Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

Wednesday, 27 April 2011

இந்திய அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமனம்

கேரி கிர்ஸ்டனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் ஃபிளட்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் பல வாரங்களாக நீடித்துவந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
ஃபிளட்சர் ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர். 1999-ல் இருந்து 2007 வரை இங்கிலாந்துக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார்.
பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டத்தில் ஃபிளட்சரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ஃபிளட்சர் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகளை செய்யவேண்டி இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய அணியுடன் அவர் சேர்ந்துகொள்ள முடியாமல் போகலாம் என பிசிசிஐ செயலர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
கிர்ஸ்டனின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த எரிக் சைமன்ஸ், அதே பதவியில் தொடர்வார் என அவர் குறிப்பிட்டார்.
ஃபிளட்சர் 1983 உலகக் கோப்பை போட்டியின்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக இருந்தவர். சர்வதேச அளவில் 6 ஒருதினப் போட்டிகளில் இவர் விளையாடி உள்ளார்.

Saturday, 19 December 2009

தோனிக்கு இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பந்துவீசிக் கொண்டிருந்த இந்திய அணியினர் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் முடிவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து ஐசிசி விதிப்படி நடுவர் ஜெஃப் க்ரோ தோனிக்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்தத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. உடனடியாகத் தடை அமலுக்கு வரும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. எனினும் தோனி இல்லாமல் போனால், அடுத்து இலங்கையுடன் ஆட வேண்டிய ஆட்டங்களில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இலங்கையுடனான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

Sunday, 6 December 2009

கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் இந்தியா நம்பர்- 1

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இலங்கை அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.

Friday, 6 November 2009

கேப்டனாக கங்குலி மீண்டும் நியமனம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சவுரங் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக தேவ் வாட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரிமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) 3ஆவது தொடரில் கங்குலி கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ரசிகர்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு போட்டித் தொடராகும். இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உரிமையாளர் ஆவார்.
ஐ.பி.எல். முதல் தொடரில் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்தத் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சரியாக சோபிக்கவில்லை. இதையடுத்து 2ஆவது ஐ.பி.எல். தொடருக்கு கங்குலிக்குப் பதிலாக மெக்குல்லம் கேப்டனா நியமிக்கப்பட்டார்.
ஆனால் 2ஆவது ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படுதோல்வியைச் சந்தித்து.
இந்த நிலையில் ஐ.பி.எல். 3ஆவது தொடரில் கங்குலி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என இன்று அறிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 October 2009

கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு மரணம்

லண்டன், அக்.29 (டிஎன்எஸ்) - இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு அக்டோபர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது.
டேவிட் ஷெப்பர்டு 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 1996, 1999, 2033ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும்.
282 முதல் தர போட்டியில் விளையாடி உள்ள ஷெப்பர்டு 1981ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

Monday, 24 August 2009

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 197 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இதன்மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருந்தன. முக்கியத்துவம் வாய்ந்த கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332, ஆஸ்திரேலியா 160 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எட்ட முடியாத 546 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (40), காடிச்(43) சிறப்பான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கேப்டன் பாண்டிங், மைக்கேல் ஹசி ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்நாட்டு ரசிகர்களுக்கு உருவானது. ஆனால், பாண்டிங் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிளின்டாப்பினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதையடுத்து போட்டி தலைகீழாக மாறிபோனது. அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினார்கள். வருவதும் உடனே பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர். மனம் தளராமல் போராடிய ஹசி சதம் கடந்து அவுட்டானார். அவர் 14 பவுண்டரி உட்பட 121 ரன்கள் எடு்ததார். ஆஸ்திரேலியா 348 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது.
197 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்க்கு வழங்கப்பட்டது.

Sunday, 16 August 2009

2 ஆண்டுகளுக்கு பின் டிராவிட்-ஒரு நாள் அணியில் அறிவிப்பு

இலங்கை முத்தரப்பு மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் டிராவிட் மீண்டும் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் வரும் 8ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இதை தொடர்ந்து இந்திய அணி வரும் 22ம் தேதி ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கிறது.
இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டம், தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.
இந்த கூட்டத்தின் முடிவில் 7 பேட்ஸ்மேன்கள், 2 விக்கெட் கீப்பர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள் என 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் 'இந்திய சுவர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2007 அக்டோபரில் ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டிராவிட் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் களமிறங்க இருக்கிறார்.
அதே போல் கடைசியாக நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் பங்கேற்காத சச்சின், ரெய்னா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். கேப்டனாக டோணியும், துணை கேப்டனாக யுவராஜூம் தேர்வு செய்யப்பட்டு்ள்ளனர்.
அதிரடி துவக்க வீரர் விரேந்தர் ஷேவாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு மேலும், சில நாட்களில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருப்பதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது.

Thursday, 9 July 2009

கிரிக்கெட் நிர்வாகியாகிறார் கங்குலி

மும்பை, ஜூலை 8: விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்தார்.
புதன்கிழமை தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடிய கங்குலி கூறியதாவது: சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடுவதை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தி விட்டேன். ஆனால், கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பேன்.

மேற்கு வங்கத்தில் ஏராளமான திறமை உள்ளது. அது குறித்து கவனம் செலுத்த விரும்புகிறேன். பிசிசிஐ பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஒரு நேரத்தில் ஓரடி மட்டுமே எடுத்து வைக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது.
டால்மியாவுக்கு எதிராக...: பெங்கால் கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியாவுக்கு எதிராக கங்குலியை நிறுத்த டால்மியாவின் எதிரணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ தலைவராக...: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவி 2014-ல் கிழக்கு மண்டலத்துக்கு என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கும் கங்குலி முயற்சி செய்யக் கூடும் என்ற கருத்து எழுந்துள்ளது. ஆனால், பிசிசிஐ தலைவராக ஆக வேண்டும் எனில், வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் குறைந்தது 2 முறையாவது கங்குலி கலந்து கொண்டிருக்க வேண்டும்.
டால்மியா கருத்து: "பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடப் போவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சர்ச்சையை உருவாக்கவே இது போன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன' என டால்மியா தெரிவித்தார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனான கங்குலி 113 டெஸ்டுகளில் 7,212 ரன்களும் (சராசரி 42.17 ரன்), 311 ஒருதின ஆட்டங்களில் 11,363 ரன்களும் (சராசரி 41.02) குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, 7 July 2009

கரீபிய மண்ணில் தொடரை வென்றது இந்தியா (2-1)

உலககோப்பை வீழ்ச்சிக்குப் பின், கரீபிய மண்ணில் எழுச்சி கண்டுள்ளது இந்திய அணி. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத் தியுள்ளது. கேப்டன் தோனி, யுவராஜ் சிங்கின் அபார ஆட்டம், இந்தியா தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது.
முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-1 என முன்னிலை பெற்றது. 4வது போட்டி நேற்று முன் தினம் செயின்ட் லூசியாவில் நடந்தது. மழையின் காரணமாக வெறும் 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி தொடரை வென்றது. இதன் மூலம் கரீபிய மண்ணில் 2வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதற்கு முன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2002 ம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீசில் சாதித்திருந்தது.
ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் தொடர்ச் சியாக ஐந்து ஒரு நாள் தொடர்களில் கோப்பை (எதிர்-இலங்கை (2008), இங்கிலாந்து (2008), இலங்கை (2009), நியூசிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2009)வென்று அசத்தியுள்ளது.

Saturday, 30 May 2009

T20 World cup time table 2009

ICC T20 World Cup Schedule 2009, ICC Twenty 20 Worldcup TimeTable 2009
=======================================
Group A - India, Bangladesh, Ireland
Group B - Pakistan, England, Netherlands
Group C - Australia, Srilanka, WestIndies
Group D - South africa, New Zealand, Scotland
=======================================
Matches Timings and Schedule
1st T20 will be played between England v Netherlands on 05, June 2009 in London Day/Night
2nd New Zealand v Scotland on 06, June 2009 in London Day match
3rd Australia v West Indies on 06, June 2009 Day mach in London
4th India v Bangladesh on 06, June 2009 in Nottingham D/N
5th South Africa v Scotland on 07, June 2009 day match in London
6th England v Pakistan on 07, June 2009 D/N match in London
7th Bangladesh v Ireland on 08, June 2009 Day match Nottingham
8th Australia v Sri Lanka on 08, June 2009 D/N in Nottingham
9th Pakistan v Netherlands on 09, June 2009 London day match
10th New Zealand v South Africa on 09, June 2009 D/N in London
11th Sri Lanka v West Indies on 10, June 2009 in Nottingham
12th India v Ireland on 10, June 2009
Super Eight T20 world cup 2009 match schedule and timings
11, June 2009 - D1 v A2 in NottinghamB2 v D2 in Nottingham
12, June 2009 - B2 v D2 in LondonA1 v C1 IN London
13, June 2009 - C1 v D2 in LondonD1 v B1 IN London
14, June 2009 - A2 v C2 in LondonA1 v B2 IN London
15, June 2009 - B2 v C1 in LondonB1 v A2 IN London
16, June 2009 - D1 v C2 in NottinghamD2 v A1 IN Nottingham
Semi Final Matches
18, June 2009 - 1st Semi-Final
19, June 2009 - 2nd Semi-Final
Twenty20 World Cup 2009 – Final on 21, June 2009 London.

Doni's team set for T20 worldcup


Beaming with confidence, Indian captain Mahendra Singh Dhoni on Friday said he was hopeful of retaining the World Twenty20 title with a balanced team having some outstanding talent. Dhoni also said his team was not under pressure as the defending champions as they leave for the second edition of the prestigious event, beginning in England on June 5.