, became the first Indian woman to reach the Olympic singles quarter-finals in Beijing last year.

Saturday 20 June, 2009

விமர்சனம் - குளிர் 100 டிகிரி


Movie - Kulir 100 Degree
Director - Anita Udeep
Music - Bobo Sasi
Cast - Sanjeev, Aditya, Riya
Rate -
தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் சக நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கும் மாணவனான சூர்யாவுக்கு ஏற்படும் நிலையை குளிரக் குளிரச் சொல்ல வந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அனிதா உதீப்.
பள்ளியல் மாணவர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்களும், நட்பும், நேசிப்பும்தான் கதையின் மையம். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அழகிய குளிர் பிரதேச உயர் வகுப்பினர் மட்டுமே படிக்கும் லேக் வியூ மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வருகிறான் மிகப்பெரும் ரவுடியான ஆறுமுகத்தின் மகன் சூர்யா. (பிந்துகோஷை ஞாபகப்படுத்தும்படியான) “பப்ளு'வின் உதவியால் சூர்யா ஜெயிக்க, கோபத்தின் உச்சியில் பப்ளூவை கொன்று விடுகின்றனர், ரோஹிந்தும் அவனது நண்பர்களும். அதன் பிறகு சூர்யா என்னவானான் என்பதே படத்தின் மீதிக் கதை.
சூர்யாவின் தாயாக வருபவர், சூர்யாவின் காதலியான தான்யா இருவர் மட்டுமே படத்தின் பெண் கதாபாத்திரங்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்கள் பாத்திரத்தை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கிக் கொள்கின்றனர். அடுத்த சபாஷ் கலர்ஃபுல்லான அதே சமயத்தில் சரியான ஆடை வடிவமைப்பும், ஒளிப்பதிவும் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு!
இயக்குநர் லாஸ் ஏஞ்சல்ஸில் மூன்று வருட ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு, அமெரிக்காவின் பிரமாண்ட இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீலபெர்க்கின் கம்பெனியில் வேலை செய்தவராம். ஆனாலும் கதையும், அதை வழிநடத்தும் திரைக்கதையும் தெளிவில்லாமல் போனதால் வெறும் அழகியலோடு மட்டுமே படம் முடிந்து போவதும், முடிவை சரியாக சொல்ல தெரியாமல் விட்டிருப்பதும் படத்தின் மைனஸ்.

வேலைக்கார பெண்ணை கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது

வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் இவர் வீட்டில் 18 வயது பெண் வேலை செய்து வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார ‌பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Friday 19 June, 2009

Vijay Awards - 2008










Check out the Winner List
Dr.Kamal Haasan won the 'Favorite Hero' award for 'Dasavatharam'
Favorite Heroine for 'Yaaradi nee Mohini' was awarded to 'Nayantara'
Favorite Film award goes to 'Vaaranam Aaiyiram'
Favorite Director award was given to 'Gautham Vasudev Menon' for 'Vaaranam Aaiyaram'
Surya wont the Best Actor award for 'Vaaranam Aaiyram'
Best Supportin Female Actress was given to 'Simran' for 'Vaaranam Aaiyram'
Best Music Director award was given to 'Harris Jayaraj'
Best Playback Singer award was given to 'Hariharan' for 'Vaaranam Aaiyaram for the song 'Nenjukkul'
Best Lyricist award was givne to 'Thamarai' for the movie 'Vaaranm Aaiyram' for 'Nenjukkul' song
Best Makeup Artisits award was given to 'Banu & Yogesh' for 'Vaaranam Aaiyram'
Subramaniapuram grabbed the Best Director award which was presented to 'Sasi Kumar'
S.R.Kathir was given the Best Cinematographer award
Best Editor award was given to Raja Mohammed
Best Stunt Master award was givne to Rajasekhar for Subramanipuram
Best Comedian, Best Villian & Best Story Screenplay Writer award was given to Padmashree Dr.Kamal Haasan for Dasavatharam
Best ARt Directors award goes to 'Sameer Chanda, Prabhakaran, Thota Tharani
Gautami was awarded the Best Costume Designer for 'Dasavatharam'
Sneha grabbed the Best Female Actress award for her performance in Privom Santhipom
Best New comer award was given to Parvathy of Poo
Best Playback Singer award was given to 'Bombay Jayashri' for 'Yaaro Manathilae' song from 'Dhaam Dhoom' movie
James Vasanthan was given the 'Best Find of the Year' for Subramaniapuram
Best Entertainer of the Year award was given to 'Dhanush' for Yaaradi Nee Mohini
A.R.Rahman was given the Most Prestigious Chevalier Sivaji Ganesan award
Subramaniapuram team grabbed the Best Crew Award
Best Contribution award to Tamil Cinemas was given to Satyam Cinemas

Sunday 14 June, 2009

Movie review - Mayandi Kudumbathar

Director- Rasumadhuravan
Music - Sabesh Murali
Cast - Tharun Gopi, Manivannan, Rajkapoor, G M Kumar, Ponvannan, Seeman, Singam Puli
Rate -

நெஞ்சை நக்குற பாசக்கார பயலுக ஒரு பக்கம், நஞ்ச கக்குற நாசக்கார பயலுக மறுபக்கம். வேறொன்னுமில்லே, பங்காளி பிரச்சனை. இன்னொரு பக்கம் கடைக்குட்டி பயலோட கஷ்டம். இரண்டு பிரச்சனையையும் ஒரு வண்டியிலே பூட்டி, 'சவாரி' அடிச்சிருக்காரு ராசு மதுரவன். இதெல்லாம் பீம்சிங் ஸ்டைலுன்னு கொண்டாடுது ஒரு குரூப். உலகம் போற வேகத்திலே இப்படி ஒரு படமான்னு கோவப்படுது இன்னொரு குரூப். சட்டையிலே அழுக்கு படாத சர்தாருங்களை விடுங்க. மண்ணு மணக்கிற கதையை நேசிக்கிற நம்ம மாதிரி ஆளுங்களுக்கு மாயாண்டி, நிச்சயமா பூச்சாண்டி இல்லே!
மணிவண்ணனும், ஜிஎம் குமாரும் அண்ணன் தம்பிங்க. இரண்டு குடும்பத்துக்கும் தலா நாலு பசங்க. மணிவண்ணன் குடும்பத்திலே எல்லாரும் நல்லவங்க. குமார் குடும்பத்திலே அத்தனை பேரும் கெட்டவங்க. படம் முழுக்க உறுமிக்கிறாய்ங்க. மணிவண்ணனின் கடைக்குட்டி தருண்கோபிக்கும் பக்கத்து ஊரு பூங்கொடிக்கும் காதல். திடீர்னு மணிவண்ணன் போய் சேர்ந்துவிட, தனி மரமா நிக்கிறாரு தருண்கோபி. அதுவரைக்கும் கூட்டுக்குடும்பமா இருந்தவங்க தனித்தனியா பிரிய, சாப்பாட்டுக்கே பிரச்சனை தருண்கோபிக்கு. இவரு சோகம் இப்படின்னா, காதலும் கண்ணாமூச்சு காட்டுது பிரதருக்கு. தருண்கோபி என்னானார்? பெரியப்பா குமார் குடும்பம் திருந்திச்சா? இதுதான் க்ளைமாக்ஸ்.
அடிக்கடி வரும் திருவிழா காட்சிகளும், அடிதடி காட்சிகளும் அலுப்பை தந்தாலும், அண்ணன் தம்பி பாசம் அல்ட்டிமேட்! குறிப்பா 'முத்துக்கு முத்தாக' பாடலை ஒலிக்க விடும்போதெல்லாம் முத்து முத்தா கொட்டுது நம்ம கண்ணிலேயிருந்து.
தருண்கோபிக்கு ந(டி)ப்பாசை! ஆனாலும் கொடுத்த வேடத்தை கனக்கச்சிதமாக கையாண்டிருக்கிறார். ப்ளஸ் டூ வேஷம் பொருந்தலே என்றாலும், பூங்கொடியை இழந்து தவிக்கிற காட்சிகளிலும், அக்கா வீட்டு விசேஷத்துக்கு போய் அவமானப்பட்டு திரும்பி வரும்போதும் கண்கலங்க வைக்கிறார். என்னதான் காதலிக்கு கல்யாணம் ஆயிருச்சு என்றாலும் நட்ட நடுரோட்டில், மட்ட மல்லாக்க விழுந்து புரளுவதெல்லாம் டூ மச் வாத்தியாரே!
பிரதர்ஸ் குரூப்பில் மனசிலே ஆணி அறைஞ்சுட்டு போறது ரெண்டே ரெண்டு பேரு. சீமானும், ஜெகன்நாத்தும். அதிலும் சீமான் கலப்படமில்லாத கருப்பு எம்.ஜி.ஆராகி இருக்கிறார். மனைவிக்கு தெரியாமல் தம்பிக்கு பண உதவி செய்யும் போது அவர் பேசுகிற டயலாக், ஓராயிரம் அண்ணன்களின் உள்ளக் குமுறல். "கள்ளக் காதலையே நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணிடுறாங்க. உறவுகளுக்கு உதவுற விஷயத்தை மறைச்சு மறைச்சு செய்ய வேண்டியிருக்கு" எத்தனை சத்தியமான வார்த்தைகள்?அதுவும் இவரு பாடுற அந்த பாடல், இந்த நு£ற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ பாடலாக அமையும்.
எதிர்கோஷ்டி பிரதர்சில் சிங்கம்புலிக்கு ஸ்பெஷல் அப்ளாஸ் போடலாம். "அப்பா நீ செத்தா இது எனக்குதானே"ன்னு அவரு கேட்கும்போதெல்லாம் தியேட்டர் துவம்சம். "அவனுக்கு பொண்ண குடுத்திராதே, ராத்திரியிலே இழுத்துட்டு போயி..."ன்னு அவரு பேசும் பச்சை, அப்படியே பச்சை மண்ணுங்கறதை காட்டுது.
சட்டையை தோளில் போட்டுக்கொண்டே அலப்பறை பண்ணும் மயில்சாமி கடைசி வரைக்கும் பயங்கர ஸ்டடி!
அண்ணி, அக்கா என்று டைரக்டர் தேர்ந்தெடுத்த முகங்களில் வழிய வழிய யதார்த்தம். சில காட்சிகளில் நடிப்பென்றே தெரியாதளவுக்கு வழிந்தோடுகிறது இயல்பு. பலே!
பின்னணி இசையாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், சபேஷ் முரளி 'சபாஷ்' போட வைக்கிறார்கள். பாடல் காட்சி வராதா என்ற ஏக்கத்தை தருகிறது அத்தனை பாடல்களும். காதல் காட்சிகளில் குழைந்து, சண்டை காட்சிகளில் அதிர்ந்து, பாடல் காட்சிகளில் பரவசமடைந்து, தானும் ஒரு கேரக்டராகவே மாறியிருக்கிறது பால பரணியின் கேமிரா.
வாழ்க்கையை சொல்கிற படங்களை வரவேற்கணும். அந்த வரிசையிலே பார்த்தா, இந்த 'மாயாண்டி குடும்பம்' ஒரு நாலு வாரத்துக்காவது ரசிகர்களோட குடும்பமா இருக்கணும். தயவு செய்து தியேட்டருக்கு போங்கய்யா...!
-ஆர்.எஸ்.அந்தணன் Tamilcinema.com

Honda's new hatchback Jazz

Japanese car giant Honda on Wednesday launched its much-awaited hatchback Jazz in India, priced between Rs 698,000 and Rs 733,000 (ex-showroom, Delhi).
The launch of Jazz, with a 1.2 litre petrol engine, in the country marks Honda Siel Car India's -- the joint venture between Honda Motor Corp and Siel Group -- entry into the most competitive and volume-driven small-car segment in India.
"The Honda Jazz is a segment-defining car and is loaded with all the values that are associated with Honda. The car will cater to the unique group of the people who want the latest and most stylish models with the best technology," Honda Siel president and CEO Masahiro Takedagawa told reporters in New Delhi.
The company said Jazz, with a Euro-IV compatible engine, would give a mileage of 16.1 km per litre as per ARAI standards.
Jazz would initially be produced at HSCI's Greater Noida facility and had planned to shift it later to its under-construction plant at Tapukara in Rajasthan.
The company had announced Rs 1,000-crore (Rs 10 billion) investment for constructing its second plant at Tapukara. However, the company has put on hold the construction work indefinitely due to slowdown in demand.

Text: PTI

Saturday 13 June, 2009

Amritha - lighting crackers

Stone in kidney

Today I visited Deepam Kidney hospital located near tambaram to check stone presence in my kidney, I referred Dr Raman. I had 12mm size stone in right side kidney which is broken through laser 45 days before. Second time same process done to demolish the stone & today time to check whether it is still in kidney or passed away. I started today at 10am & rushed to hospital as I was late. As usual doctor wasn’t reached hospital from main branch. I waited patiently; at last I met doctor at 11.30am. Sir checked me and confirmed still 5mm stone remains in kidney & suggested to do laser piercing third time. He had appointment in Pammal branch for surgery & requested me to wait for another 90 minutes.
I went with a anantha vikadan magazine & read completely to push the time. I had two times tea & snacks in this period, still not able to manage. Nurse Nithya had a chat with me regard my books reading practice as I always read book in hospital when ever I went their. I acknowledged that comment & continue my work. Two times she checked with Pammal hospital & conveyed me doctor will reach soon, which is quite usual in a hospital.

Finally she received a call from doctor & asked her to make theatre ready. Finally doctor reached at 1.30pm & called for laser process. I am able to see difference in machine & checked with doctor, he replied as there is problem in machine alternate parts are fitted in machine. He said me sound will be more due to changes in machine & their wont be worsen pain due to this. Nurse did a mistake in assembly of bladder which doctor identified & corrected it. Process of laser demolish is patient need to bud kidney portion to machine & laser will hit continuously which will broke the stone which is named as Extracorporeal shock wave lithotripsy (ESWL).
Process took 1 hour, till that it was difficult for me to manage. Pain is their in one end & I felt sleepy because yesterday night I watched T20 cricket till night 2’O clock. Finally when he finishes the process after 1 hour I was sleeping & he only made me to awake. He told that he tried to demolish the stone as best he can & picture wasn’t clear to view the stone. I felt ashamed as the only person in this world who slept while laser hits the body. Tube is inserted in urinary passage to avoid injury while stone is passing through urine. This was done before 1st treatment by giving anesthesia & will be removed after two weeks after confirming no stone in kidney. Removal will be done without anesthesia which makes me worried. Their will be irritation while passing urine & blood will be mixed with urine because of this tube. Hope readers shouldn’t experience these things in their life.

Thursday 11 June, 2009

அம்ரிதா - பள்ளியில் முதல் நாள்

இன்று அம்ரிதா முதல் நாள் எல் கே ஜி வகுப்பிற்கு சென்றாள். வித்யா மந்திர் பள்ளி @ ஈஸ்டன்சியா இன்றுதான் தொடங்கப்பட்டது, திரு கஸ்துரிரங்கன் அவர்கள் பள்ளியை தொடங்கி வைத்தார். அம்ரிதா ஏற்கனவே பிரீகே ஜி சென்ற அனுபவம் இன்று உதவியது, அவள் பள்ளிக்கு செல்வதை விரும்பினாள்.

Wednesday 10 June, 2009

In 3 months 53215 Tamilians killed in Vanni

வன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 53,215 தமிழர்கள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை
[செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2009, 05:42 மு.ப ஈழம்] [பிரித்தானிய நிருபர்]


வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 215 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் எமது மக்கள் பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.
மேலும் அனைத்துலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போயுள்ள 13 ஆயிரத்து 130 தமிழர்களை மீட்டுத் தருக!
அரச கட்டுப்பகுதிக்கு சென்றடைந்த மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த நிலையில் இந்த மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியும் என பேரவை நம்புகின்றது.
இந்தப் பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபை
ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.
அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன்நின்று பாடுபடுகின்றன.
இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.
அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன், அவருடன் உள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் ஆகியோரும் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது.
பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்!
இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.
காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்; வெளியேறிவந்த மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.
இந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தவும் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.
முள்வேலியின் பின்னால் நின்று எமது மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday 9 June, 2009

Ford heads in JD power vehicle dependability segment

Ford models rank highest in the entry midsize and SUV segments, and Toyota models rank highest in the premium midsize and MUV/MPV segments, according to the 2009 J D Power Asia Pacific India Vehicle Dependability Study released on Friday. Honda
and Maruti models also earn highest-ranking achievements in other segments.
The study, which measures the dependability of three-year-old vehicles, ranks vehicles in 10 segments and examines more than 150 problem symptoms across nine categories: vehicle exterior; driving experience; features, controls and displays; audio and entertainment; seats; heating, ventilation and cooling (HVAC); vehicle interior; engine; and transmission. Overall dependability is based on the number of problems reported per 100 vehicles (PP100), with lower scores indicating a lower rate of problem incidence and higher long-term vehicle quality.
The Ford models lead in two segments, with the Ikon ranking highest in the entry midsize segment and the Endeavour leading in the SUV segment. The Toyota models also lead in two segments, with the Corolla ranking highest in the premium midsize segment and the Innova ranking highest in the MUV/MPV segment. The Maruti Suzuki Zen leads in the compact segment and the Honda City ranks highest in the midsize car segment.
At the nameplate level, Honda performs particularly well, receiving a score of 159 PP100. Honda leads the industry in three of nine problem categories: vehicle exterior, driving experience and engine. Toyota follows Honda at the nameplate level with 173 PP100, which is a 96 PP100 improvement from 2008.
The study finds that in 2009, vehicle dependability across the auto industry in India averages 290 PP100, which is an improvement of 41 PP100 from 2008. Although improvement is evident across most problem categories, the improvement is primarily driven by fewer reported problems with the driving experience and engine categories.
“Fewer owners have experienced dependability problems this year, which enhances their perceptions regarding the reliability and durability of their vehicle,” said Mohit Arora, senior director at J D Power Asia Pacific, Singapore.
“An owner’s perception of their vehicle is important because it strongly impacts their intent to recommend or repurchase the same vehicle make. This can be extremely beneficial to manufacturers in increasing loyalty and recommendations and, thus, new-vehicle sales,” he added.
Among the key problems experienced by owners, the most frequently reported problem is doors squeak/abnormal noise. Additionally, even though excessive fuel consumption remains among the top 10 problems across all vehicle segments, the industry has improved most in this problem area compared with 2008.

The study also finds that nearly 50 per cent of luxury-vehicle owners are covered under an extended warranty or service contract—up 12 percent from 2008. Conversely, only 28 per cent of small-vehicle owners and 31 per cent of midsize-vehicle owners are covered under an extended warranty or service contract.
“Luxury or premium vehicle owners generally have a greater propensity to purchase the extended warranty or service contract coverage for their vehicles, as they spend considerably high amounts to purchase their vehicle,” said Arora.

The 2009 India Vehicle Dependability Study is based on evaluations from 5,105 owners who purchased a new vehicle between July 2005 and October 2006. The study includes 39 vehicle models covering 12 nameplates and was fielded from January to April 2009 in 20 cities throughout India.

Monday 8 June, 2009

Eelam struggle will continue - Seeman


பெங்களூர், ஜூன் 7: தமிழீழ விடுதலைப் போராட்டம் இனிமேல்தான் தீவிரமடையும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்த அந்நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்ட பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூர் கிழக்கு ரயில்நிலையம் அருகே மைதானத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் (க.த.ம.இ.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:
புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் என்று கூறி சுமார் 25,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இதுபோல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது.
போரில் வென்றுவிட்டோம்; புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால், இனிமேல்தான் தமிழீழப் போராட்டம் தீவிரமடைப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால், ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக் கோரிக்கை பறிக்க முடியாது. இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாகக்கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத் தமிழர்களிடத்தில் உள்ள தமிழ் உணர்வுகூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.
முன்னதாக க.த.ம.இ. தலைவர் சி.ராசன் தலைமையேற்று உரையாற்றுகையில், "தமிழக கட்சித் தலைவர்களும், தமிழர்களும் சரியான அணுகுமுறையுடன் போராடியிருந்தால் இலங்கையில் என்றைக்கோ தமிழீழம் மர்ந்திருக்கும்' என்றார்.
மனித சங்கிலி பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தினர், பெங்களூர் மக்கள் நலச்சங்க செந்தில்குமார், விடியல் நூலக அமைப்பினர், கன்னட-தமிழர் ஒற்றுமை கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

Saturday 6 June, 2009

Paes win French Open men's doubles 2009


Leander Paes won his ninth Grand Slam title when he and his Czech partner Lukas Dlouhy overcame a first set lapse to tame Wesley Moodie and Dick Norman in the final of the French Open men's doubles here on Saturday.

The third seeded Indo-Czech pair defeated the giant-killing South African-Belgian pair 3-6, 6-3, 6-2 to win their first Grand Slam title together.It is almost after a gap of three years that Paes has won men's doubles title at a Major, since winning the 2006 US Open with Martin Damm.

Paes had earlier won the French Open in 1999 and 2001 with his estranged compatriot Mahesh Bhupathi.After losing the first set, Paes and Dlouhy staged a brilliant comeback and completely overwhlemed Moodie-Norman, who had upset second seeded Americans Mike and Bob Bryan in the semi-finals.

An early break left Paes and Dlouhy trailing in the opening set. They got chances to break back but failed to convert any of the two breakpoints and that was enough for Moodie and Norman to seal the lead. Paes was hit on his eye when left-handed Norman sprayed a high forehand volley straight towards the Indian ace. Fortunately, that did not harm Paes much and he returned to court after receiving the ice treatment.

The Indo-Czech pair then staged a remarkable comeback in the second set riding on a double break -- second and fourth games. They raced away to a 5-0 lead and it looked they will blank their opponents but Paes was broken when he was serving for the set.However they had a such good lead that they comfortably drew parity and stretched the match to the decisive third set.As the momentum was on their side, they yet again broke their rivals twice -- third and seventh games -- to write the title in their name.

Wednesday 3 June, 2009

Meira Kumar elected Lok Sabha Speaker 2009


Meira Kumar on 3rd June Wednesday made history in the Lok Sabha when she was unanimously elected its Speaker and thus became the first woman to occupy one of the highConstitutional posts.
Sixty four-year-old Kumar, Congress' Dalit face, a former foreign service official and Union Minister, was elected after a resolution moved by UPA chairperson Sonia Gandhi and seconded by Leader of the House Pranab Mukherjee was approved by a voice vote amidst thumping of desks by the entire House.
Kumar, elected from Sasaram in Bihar in the recent elections, is the daughter of the late Jagjivan Ram.
Earlier, leaders cutting across the political spectrum, including L K Advani (BJP, Mamata Banerjee (Trinamool Congress), T R Baalu (DMK), Arjun Charan Sethi BJD), SharadYadav (JD-U), Mulayam Singh Yadav (SP), Lalu Prasad (RJD), Ram Sundar Das (JD-U), Sharad Pawar (NCP), Farooq Abdullah (NC) and E Ahmed (Muslim League) also tabled their motions proposing Kumar for the post.
After Gandhi's motion was approved by a voice vote, Prime Minister Manmohan Singh, Mukherjee and Advani escorted Kumar, who was sitting in the front benches, to the Speaker's Chair.
After Kumar took the Chair, Singh hailed her election as a historic moment and said her services as a distinguished diplomat, 25 years in Parliament and her role as a Minister would stand her in good stead to execute her onerous job well.

Tuesday 2 June, 2009

Movie review - Thoranai


Movie - Thoranai
Director - Saba Iyappan
Producer - GK Film Corporation
Music - Mani Sharma
Cast - Vishal, Shriya, Prakash Raj, Kishore
Rate -

கிழங்குன்னா அவிக்கணும், கீரைன்னா மசிக்கணும், விஷால்னா உதைக்கணும்! நல்லவேளையா இதிலே உதைக்கறதை இரண்டாவது பாதியிலே வச்சுட்டு, முதல் பாதி முழுக்க நல்லபடியா கதைக்கிறாங்க.
சின்ன வயசிலே ஊரை விட்டு ஓடிப்போன அண்ணனை கண்டுபிடிக்க சென்னைக்கு வர்றாரு தம்பி விஷால். அதெப்படி கரெக்டா சென்னைக்கு வர்றாருன்னு கேள்வி கேக்கிறவங்க நிச்சயமா மசாலா பிரியருங்களா இருக்க முடியாது. (இந்த படம் 'மசால்' தோசை பிரியர்களுக்கு மட்டும்) வந்த இடத்திலே ஸ்ரேயாவை காதலிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அண்ணனை தேடி அலைய, ஒருவழியாக கிடைக்கிறார் அண்ணன். ஆனால், சென்னையையே கலக்கும் ரவுடியாக! அவரை இன்னொரு ரவுடியிடமிருந்து காப்பாற்றி கொண்டு போகிற பெரும் பொறுப்பு தம்பிக்கு வாய்க்க, சவால் மேல் சவால்களை வீசி, சகட்டு மேனிக்கு துப்பாக்கிகள் பிரயோகித்து இறுதி யுத்தத்தில் ஜெயிக்கிறார் விஷால்.
விவேக், வடிவேலுகள் கொடுக்காத கலகலப்பை விஷால் கட்சிக்கு கொடுத்து, நகைச்சுவை கூட்டணியை பலப்படுத்தியிருக்கிறார் சந்தானம். விஷாலை காப்பாற்ற தனது உடம்பிற்குள் பரவை முனியம்மாவின் திருவாளர் ஆவி வந்திருப்பதாக சொல்லப்போக, சந்தானத்தை விரட்டி விரட்டி வெட்கப்படும் முனியம்மா எபிசோட் குலுக்கி போடுகிறது மொத்த தியேட்டரையும். அதுவும் விஷால் பரவை முனியம்மாவுக்கு 'லிப் கிஸ்' அடிக்கிற காட்சி வெடிச்சிரிப்பு. இவர்களுடன் வாட்ச்மேன் மயில்சாமியும் சேர்ந்து கொள்ள, இப்படி சிரிச்சு எம்புட்டு நாளாச்சுன்னு சந்தோஷப்பட வைக்கிறார்கள் அத்தனை பேரும்.
'இன்டர்வெல் கேப்' முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் பெரிய தலைமுறை இடைவெளியையே ஏற்படுத்தி வைக்கிறது. சம்பந்தமே இல்லாமல் சுறுசுறு, கடுகடு கோபத்தோடு நகர்கிறது படம். பிரகாஷ்ராஜும், கிஷோரும் ஒரு இராணுவத்திற்கே தேவைப்படுகிற அளவு துப்பாக்கி ரவைகளை பிரயோகிக்கிறார்கள். மந்திரம் போட்டது போல அந்தரத்தில் பறக்கிறார்கள். சண்டை பிரியர்கள் கைதட்டினாலும், சம்சாரிகளோடு தியேட்டருக்கு வந்தவர்கள் பாடுதான் துவம்சம்!
விஷால் ஸ்கிரீன் ஓரமாக அடிக்கடி வந்து நின்று யாருக்கோ சவால் விடுகிறார். தனது ஃபார்முலாவை விஜயே மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, இவர் அப்படியே விஜயை ஃபாலோ செய்வது யார் திருப்திக்காகவோ? ஆனாலும் விஷால் படத்திற்கேயுரிய மெனக்கெடல்கள் திருப்தி.
பனித்துளியாக இருந்த ஸ்ரேயா, கொஞ்சம் ட்ரை ஆகி பச்சை தண்ணீராகியிருக்கிறார். அடுத்த ஸ்டேஜூக்கு போவதற்குள் விழித்துக் கொள்வது நல்லது. (ஸ்ரேயாவுக்கு சதை பிடிக்காததும், விஷாலுக்கு கதை அமையாததும் சகஜம்தானேப்பா...! வேறென்னுமில்லே, பெரிய கருப்ப தேவரு நம்மள ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டாரு)
பாண்டியராஜன், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், லால் என்று பலர் வந்து போனாலும், லால் 'லாக்' பண்ணுகிறார் நம்மை! மிரட்டும் ஒளிப்பதிவு ப்ரியனுடையது. மணி சர்மாவின் இசையில் சில பாடல்கள் துள்ளாட்டம். சில பாடல்கள் தள்ளாட்டம்.
ஆத்ம விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை விஷாலுக்கு உணர்த்தியிருக்கிறது தோரணை!

Movie review - Pasanga


Director- Pandiraj
Producer - Company Productions
Music - James Vasanth
Cast - Kishore, Sriram, Dharani, Pandian, Murugesh

Rate -
கடலை போடுகிற விடலை பசங்க வரைக்கும் 'Down' லோடு ஆன தமிழ் சினிமா, அட... அதுக்கும் 'கீழே' ஒரு கதை இருக்குய்யான்னு உள்ளார பூந்து வூடு கட்டி அடிச்சிருக்கு! பசங்களை மட்டுமல்ல, பச்ச புள்ளங்களையும் நடிக்க வச்ச பாண்டிராஜுக்கு போடுய்யா ஒரு "கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே...."
அதிக பட்சம் போனா அஞ்சாம்ப்பூ படிக்குங்களா, அதுங்க? என்னா வில்லத்தனம்...? அசலு£ரில் இருந்து படிக்க வரும் அன்புக்கரசுக்கும், உள்ளூரில் படிக்கும் வாத்தியாரு மகன் ஜீவா நித்தியானந்தத்துக்கும் 'உன்ன புடி... என்ன புடி... சண்ட' படம் முழுக்க! விட்டா பெரியவங்க ரேஞ்சுக்கு ரோப் கட்டி பாய்வாங்க போலிருக்கு. இந்த வாண்டுங்க போட்ட போடுலே, எதிரெதிர் வீட்டு பெரியவங்க வேட்டிய மடிச்சுக் கட்டிகிட்டு நிற்கிற அளவுக்கு போர் உச்சக்கட்டம். கடைசியா அவங்களே ஒன்னு சேர்ந்த பிறகும், விலகி நிக்கிற இந்த பொடியன்களை விதி சேர்த்து வைக்குது. எப்படி? க்ளைமாக்ஸ்.
ஈர வெறக அடுப்பிலே போட்டுட்டு, மாரு வலிக்க ஊதுன கதையா இல்லாம, சும்மா ஜிவ்வுன்னு பத்த வச்சு, சர்ர்ர்ருன்னு சமையலை முடிக்கிறாரு இயக்குனர் பாண்டிராஜ். படம் முழுக்க வந்து விழும் நகைச்சுவையும் நையாண்டியும் இருக்கே, கைய குடுங்க மக்கா!
பிடிக்காதவங்க படத்தை சுவத்திலே வரைஞ்சு அதிலே ஒண்ணுக்கு அடிக்கும் 'பார்பேரியன் படவாஸ்கள்' ஒரு பக்கம். பரீட்சை பேப்பர் வாங்குற நேரத்திலும், "கைதட்டி என்கரேஜ் பண்ணி குடுங்க சார். அப்போதான் அடுத்த பரிட்சையிலே இன்னும் மார்க் வாங்க முடியும்"னு வாத்தியாருக்கே பாடம் எடுக்கிற வெஜிட்டேரியன் வெள்ளக்காரன் அன்புக்கரசு மறுபக்கம்னு ஒரே டஃப் கேம். ஸ்கூல் லீடர் யார் என்பதில் போட்டி பெரிசாகி, கோவிலில் அன்புக்கரசுக்கு எதிராக காசு வெட்டி போடுகிற அளவுக்கு கொடுமை கடுமையாகிறது. (காசு வெட்டி போட்ருவோமான்னு அடிக்கடி கண்ணை உருட்டுகிற அந்த படவா ராஸ்கோல் பயங்கரம்) ஸ்கூலில் இவங்க ரவுசு என்றால், வீட்டில் அப்பா அம்மா சண்டை. அது குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்குது என்பதையும் பொட்டில் அறைஞ்ச மாதரி நச்சுன்னு சொல்லியிருக்காரு பாண்டிராஜ்.
இதற்கு இடையில் எல்.ஐ.சி விமலுக்கும் பாலர் ஸ்கூல் வேகாவுக்கும் நடுவே லவ். (அடடா, இவங்க லவ்வுல என்னா ஒரு சுவாரஸ்யம்?) வெந்தும் வேகாம நடிக்கிற நடிகைகளுக்கு மத்தியில் வேகாவின் நடிப்புக்கு நெசமாகவே ஒரு ஆஹா! பஸ்சிலே ஒரு செருப்பை தவற விடும் விமலுடைய செருப்பை அப்படியே ரோட்டோரமாகவே உதைத்துக் கொண்டு வந்து சேர்க்கும் வேகா, "ஒத்த செருப்ப போட்டு நடந்தா ஒத்த புள்ள பொறக்குமாம்"னு விளக்கம் சொல்ல, அடுத்தடுத்த சந்திப்புகளிலேயே லவ். வேகாவோட வெள்ளந்தி மனசுக்கு தோதாக விமல் அடிக்கும் செல்போன் ராவடிகளில் தியேட்டரே கலகல. ஃபிரண்டுக்கு 2000 ரூபா கடன் கொடுத்த அடுத்த வினாடியே ஏகப்பட்ட போன் கால்ஸ். "உங்க இளகிய மனசுக்கு ரோட்டரி கிளப் விருது கொடுக்க போவுதாம்"னு எடுத்துவிட, அதையும் நம்பும் வேகாவுக்கு, "யாரோ உன்னை ஓட்டுறாங்கடி"ன்னு ஃபிரண்ட் போட்டுக் கொடுக்கிற வரைக்கும் தெரியலே. நம்மையே நம்ப வைக்கிற மாதிரி முகம்தான் வேகாவுக்கும்.
"இங்க மீனாட்சி. அங்கே யாரு"ன்னு அசால்டாக மொக்கை போடும் விமலுக்கு சினிமா கதவை அகல திறந்து வைங்கய்யா. "போற போக்க பார்த்தா நம்மளை சேர்த்து வைக்க மாட்டாய்ங்க போலருக்கு. பழகின பழக்கத்துக்கு ஒரு எல்ஐசியாவது போடேன்"னு இவரு கேட்கிற போது தியேட்டரே 'சிரிப்பொலி' ஆகிறது.
தமிழ் சினிமாவின் இன்னொரு பிரகாஷ்ராஜ்னு பாராட்டலாம் வாத்தியாரு ஜெயப்பிரகாஷை. வீட்டு சண்டை வீட்டோடு என்ற பெருந்தன்மையோடு மாணவனிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் அருமை. சிறு புருவத்திலும் நடிப்பை தேக்கி காட்டும் லாவகத்திலும் அசத்துராரு வாத்தியாரு. யாருய்யா அந்த போதும் பொண்ணு? குணச்சித்திர வேடத்துக்கு பொருத்தமாக கிடைச்சிருக்கும் குணசுந்தரி! நடிக்க வந்த எல்லா பொடிசுகளுக்கும் ஒரு உற்சாக உம்மா!
நடுரோட்டிலே முன்னேறி வந்து இரண்டு குடும்பமும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நடுவிலே புகுந்து போகும் 'அறிவிப்பு ஆட்டோ' ஒன்று "ஓரமாக நின்று சண்டை போடும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று ஒலிபெருக்குகிறது. இது மாதிரி படம் நெடுகிலும் ஏராளமான நகைச்சுவை பொட்டலங்கள்! ஆனால் இடைவேளைக்கு பிறகு 'திடீர் விக்ரமன்' ஆகி சென்ட்டிமென்ட்டை போட்டு தாக்கும்போதுதான் "என்ன வாத்தியாரே, என்னாச்சு?" என்று கேட்க வைக்கிறார் பாண்டி!
குழந்தைகளின் உலகமும், கலகமும் சிலேட்டு மாதிரி. எழுதிய அடுத்த வினாடிகளில் அழிக்கப்பட்டு விடலாம். ஆனால், ஜீவா நித்தியானந்தத்தின் கேரக்டரை ஒரு மினியேச்சர் நம்பியாராக தொடர்வதுதான் கொஞ்சம் நெருடல்!
ஜேம்ஸ் வசந்தனின் இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். யோக பாஸ்கர் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
தியேட்டருக்குள்ளே வந்த எல்லாரையும் அவரவர் கால்சட்டை உலகத்திற்கு திரும்பி போக வைக்கிறார் இயக்குனர். அதுதான் படத்தின் வெற்றியும் கூட!

GM India: Excluded From Parent's Bankruptcy

The Indian unit of General Motors Corp. said Monday it isn't included in a Chapter 11 bankruptcy protection filed by its U.S. parent and will continue its operations normally.

GM India will proceed with plans to introduce three new cars this year, including a minicar, and has no intention of cutting staff or stopping its expansion plans, the automaker said in a statement.

"GM India operations are not included in the U.S. filing for Chapter 11. Consequently, all GM India dealers, warranty and customer support services will remain unaffected and continue to function as normal," General Motors India Pvt. Ltd. said in a statement.

GM India has invested more than 50 billion rupees ($1.07 billion) in the past 14 years to build two factories in the western states of Gujarat and Maharashtra.

The Gujarat factory has an annual capacity of 85,000 vehicles, while the Maharashtra plant, which started operations last September, can currently produce 140,000 vehicles a year.
GM India is also investing more than $200 million to launch its first car engine and transmission factory in early 2010.

"We will remain aggressive in all areas of our business and continue to introduce new and exciting products...in order to contribute to our own long-term viability and the bottom-line of our company as a whole," said Karl Slym, president and managing director of GM India. "Our product programs and other plans for the future remain on track."

Mr. Slym said there are no plans to reduce the more than 4,000 workforce at GM India's two factories and its engineering, research and design center in the southern city of Bangalore.
"We are not going anywhere and we are here to stay for the long term," he said.
GM India currently produces six cars and sport-utility vehicles of the Chevrolet range, including the Spark minicar and Optra sedan.

General Motors files for bankruptcy protection



AP – General Motors CEO Fritz Henderson speaks at a press conference in New York, Monday, June 1, 2009

U.S. car giant General Motors (GM), once the world's largest company, has filed for bankruptcy protection, becoming the biggest industrial bankruptcy in U.S. history.

Speaking to the press in the wake of the bankruptcy announcement on June 1, U.S. President Barack Obama said the move was part of a "viable, achievable plan" that will give GM a chance to "rise again."

The move into bankruptcy protection has been backed by the U.S. administration, which will take a 60 percent stake in the company in exchange for $50 billion in financial aid. Obama said he hoped GM would emerge stronger from bankruptcy proceedings that are expected to take between 60 to 90 days:

"I'm confident that the steps I'm announcing today will mark the end of an old GM and the beginning of a new GM, a new GM that can produce the high-quality, safe, and fuel-efficient cars of tomorrow, that can lead America towards an energy-independent future, and that is once more a symbol of America's success," Obama said.

GM's decline and ultimate demise is seen by many as an illustrative example of failed economic policies and the inability of the U.S. auto industry to adapt to the rapidly changing global conditions requiring fuel-efficient cars.

The company was also crippled by its generous employment-benefits policies, which, unlike those of its Asian competitors, drained significant portions of its revenues.