Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Thursday, 13 January 2011

தமிழக மீனவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி சூடு குறித்த விவரங்களை இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரியுள்ளார். கதாப்பட்டிணம் மீனவர் பாண்டியன் நேற்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் தமிழக மீனவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.  நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன்கள் மணிகண்டன், மணிவண்ணன் ஆகியோரும் மீன் பிடிப்பதற்காக புதன்கிழமை காலை ஜகதாப்பட்டினத்திலிருந்து கடலுக்குள் விசைப் படகில் சென்றனர்.
 இந்திய கடல் எல்லைக்குள் 14 "நாட்டிக்கல்' மைல் தொலைவில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இதில் பலத்த குண்டுக் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால், ஜகதாப்பட்டினம் கடற்கரையில் பரபரப்பு நிலவுகிறது.

Friday, 10 December 2010

சீமான் இன்று விடுதலையானார்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையானார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்தனர்.
இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான தொண்டர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், தலைவர்களும் வேலூர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

Saturday, 17 July 2010

சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 7 August 2009

செல்வராசா பத்மநாபன் கைது, கொழும்பு கொண்டுவரப்பட்டார்

ஆக.7: செல்வராசா பத்மநாபன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அவர் விசாரணைக்காக ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'பத்மநாதன் தற்போது இலங்கையில் உள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்புகள் குறித்து விரைவில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்தார்.
பிரபாகரனுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என தம்மை அறிவித்துக்கொண்ட 54 வயதான பத்மநாதன் இலங்கைக்கு நேற்று நள்ளிரவு பாங்காக் வழியாகக் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். 'கேபி' எனப் பலராலும் அழைக்கப்பட்ட பத்மநாதன் சர்வதேச போலீசின் தேடுதல் பட்டியலில் இருந்தவர்.
விடுதலைப்புலிகளை ராணுவம் முற்றிலுமாக நெருங்கியபிறகு, அவ்வமைப்பின் சர்வதேச அமைப்பாளராக பத்மநாதன் நியமிக்கப்பட்டார். பிரபாகரன் இறந்ததை புலிகள் தரப்பில் பத்மநாதன்தான் முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என அறிவித்துக்கொண்டார்.
முன்னதாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. எனினும் தாய்லாந்து அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பத்மநாதன் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டு பாங்காக் வழியாக கொழும்பு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.
தமிழர் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மீண்டும் உருவெடுக்கும் பயங்கரவாதத்தை எந்தவகையிலும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, 23 July 2009

விடுதலைப் புலிகள் தலைவராக செல்வராஜா பத்மநாதன் நியமனம்

ஜூலை 21: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக செல்வராஜா பத்மநாதன் என்ற குமாரன் பத்மநாதன், செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
"கே.பி.' என்று அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவது மற்றும் ஆயுங்களை கொள்முதல் செய்து தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இவர் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை.


Wednesday, 10 June 2009

In 3 months 53215 Tamilians killed in Vanni

வன்னியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 53,215 தமிழர்கள் படுகொலை: பிரித்தானிய தமிழர் பேரவை
[செவ்வாய்க்கிழமை, 09 யூன் 2009, 05:42 மு.ப ஈழம்] [பிரித்தானிய நிருபர்]


வன்னியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 215 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போய் உள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட பாரிய இனப்படுகொலையின் போது 53 ஆயிரத்து 215 தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் திரட்டப்பட்ட நம்பகரமான தகவல்களின் அடிப்படையிலும் அரச மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபூர்வ வெளியீடுகளின் அடிப்படையிலும் இந்த செய்தியை பேரவை வெளியிடுகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வன்னி மண்ணில் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்ததை அரச அதிபரின் அறிக்கைகளும் அந்தப் பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.
ஆனால், தற்போது அகதி முகாம்களில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 மக்கள்தான் எஞ்சியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் எமது மக்கள் பாரிய தொகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என அஞ்சுகின்றோம்.
மேலும் அனைத்துலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்குள் வந்து வதை முகாம்களுக்குள் வாடிய 13 ஆயிரத்து 130 அப்பாவித் தமிழர்கள் காணாமல் போய் விட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் எமது உறவுகளில் 53 ஆயிரத்து 215 பேரை மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஒரு குறுகிய காலப்பகுதியில் இழந்து நிற்கின்றோம்.
காணாமல் போயுள்ள 13 ஆயிரத்து 130 தமிழர்களை மீட்டுத் தருக!
அரச கட்டுப்பகுதிக்கு சென்றடைந்த மக்களில் 13 ஆயிரத்து 130 பேர் காணாமல் போய் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. இந்த நிலையில் இந்த மக்களை மீட்டுத்தருமாறு பேரவை அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அரசியல் அதிகார ஆசனங்களில் உள்ளவர்கள் காணாமல் போய் உள்ள மக்களை மீட்டுத்தருவதில் காத்திரமான பங்கை செய்யமுடியும் என பேரவை நம்புகின்றது.
இந்தப் பணியில் நாம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களுக்கு தேவையான சகலவற்றையும் பொறுப்பேற்பது தமிழர் அனைவரினதும் தலையாய கடமையாகும்.
ஐக்கிய நாடுகள் சபை
ருவாண்டாப் படுகொலைகள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட போது மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் நீதி வழங்கி அதன் மூலம் உலகில் பிரசித்தி பெற்றவரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், தற்போது இலங்கையின் இனப் படுகொலைகளை நீதியின் முன்நிறுத்தப் பாடுபட்டு வருகின்றார்.
அப்படி ஒரு நீதி விசாரனை நடைபெற்றால் இந்த பாரிய படுகொலைகளின் சகல பங்காளர்களும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆகவேதான் அம்மையாரின் முயற்சியை இந்த நாடுகள் தடுத்து நிறுத்துவதில் முன்நின்று பாடுபடுகின்றன.
இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகளின் ஆசீர்வாதத்தினால் சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை இயலாததொன்றாகி விட்டது. ஆனாலும் உலகின் நீதியை நிலைநாட்டுவாதில் அம்மையாரின் நேர்மை பாராட்டத்தக்கதாகும்.
அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயளாளர் திரு. பான் கி மூன், அவருடன் உள்ள அதிகாரிகள் திரு. நம்பியார் மற்றும் திரு. ஹோம்ஸ் ஆகியோரும் மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தை குறைத்து வெளியிடுவதாக வரும் செய்திகளை பேரவை கவலையோடு நோக்குகின்றது.
பிரித்தானிய மக்களுக்கான வேண்டுகோள்!
இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒன்றாக எமது சக்தியினைத் திரட்டி எமது மக்களுக்கு நடந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்யவேண்டும்.
காணாமல் போதலை உடனடியாக தடுக்க வேண்டும்; வெளியேறிவந்த மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக சமூகம் பொறுப்பேற்று அவர்களின் இயல்பு நிலை வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரவேண்டும் என வலியுறுத்தவேண்டும்.
இந்த பாரிய படுகொலையை உலகறியச் செய்வதோடு, காணாமல் போய் உள்ளதாகக் கூறப்படும் மக்களை மீட்க அனைத்துலகத்தை வலியுறுத்தவும், முள்வேலியின் பின்னால் நிற்கும் மக்களின் அவலத்தைப் போக்க ஆவண செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி மாபெரும் பேரணியை பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பேரணி எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் நாள் சனிக்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மரணித்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தவும் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்கவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் பேரவை அன்போடு அழைக்கின்றது.
முள்வேலியின் பின்னால் நின்று எமது மக்கள் புலத்தினைப் பார்த்த வண்ணம் உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 8 June 2009

Eelam struggle will continue - Seeman


பெங்களூர், ஜூன் 7: தமிழீழ விடுதலைப் போராட்டம் இனிமேல்தான் தீவிரமடையும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கொன்றுகுவித்த அந்நாட்டு அரசையும், இந்திய அரசையும் கண்டித்தும், போரால் பாதிக்கப்பட்ட பட்டினியால் வாடும் தமிழர்களுக்கு மனித சமுதாயம் உதவவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெங்களூர் கிழக்கு ரயில்நிலையம் அருகே மைதானத்தில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் (க.த.ம.இ.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரைப்பட இயக்குநர் சீமான் பேசியதாவது:
புலிகளுடன் இறுதிக் கட்டப் போர் என்று கூறி சுமார் 25,000-க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கூண்டோடு படுகொலை செய்துள்ளது.
இதுபோல பெருங்கொடுமை எங்கும் நடக்கவில்லை. போரில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் இறந்துவிட்டார் என அந்நாட்டு அரசு பொய்ப்பிரசாரம் செய்து வருகிறது.
போரில் வென்றுவிட்டோம்; புலிகள் ஒழிந்தார்கள் என்று ராஜபட்ச மார்தட்டிக்கொள்கிறார். ஆனால், இனிமேல்தான் தமிழீழப் போராட்டம் தீவிரமடைப்போகிறது.
போரில் தமிழர்கள் வசித்த நிலப்பரப்பை பறித்திருக்கலாம். ஆனால், ராஜபட்சவால் தமிழர்களின் ஈழக் கோரிக்கை பறிக்க முடியாது. இலங்கையில் போரை நிறுத்துமாறு இந்தியாவும், பிற நாடுகளும் அழுத்தமாகக்கூறி நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
குடும்பமே அழிந்தாலும் தமிழீழத்துக்காக தொடர்ந்து போராடினார் பிரபாகரன். ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், தமிழினம் அழிந்தாலும் என் குடும்பம் வளர பாடுபடுவேன் என்கிறார்கள். கர்நாடகத் தமிழர்களிடத்தில் உள்ள தமிழ் உணர்வுகூட தமிழக தலைவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் தமிழினத்தை அழிக்க ஆயுதங்களை வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.
முன்னதாக க.த.ம.இ. தலைவர் சி.ராசன் தலைமையேற்று உரையாற்றுகையில், "தமிழக கட்சித் தலைவர்களும், தமிழர்களும் சரியான அணுகுமுறையுடன் போராடியிருந்தால் இலங்கையில் என்றைக்கோ தமிழீழம் மர்ந்திருக்கும்' என்றார்.
மனித சங்கிலி பேரணியில் பெரியார் திராவிடர் கழகத்தினர், பெங்களூர் மக்கள் நலச்சங்க செந்தில்குமார், விடியல் நூலக அமைப்பினர், கன்னட-தமிழர் ஒற்றுமை கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

Monday, 25 May 2009

Why only Kosova not for tamil Eelam


Friday, 22 May 2009

Wll be equal rights their for Tamilians ??


Tamilians are spreaded in coastal area.

Will be their equal rights given to them?

India has confirmed to help for re-structuring,

we will hope those funds are properly used.

Pic shows the Tamilians spread.

These people should be treated equally.

They should be shared in power.

These changes will not be done by Lankans

unless their is stress from rest of the world.

We will pray for them.

Wish this should be real


Pic from Nakeeran magazine

Wednesday, 20 May 2009

Final pic of the Tiger


Prabaharan's photo exposed by Srilankan after his death.






Tuesday, 19 May 2009

25 yrs of war came to end today

Prabaharan the legend, warrior had been confirmed as death today by Srilankan army.

Video & photo are shared to the world. Still hope is thier, he be alive & news will be false.
His commitment towards seperate country for Tamilians in Srilanka is extrodinary. He developed his own Government in Mullai island & has latest technology to drive. He developed army, navel & airforce too for protect his people. Atlast all hard work came to an end & who will give equal rights to Tamilians in Srilanka??

Some of his persnol pics are attached.

















1st - With his wife
2nd - During his marriage
3rd - With his family