Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

Thursday, 19 May 2011

58வது தேசிய திரைப்பட விருதுகள் - தமிழுக்கு 14

தேசிய திரைப்பட விருதுகள் இன்று தில்லியில் அறிவிக்கப்பட்டன.
இதில், நடிகர் தனுஷ்க்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்கு கிடைத்துள்ளது.
ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது மற்றும் சிறந்த எடிட்டிங்குக்கான விருது கிஷோருக்குக் கிடைத்துள்ளது.
ஆடுகளத்தில் நடித்த ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது (படம் - தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.
எந்திரன் - சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.
எந்திரன் - சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.
சிறந்த தமிழ்ப் படம் - தென்மேற்கு பருவக்காற்று
மைனா படத்தில் நடித்த தம்பி ராமய்யாவுக்கு சிறந்த துணை நடிகர் விருது.
சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

Saturday, 9 October 2010

எஸ்.எஸ். சந்திரன் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னாள் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சந்திரன் அவர்கள், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் வெள்ளிகிழமையன்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் சந்திரன். அதன் பிறகு நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ். சந்திரன், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து இன்னாள் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ். சந்திரன்.
திரைப்படங்களில் மட்டுமன்றி, அரசியலிலும் ஈடுபாடு காட்டிய எஸ்.எஸ். சந்திரன், துவக்கத்தில் திமுகவில் செயல்பட்ட போதிலும், அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் எந்தப் பிரச்சினையிலும், தமிழிலேயே பேசி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன்.
திருவாரூரில் இருந்து அவரது உடல், சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sunday, 12 September 2010

திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம் , தமிழ், கன்னடம், தெலுங்கு , இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.
1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா. சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.
அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

Wednesday, 8 September 2010

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.
மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.
முரளியின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி. முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

Wednesday, 25 August 2010

போனிவர்மா பிரகாஷ்ராஜூக்கு திருமணம்

Wednesday, 25 August 2010, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளை யாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Friday, 14 May 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Saturday, 3 April 2010

அங்காடி தெரு - விமர்சனம்

நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஜாதி பசங்க... என ஊரில் இருந்து படிக்கற பசங்களை பாதியில் அழைத்து வந்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடிமைகளை விட கொடுமையாக நடத்தும் முதலாளிகளையும், அவர்களது ஏவல், கூவல் அதிகாரிகளின் முகத்திரைகளையும் கிழித்திருக்கும் வித்தியாசமான... அதேசமயம் விறுவிறுப்பான படம் அங்காடி தெரு!
கதைப்படி, சென்னையில் உள்ள ‌பெரி‌ய ஜவுளி மற்றும் பாத்திர, பலசரக்கு கடைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வேலைக்கு வரும் ஜோதிலிங்கத்துக்கும், அதே கடையில் அவனைப்போலவே விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் சேர்மக்கனிக்கும் முதலில் மோதல். அதன் பின் காதல். இந்நிலையில் மே‌னேஜரின் உருட்டல், மிரட்டலால் அதே கடையில் வேலைபார்க்கும் காதல் ஜோடி ஒன்று சித்ரவதைக்குள்ளாகிட, ஸ்பாட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கண்டு சேர்மக்கனியும், ஜோதிலிங்கமும் மிரள,,, ஒரு சமயம் அவர்களது காதலும் நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. அப்புறம்...? அப்புறமென்ன...., அடித்து உதைத்து மிரட்டி உருட்டி பிரிக்கப்படும் காதல் ஜோடி மீண்டும் இணைந்ததா, இல்லையா என்பது உருக்கமான மீதிக் கதை!
பகட்டான பலஅடுக்கு மாட மாளிகைகளின் ஏ.சி. அறையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்களின் வாழ்வியல் வேதனைகளையும், அவர்களது மற்றொரு புற சோக வாழ்க்கையையும் அலசி, ஆராய்ந்து அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் நிச்சயம் பெரிய டைரக்டர்தான்.

ஜோ‌திலிங்கமாக மகேசும், சேர்மக்கனியாக அஞ்சலியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஆரம்பத்தில் எழும் மோதல்களும் சரி, அதன்பின் வரும் காதலும் சரி., சபாஷ்... சரியான போட்டி என இருவரது நடிப்பாற்றலையும் மிக துல்லியமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது என்றால் மிகையல்ல! மகேஷ் - அஞ்சலி மட்டுமல்ல... அவர்களது நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காதலன் வேசி மகள் எனக் கேட்டதால் அத்தனை‌ பேர் கண் முன்னே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் தோழி அஞ்சலியின் த‌ங்கையாக ஒருசில காட்சிகளே வந்தாலும், உயர் சாதியினரின் ஆச்சாரம் அனுஷ்டானத்தால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அனுபவிக்கும் கொடுமையை தோலுரித்து காட்டிட உதவிடும் கேரக்டர், பெரிய ஸ்‌டோர் முதலாளிகளுக்கு போட்டியாக பிளாட்பார்மில் கடை நடத்திடும் இஸ்லாமிய பெரியவர், முட்டை முழியும் - சோடா புட்டி கண்ணாடியுமாக வக்ரமும், ஆக்ரோஷமும் ஒரு‌ங்கே கொண்ட ஸ்டோர் முதலாளியாக இருக்குனர் ஏ.வெங்கடேஷ் கடை உரிமையாளர் அண்ணாச்சியாக பழ.கருப்பையா, ஸ்டோர் விளம்பரத்திற்காக நடிகையாகவே சில காட்சிகளில் வரும் சினேகா, குள்ள மனிதனின் உயர்ந்த பிள்ளைதாச்சி மனைவியாக வந்து ரசிகர்களின் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடிக்கும் சிந்து என ஒவ்வொரு பாத்திரமும் கேரக்டராகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்தனைக்கும் காரணம் இயக்குனர் என்பதும் புரிகிறது.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என இரண்டு இசையமைப்பாளர்களின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையும் நல்ல நாதம். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்!

Saturday, 23 January 2010

2009 தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா

2008ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘ஃபேஷன்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.
இதேபோல் மராத்திய மொழிப் படமான ‘ஜோக்வா’வில் நடித்த உபேந்திரா லிமேய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
PTI PhotoFILEதேசிய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ‘நான் கடவுள்’ படத்தை இயக்கிய பாலா வென்றுள்ளார். இதே படத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய மூர்த்திக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன் வரிசையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நான் கடவுள்’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் சிறந்த ஜனரஞ்சகப் படமாக ‘ஓய் லக்கி! லக்கி ஓய்’ திரைப்படமும், சிறந்த படமாக ராகுல் போஸ் நடித்த வங்க மொழித் திரைப்படமான ‘அந்தாஹீன்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கினார்.
மதூர் பண்டார்க்கரின் ‘ஃபேஷன்’ படத்தில் நடித்த கங்கனா ரனவத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘ராக் ஆன்’ படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
கன்னட மொழிப் படமான ‘குப்பசிகலு’ (Gubbachigalu) சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றுள்ளது. பாலிவுட் படமான ‘ஹிந்தி மா’வில் நடித்த ஷாம்ஸ் படெலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 11 December 2009

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா- 9 நாட்கள் நடக்கிறது

சென்னை: இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் இந்தாண்டு சர்வதேச திரைப்பட விழா சென்னை யில் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி தங்கராஜ் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
சென்னையில் இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் 7வது திரைப்பட விழாவை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க நாளன்று ஸ்பெயின் நாட்டு சினிமா திரையிடப்பட உள்ளது. விழாவில் மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.
பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கேன்ஸ் பட விழாவில் திரையிடப் பட்ட சில படங்களும் திரையிடப்படும். ஜெர்மனி இயக்குநர் ரோலான் ரிபர் பற்றி ஆய்வு நடைபெற உள்ளது.
விழாவில் வெளிநாட்டு இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் அமல் செய்யப்பட உள்ளது. 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பொக்கிஷம்', 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சலுகை அளிக்கப்படும் என்றனர்.

Tuesday, 29 September 2009

ஆர்த்தி-மாஸ்டர் கணேஷ் அக். 23ல் குருவாயூரில் திருமணம்

சி‌னிமா ம‌ற்று‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் நகைச்சுவை பா‌த்‌திர‌ம் ஏ‌ற்று நடி‌க்கு‌ம் நடிகை ஆர்த்தியும் நடிகர் மாஸ்டர் கணேசும் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்கள் திருமணம் அக்டோபர் 23-ந் தேதி குருவாயூ‌ர் கோவிலில் நடக்கிறது.
ஏராளமான தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கும் ப‌ல்வேறு படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் மாஸ்டர் கணேசுக்கும் காதல் ஏ‌ற்ப‌ட்டு அது ‌திரு‌மண‌த்‌தி‌ல் முடி‌கிறது.
இவ‌ர்களது காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்ட இருவரது பெ‌ற்றோ‌ர்க‌ள் கல‌ந்து பே‌சி அக்டோபர் 23-ந் தேதி கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் ‌திருமண‌த்தை நட‌த்த முடிவெடு‌த்து‌ள்ளன‌ர். மணமக்க‌ள் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. மணமகள் ஆர்த்தி நடித்து கொண்டே ஐ.ஏ.எஸ். படித்து வருகிறார். இதுவரை 3 முறை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியிருக்கிறார்.
த‌ங்களது காத‌ல் ‌திருமண‌ம் ப‌ற்‌றி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ஆ‌ர்‌த்‌தி, நானு‌ம் கணேசு‌‌ம் ‌சி‌ன்ன‌த்‌திரை‌யி‌ல் இணை‌ந்து ப‌ணியா‌ற்று‌கிறோ‌ம். எங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறோம். திருமணத்திற்கு பிறகும் நான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என்.எஸ்.கிருஷ்ணன்-மதுரம், தங்கவேலு-சரோஜா ஜோடிகளை போல் நானும் கணேசும் சிறந்த நகைச்சுவை ஜோடியாக திரையுலகில் வாழ்ந்து காட்டுவோம் எ‌ன்று நடிகை ஆர்த்தி கூறினார்.

Saturday, 15 August 2009

பொக்கிஷம் - விமர்சனம்

Movie - Pokkisham, Director - Cheran
Producer - Hitesh Jabak, Music - Sabesh Murali,
Cast - Cheran, Padmapriya, Vijayakumar
Rate -
தொடர்ந்து வறண்ட திரைப்படங்களாகப் பார்த்துச் சலித்துப்போய் பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு பொக்கிஷம் பார்க்கப் போனால்... ஒரு நல்ல சிறுகதையை ஜவ்வாக இழுத்து பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்திருக்கிறார் சேரன்.
லெனின் பாத்திரத்தில் சேரன் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எழுபதுகளில் ஆரம்பமாகிறது கதை. இறந்துபோன சேரனின் டைரி மற்றும் கடிதங்களை அவர் மகன் படிக்க ஆரம்பிக்கும்போது, ப்ளாஷ்பேக் துவங்குகிறது.
காதல் நினைவுகள்... அதுவும் தோற்றுப் போன காதல் நினைவுகளை எத்தனை சுவாரஸ்மாகச் சொல்லியிருக்கலாம்... ம்ஹூம்... சேரனிடம் அந்த ஆட்டோகிராப் டச் இந்தப் படத்தில் நூறு சதவிகிதம் மிஸ்ஸிங்.
எழுபதுகளில் இருந்த 'கல்கத்தா', ட்ராம் வண்டிகள், கார்கள், தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மைக்கூடு, பேனா முனை, தபால் முத்திரை... இப்படிப் பார்த்துப் பார்த்து காட்சிகளுக்குத் தேவையான பின்னணியை கச்சிதமாக வடித்த சேரனால் அழுத்தமான காட்சிகளை அமைக்க முடியாமல் போயிருக்கிறது.
ராஜேஷ்யாதவின் காமிராவும், வைரபாலனின் கலை இயக்கமும் முதல் தரம்.
தான் தரும் எல்லாமே நல்ல படைப்புகள்தான்... அதை மக்களுக்கு ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை இயக்குநர் சேரன் தவிர்க்க வேண்டும். பாத்திரங்களின் இயல்பைத் திரித்து, தனக்கேற்ப அதைச் சிதைக்கும் நடிகர் சேரன் மாறியாக வேண்டும்.
காரணம், சேரன் என்ற கலைஞனுக்குள் இன்னும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கும் கலைப் படைப்புகள் இந்த தமிழ் சினிமாவுக்கு நிறைய தேவைப்படுகிறது!.

Sunday, 9 August 2009

சிந்தனை செய் - விமர்சனம்

Movie - Sindhanai Sei
Director - Yuvan
Music - Thaman.
Cast - Yuvan, Bala, Seshanth, Nithish Kumar, Sabi, Madhu Sharma, Dharsha
Rate -

யுவன், நித்திஷ், பாலா, செஷாந்த், சபி ஆகிய ஐவரும் மேற்படி நடு பெஞ்ச் மாணவர்களாக ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் படித்து பெரியவர்களானவர்கள். சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைப்பு நடத்தும் ஐவரும் ஒரு கட்டத்தில் மொத்தமாக கொள்ளையடித்து பெரிதாக செட்டிலாக திட்டமிடுகின்றனர். அதன்படி ஒரு பெரிய வங்கியில் ஐந்து கோடி கொள்ளையடிக்கும் ஐவரும், பணத்தாசையில் ஒருத்தரை ஒருத்தர் தீர்த்துக் கட்ட முயன்று, அதில் யார் வெற்றி பெறுகின்றனர், அப்படி வெற்றி பெறுபவர் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்பது சிந்தனை செய் படத்தின் சிந்தனை செய்ய வேண்டிய மீதிக்கதை! இதனூடே யுவன் - மதுசர்மாவின் காதல் கல்யாண கலாட்டாக்களையும் கலந்து கட்டி பிரமாதமாக கதை சொல்லி இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முதல் நாயகனாக நடித்தும் இருக்கும் ஆர்.யுவன்.
ஐந்து நாயகர்கள், நாயகி மதுசர்மா மாதிரியே காதல் தண்டபாணி, மயில்சாமி, கோட்டை குமார், அண்ணாத்துரை கண்ணதாசன், சபியின் மனைவியாக வரும் தர்ஷா உள்ளிட்ட அனைவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு.
டூ வீலரில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவரிடமும், காரில் காதலியுடன் வந்து மாட்டுபரிடமும் இந்த நடந்து கொள்ளும் முறையிலேயே இவர்களது குணாதிசயங்களை புட்டு புட்டு வைத்து விடும் இயக்குனர், இறுதியில் இப்படி ஒரு கொள்ளையையும், இத்தனை கொலைகளையும் யுவன் செய்வதற்காக கூறும் காரணத்தையும், அதன்பின் அவனுக்கு நிகழும் கொடூரத்தையும் மிக அழகாக படம் பிடித்து முன்னணி இளம் இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விடுகிறார் யுவன். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து தர பெரிதும் ஒத்துழைக்கின்றனர் இசையமைப்பாளர் தமன்.எஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீபவன் சேகர், படத்தொகுப்பாளர் கே.தணிகாச்சலம் உள்ளிட்ட அனைவரும்.
இப்படத்தில் பங்குபெற்றுள்ள ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவராலும் சிந்தனை செய் ஒவ்வொரு ரசிகனின் சிந்தனையையும் தூண்டச் செய்யும் படமாகும்.

Saturday, 8 August 2009

Prakash Raj Marries Mahila Rajyam Chief Shobha Rani

A Telugu news channel turned out to be a reason behind flutter at Kollywood and Tollywood after it carried non-stop reports that Prakash Raj has married Shobha Rani, the chief of Mahila Rajyam.
Other reports also claimed that, Shobha Rani, being a censor board member, had known the actor and that she had even distributed a couple of his flicks which bombed at the box office.
Meanwhile, circles close to the actor and the woman politician denied the reports and dubbed them as mere rumours.

Elesh Parujanwala is the Rakhi Sawant Ka Swayamvar Winner

Rakhi Sawant choosing Toronto-based Elesh Parujanwala as her life partner in NDTV Imagine’s Rakhi ka Swayamvar.
The show had started with 16 contestants and after 26 episodes there were three remaining men standing.
At the finale held at the Hotel Leela Kampinsky in Mumbai, Rakhi looked the perfect bride dressed in a red and gold lehenga-choli designed by Neeta Lulla. The prospective grooms were dressed in traditional sherwanis and turbans; in fact all that was missing were the saat phere.
With the audience cheering and clapping, Rakhi garlanded Elesh, thereby signaling her decision to become engaged to him. The happy couple exchanged vows of commitment and rings as well as romantically saying ‘I love you’ to one another.
In making her choice Rakhi said, "I have been watching Elesh from day one. On and off the camera, he has been the same and has really taken care of me. He is everything I was looking for and I am glad to have found him on the Swayamvar. The swayamvar means finding a jeevan saathi and I have found Elesh."
"Today is our engagement. I am ready to get married now, but we need to understand each other better off camera. We will soon get married in front of all of you in keeping with all our traditions," Rakhi said after announcing her choice to a waiting audience across the country.

Friday, 7 August 2009

Malayalam Actor Murali Died at 55!

Aug 8: Murali one of the leading Malayalam actor died at 55 years at a hospital in Thiruvanathapuram. According to actor Murali’s close family sources that actor was suffered from diabetics and was under treatment for years but the situation goes serious this evening.
Actor Murali was popular in cine industry with his versatile acting and he was awarded as a best actor in 2002 for the movieNeythukaran“.
Actor Murali begins his careerin Malayalam industry but with his multitalented acting he appeared in other languages like Tamil as well. More than this he was also the Chairman of the Kerala Sangeeth Natak Academy.
He was survived by his wife and a daughter. All of us Hearty condolences to the great artist. May his Soul Rest in Peace.

Wednesday, 29 July 2009

பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் காலமானார்

ஜூலை.29: சிறிதுகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபல மலையாள நடிகர் ராஜன் பி.தேவ் இன்று அதிகாலை கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 58.

ராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.


ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.

Tuesday, 21 July 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்

Movie - Achchamundu Achchamundu
Director - Arun Vaidyanathan
Music - Karthik Raja
Cast - Prasanna, Sneha, John Shea
Rate -
இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகம் நடைபெறுகின்றன என்பதை சொல்ல வந்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் தமிழ்படம்!
கதைப்படி, அமெரிக்கா - நியூஜெர்சி புறநகர் பகுதியில் வசிக்கும் தமிழ்குடும்பம் பிரசன்னா- சினேகாவினுடையது. தங்களது செல்லமகள் அக்ஷயாதினேஷுடன் வசிக்கும் அவர்கள் வீட்டிற்குள் பெயிண்டர் ரூபத்தில் அடியெடுத்து வைக்கிறான் குழந்தை பாலியல் கொடூரம் புரியும் அமெரிக்கன்- வில்லன் ஜான்ஷே! அமெரிக்கன், இந்தியன், தமிழன் என்ற பாகுபாடில்லாமல் பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளும் ஜான்ஷே, பிரசன்னாவின் பெண் குழந்தை அக்ஷயாவையும் அடையத்துடிக்கிறான். அவனது ஆசை வென்றதா? அல்லது அவனை பிரசன்னா கொன்றாரா? என்பது மீதிக்கதை!
மேக்கப்பும், மீசையும் இல்லாமல் பிரசன்னா அமெரிக்காவாழ் தமிழராகவே அசத்தியிருக்கிறார். குழந்தை மீதான பாசத்திலும் சரி, மனைவி சினேகா மீதான காதலிலும் சரி நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். வில்லனுடன் மோதி குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில் கூட பிரசன்னா புதிய பரிமாணம் காட்டி பிரமிப்பூட்டுகிறார். கீப் இட் அப்! சினேகாவும் பிரமாதம்!
பிரசன்னா - சினேகா இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் அமெரிக்க வில்லன் ஜான்ஷே என்றால் மிகையல்ல. குழந்தைகள் மீது அப்படி ஒரு விரகதாபம் கொள்வதாக நடிக்க ஜான் ஷாவால் மட்டுமே முடியும்! என சொல்ல வைத்து விடுகிறார் இந்த ஹாலிவுட் நடிகர். குழந்தை நட்சத்திரம் அக்ஷயாதினேஷûம் பிறற அமெரிக்கா வாழ் இந்தியர்களும்கூட பேஷ் பேஷ் சொல்ல வைத்து விடுகின்றனர்.
கிரிஸ் ப்ரெய்லிச்சின் "ரெட் ஒன்' காமிரா ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்திற்கு பலம் என்றாலும் முழுக்க முழுக்க அமெரிக்க பின்னணி சற்றே பலவீனம். அதுவும் இந்தியாவில் குழந்தை பாலியல் கொடூரங்கள், குற்றங்கள் ஜாஸ்தி எனக் க்ளைமாக்ஸில் கூற முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படம் எடுத்திருப்பது "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை அந்நியப் படுத்துகிறதென்றால் மிகையல்ல!
அருண் வைத்யநாதனின் எழுத்தும் இயக்கமும் ஒரு "ஏ' கிளாஸ் பிரச்னையை பி.சி. சென்டருக்கும் புரிய வைக்க முயற்சித்துள்ளன என்றால் மிகையல்ல! ஆனால், அதற்கான களம் அமெரிக்காவாக இருப்பது சில இடங்களில் பலம்! பல இடங்களில் பலவீனம்!! மொத்தத்தில் "அச்சமுண்டு அச்சமுண்டு' உலகத்தில் மனிதர்கள் "இப்படியும் உண்டு! என குழந்தை பாலியல் கொடூரர்களை அடையாளப்படுத்தி அறை கூவல் விடுத்துள்ளது!

Friday, 3 July 2009

நாடோடிகள் - விமர்சனம்

Movie - Nadodigal
Director - Samuthirakani
Music - Sundar C Babu
Cast - Sasikumar, Vijay, Bharani, Ananya, Neha, Abhinaya, Shanthini, Ganja Karuppu
Rate -
உன் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே! டைட்டில் கார்டு முதல் கடைசி சீன் வரை நட்புக்கு நம்பிக்கை கொடி பிடித்திருக்கிறார்கள். சுப்ரமணியபுரம் சசிகுமாரும் நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியும்!
இதெல்லாம் நமக்கு அசால்ட்டு மச்சி... என்கிற மாதிரியான அலட்சியமும் நம்பி வந்தவனுக்கு பிரச்னை என்றால் வரிந்து கட்டுகிற கிராமத்து கரிசனமும் சசிகுமாருக்கு அழகாய் கை கூடுகிறது.
முறைப்பெண்ணை திருமணம் செய்து தர நிபந்தனை போடுகிற மாமாவிடம் பதிலுக்கு உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு மாமா... என பிரேம்ஜி ஸ்டைலில் சசி அடிக்கும் டயலாக் அக்மார்க் மதுரை குசும்பு.
அத்தானின் வறட்டு தாடியை வலிக்காமல் பிய்த்து வாயில் போட்டுக்கொள்ளும் அனன்யாவின் காதல் பாவனைகள் ச்சோ ஸ்வீட். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துகிற கேரக்டருக்கு விஜய் சரியான பொருத்தமென்றாலும், காதலி அபிநயாவை சர்வ சாதாரணமாக மடிப்பது நம்பும்படி இல்லீங்கண்ணா. எப்போதும் நண்பர் கூட்டத்தில் கலகலப்புக்கு கேரன்ட்டி தருகிற வெள்ளந்தி பையனாக கல்லூரி பரணி கலக்கியிருக்கிறார்.
காதல் திருமணத்துக்கான ஆள் கடத்தல் வைபவத்தில் மொக்கை பிகருக்காகல்லாம் என்னால ரிஸ்க் எடுக்க முடியாதுடா... என அலம்பல் செய்து காமெடி, சரவெடி..! தடதட தறி ச்சத்தத்துடன் காட்டப்படுகிற பரணியின் குடும்ப பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் கதையை உண்மை சம்பவமாக உயர்த்துகிறது.
திடீர் பரபரப்பையோ, சஸ்பென்ஸையோ நம்பாமல் காதலுக்காக ஒரு கடத்தல், அவசர கல்யாணம் என மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.காதல் கல்யாணம் நடத்தி வைக்கிற நண்பர்களுக்கு ஏற்படும் இழப்புகளை காட்டியிருப்பதும் தமிழுக்கு புதுசுதான்.
விஜய்க்கு அப்பாவாக வரும் அந்த நடுத்தர வயது நபர், விளம்பர விரும்பியாக வந்து கிச்சுகிச்சு மூட்டும் நமோ நாராயணன் என சின்ன சின்ன கேரக்டர்கள் நம்மை வசீகரிக்கின்றன. இந்த மண் வாசனை கதைக்கு துளியும் பொருத்தமில்லாமல் பெண் அரசியல்வாதி கேரக்டர் ஓவராக கர்ஜிப்பது மட்டும் மகா டார்ச்சர்.ரத்தம் சிந்தி நடத்தி வைத்த காதல் கல்யாணம் அபத்தமாக அல்பாயுசில் முடிவது சற்றும் எதிர்பாராத சுவாரஸ்யம். ஆனால் அரிசி கடத்தல், ஈவ்டீசிங் ரேஞ்சுக்கு அதற்கு எதிராக பில்டப் வசனங்கள் தேவையா? தவிர்த்திருக்கலாம்.
நாடோடிகள் : நம் மனதில் நிரந்தர வீடு கட்டுகின்றனர்.

Saturday, 20 June 2009

விமர்சனம் - குளிர் 100 டிகிரி


Movie - Kulir 100 Degree
Director - Anita Udeep
Music - Bobo Sasi
Cast - Sanjeev, Aditya, Riya
Rate -
தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் சக நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்கும் மாணவனான சூர்யாவுக்கு ஏற்படும் நிலையை குளிரக் குளிரச் சொல்ல வந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் அனிதா உதீப்.
பள்ளியல் மாணவர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்களும், நட்பும், நேசிப்பும்தான் கதையின் மையம். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அழகிய குளிர் பிரதேச உயர் வகுப்பினர் மட்டுமே படிக்கும் லேக் வியூ மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்க வருகிறான் மிகப்பெரும் ரவுடியான ஆறுமுகத்தின் மகன் சூர்யா. (பிந்துகோஷை ஞாபகப்படுத்தும்படியான) “பப்ளு'வின் உதவியால் சூர்யா ஜெயிக்க, கோபத்தின் உச்சியில் பப்ளூவை கொன்று விடுகின்றனர், ரோஹிந்தும் அவனது நண்பர்களும். அதன் பிறகு சூர்யா என்னவானான் என்பதே படத்தின் மீதிக் கதை.
சூர்யாவின் தாயாக வருபவர், சூர்யாவின் காதலியான தான்யா இருவர் மட்டுமே படத்தின் பெண் கதாபாத்திரங்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் தங்கள் பாத்திரத்தை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கிக் கொள்கின்றனர். அடுத்த சபாஷ் கலர்ஃபுல்லான அதே சமயத்தில் சரியான ஆடை வடிவமைப்பும், ஒளிப்பதிவும் செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு!
இயக்குநர் லாஸ் ஏஞ்சல்ஸில் மூன்று வருட ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு, அமெரிக்காவின் பிரமாண்ட இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீலபெர்க்கின் கம்பெனியில் வேலை செய்தவராம். ஆனாலும் கதையும், அதை வழிநடத்தும் திரைக்கதையும் தெளிவில்லாமல் போனதால் வெறும் அழகியலோடு மட்டுமே படம் முடிந்து போவதும், முடிவை சரியாக சொல்ல தெரியாமல் விட்டிருப்பதும் படத்தின் மைனஸ்.

வேலைக்கார பெண்ணை கற்பழித்த பாலிவுட் நடிகர் கைது

வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த வழக்கில் பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அகுஜா. திருமணம் ஆனவர். மும்பை ஓஷிவாரா பகுதியில் இவரது வீட்டில் இவர் வீட்டில் 18 வயது பெண் வேலை செய்து வந்தார்.
வீட்டில் தனியாக இருந்த வேலைக்கார ‌பெண்ணை நடிகர் ஷைனி கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில் பெண்ணை கற்பழித்தது நடிகர் ஷைனிதான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ஷைனி அகுஜா கைது செய்யப்பட்டார். மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஷைனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடிகர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.