Tuesday 26 January, 2010

சோழர் வரலாறு

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன.
சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி

Monday 25 January, 2010

2010 இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதம் பூஷண் விருது

இந்த ஆண்டிற்காக விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்டோ ர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமீர்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இளையராஜா மற்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரமாகாந்த பண்டா உள்ளிட்டோ ர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகை திவா ரேகா, அனு ஆகா, ஹாக்கி வீரர் இக்னேஷ் திர்கி, பார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன், பாட்மிடன் வீராங்கனை செய்னா நேவால் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் குரு ரமாகாந்த ஆச்ரேகர் உள்ளிட்டோ ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.

Sunday 24 January, 2010

ரூ. 1,700 கோடி முதலீடு: மாருதி சுஸýகி திட்டம்

ஜன.23: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸýகி நிறுவனம் ரூ. 1,700 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இரண்டாவது ஆலை மானேசரில் உள்ளது. இந்த ஆலையில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டு உற்பத்தி2.5 லட்சம் காராக உயரும். இந்த இலக்கு 2012-ம் ஆண்டில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இப்புதிய முதலீட்டு அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் சேத் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 687 கோடியாகும்.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 7,333.77 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்டதைக் காட்டிலும் 62 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் வருமானம் ரூ. 4,512.64 கோடியாகும்.
வாகன விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 2,18,910 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் மாருதி கார் விற்பனை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவாக லாபம் உயர்ந்துள்ளது. அதேபோல விற்பனையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் கார் விற்பனை அதிகரித்ததற்கு அரசு அளித்த வரிச் சலுகை முக்கியக் காரணம் என்று அஜய் சேத் கூறினார்.
மூன்றாம் காலாண்டில் நிறுவன ஏற்றுமதி 167 சதவீதம் அதிகரித்து 39,116 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 14,634 ஆகும்.
மாருதி நிறுவனத்தின் குர்காவ்ன் ஆலையில் ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மானேசர் ஆலை 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்நிறுவன கார் உற்பத்தி ஆண்டுக்கு 15 லட்சமாக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.

Saturday 23 January, 2010

2009 தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா

2008ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘ஃபேஷன்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.
இதேபோல் மராத்திய மொழிப் படமான ‘ஜோக்வா’வில் நடித்த உபேந்திரா லிமேய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
PTI PhotoFILEதேசிய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ‘நான் கடவுள்’ படத்தை இயக்கிய பாலா வென்றுள்ளார். இதே படத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய மூர்த்திக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன் வரிசையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நான் கடவுள்’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் சிறந்த ஜனரஞ்சகப் படமாக ‘ஓய் லக்கி! லக்கி ஓய்’ திரைப்படமும், சிறந்த படமாக ராகுல் போஸ் நடித்த வங்க மொழித் திரைப்படமான ‘அந்தாஹீன்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கினார்.
மதூர் பண்டார்க்கரின் ‘ஃபேஷன்’ படத்தில் நடித்த கங்கனா ரனவத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘ராக் ஆன்’ படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
கன்னட மொழிப் படமான ‘குப்பசிகலு’ (Gubbachigalu) சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றுள்ளது. பாலிவுட் படமான ‘ஹிந்தி மா’வில் நடித்த ஷாம்ஸ் படெலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 6 January, 2010

Volkswagen’s launces new car 'Polo'

The VW Polo is the company’s first small car in India, and will compete against A2 segment cars like the Suzuki Swift, Fiat Punto in India. The company has booked a 1500 sq. m. hall at the Auto Expo to show off its new cars and existing range.
Volkswagen Polo production started last week, and pre-series and trial production had started much earlier. There has been a lot of talk about the price of the Polo – that the company would have shock pricing that would make it an irresistible buy.

General Motors launches small car 'Beat'


Car major General Motors Monday launched its mini car "Chevrolet Beat" in India, priced between Rs.3.34 lakh and Rs.3.94 lakh ex-showroom in Delhi.