Wednesday 28 July, 2010

Nokia X6 8GB in India for 14,499 INR

Nokia continues to flood the Indian markets with new phone launches. The latest entrant in the lineup of new phones from Nokia is the X6 8GB. Priced at Rs. 14,499, the official announcement of the X6 8GB was made on Twitter by Nokia.
The device has a 3.2 inch capacitive touch screen with an aspect ratio of 16:9. It packs in a 5MP camera with dual LED flash and supports TV out and online share options. The X6 8GB runs on Symbian OS S60 5.0 and has Bluetooth, USB, WLAN connectivity features.
Basically a music phone, the X6 8GB plays various music formats like MP3, SpMidi, AAC, AAC+, eAAC+, WMA and MTP. It plays 35 hours of music and 4.5 hours of video. The talk time of the phone scores at 11.5 hours on GSM and 6 hours on 3G.
With other Nokia phones like C3, C6, E5 coming to Indian market soon, looks like it's raining phones for the Indian consumer who can well be spoilt for choice.

Tuesday 20 July, 2010

லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!

லண்டன்: உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

Saturday 17 July, 2010

சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 10 July, 2010

Amritha - first number writings on 20th July 2009