Friday 14 May, 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Wednesday 12 May, 2010

4-வது முறையாக ஆனந்த் உலக சாம்பியன்

மே 11: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4வது முறையாக பெற்றுள்ளார். நடப்பு சாம்பியனான அவர், பல்கேரியாவின் வெஸலின் டொபலோவை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஆனந்த் 6.5 - 5.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டம் வென்றார்.
11 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. கடைசி சுற்று ஆட்டத்தில் கறுப்பு காயுடன் விளையாடினார் ஆனந்த்.
கடைசி ஆட்டமும் டிரா ஏற்பட்டு, பின்னர் டைபிரேக்கரில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்த் அதிரடியாக விளையாடி பட்டத்துக்கான புள்ளிகளை வென்றார். 32வது நகர்த்தலின்போது செய்த சிறிய தவறால் டொபலோவ் நிதானம் இழந்தார். அதேசமயம் 40வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தாலும், அது அவரது ஆட்டத்தின் போக்கை மாற்றவில்லை. எனினும் 56 நகர்த்தலில் ஆனந்த் வென்று பட்டம் வென்றார்.
ஆனந்தின் சாதனைகள்: உலக சாம்பியன் பட்டங்கள் - 2000, 2007, 2008, 2010;
5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகள், 1987-ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. செஸ் ஆட்டத்தில் நாக்அவுட், டோர்ணமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 5 May, 2010

Nokia launches X2 @ Rs 5,000


Finnish cellphone maker Nokia has launched a low-priced handset X2 in the Indian market. 
The candybar X2 sports a 2.2-inch QVGA screen and weighs 81 grams. The phone packs dual speakers, dedicated music keys, FM stereo and support for up to 16GB of storage via microSD card. 
Other key features include Bluetooth 2.1, 3.5mm headphone jack and USB 2.0. The phone runs on Nokia's proprietary S40 OS. X2 also offers direct access to Facebook from the homescreen and comes with Nokia Messaging for email and Instant Messaging. 
Other notable feature include instant access to apps from Ovi Store, a 5 megapixel camera and a video recorder. The phone is priced at Rs 5,000 and is likely to be available from June. 
Nokia last week unveiled details of its first phone N8 with new Symbian 3 software, designed to challenge the iPhone and Blackberry at the high-end of the market. 
The company cut its profit outlook and delayed the sales launch of Symbian 3 phones until the third quarter, sending its shares sharply lower. "Nokia is reacting to the fire alarm," said Swedbank analyst Jari Honko.