Thursday 23 December, 2010

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்.

நீண்ட நாட்கள் நோய்வாய்பட்டிருந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கருணாகரன்(93) , நீண்ட நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 ஆம் தேதியன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இநநிலையில் நேற்று மீண்டும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றதாகவும், இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை மரணமடைந்தார்.
கேரள முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Friday 10 December, 2010

சீமான் இன்று விடுதலையானார்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையானார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்தனர்.
இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான தொண்டர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், தலைவர்களும் வேலூர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

Sunday 5 December, 2010

மழையால் எங்கும் தண்ணீர் - ஊரப்பாக்கம்

என் வீட்டை சுற்றி தண்ணீர் ஓடுகிறது..


Saturday 20 November, 2010

Amritha's transportation projects in her school project day




Monday 15 November, 2010

கலாநிதி மாறன் - ஸ்பைஸ்ஜெட் தலைவரானார்

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.

Wednesday 10 November, 2010

தமிழகத்திற்கு வரும் மகிந்திராவின் கார் தொழிற்சாலை

நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அன்ட் மகிந்திராவின் கார் தயாரிப்புத் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவுள்ளது.
இத்தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.4 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்ற செய்தி மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட பிற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் எவ்வளவு முதலட்டை மகிந்திரா மேற்கொள்ளவுள்ளது என்பதும் தெரியவில்லை.
இருப்பினும் 400 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது மகிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ. 4000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முதல் 7 ஆண்டுகளுக்கு பல்வேறு சலுகைகள் தரப்படும் என சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. இதையடுத்தே தற்போது மகிந்திரா அன்ட் மகிந்திரா தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 9 October, 2010

எஸ்.எஸ். சந்திரன் காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னாள் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சந்திரன் அவர்கள், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் வெள்ளிகிழமையன்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் சந்திரன். அதன் பிறகு நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ். சந்திரன், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து இன்னாள் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ். சந்திரன்.
திரைப்படங்களில் மட்டுமன்றி, அரசியலிலும் ஈடுபாடு காட்டிய எஸ்.எஸ். சந்திரன், துவக்கத்தில் திமுகவில் செயல்பட்ட போதிலும், அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் எந்தப் பிரச்சினையிலும், தமிழிலேயே பேசி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன்.
திருவாரூரில் இருந்து அவரது உடல், சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sunday 12 September, 2010

Mehandi designed by me to Amritha

2014ல் உலகப் பெரும் பணக்காரராக முகேஷ் - போர்ப்ஸ்

2014ம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உயர்வார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இன்னும் 4 ஆண்டுகளில் இது 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுப்பார் முகேஷ். இதன் மூலம் உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்குத் தள்ளி விடுவார் முகேஷ் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
மெக்சிகோவில் நிலவி வரும் அரசியல் , பொருளாதார குழப்பங்களால் கார்லோஸின் சொத்து மதிப்பு குறைந்து விடும் எனவும் போர்ப்ஸ் கணித்துள்ளது.
53 வயதாகும் முகேஷ் தற்போது போர்ப்ஸின் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம் , தமிழ், கன்னடம், தெலுங்கு , இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களில் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.
1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் 'ஆட்டமா தேரோட்டமா...' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சொர்ணலதா. சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் 'மாலையில் யாரோ மனதோடு பேச...' என்ற பாடலைப் பாடியதன் மூலம் பிரபலமானவர் சொர்ணலதா.
அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'போறாளே பொன்னுத்தாயி...' பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

Wednesday 8 September, 2010

நடிகர் முரளி மாரடைப்பால் மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று இரவு முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக்கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முரளி உயிரிழந்தார்.
மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.
முரளியின் உடல் நாளை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க நடிகர் முரளி. முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

Thursday 2 September, 2010

சென்னைக்கு வரும் கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம், சென்னை அருகே தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. ரூ. 7000 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளது கியா.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ. 12,000 கோடி அளவுக்கு முதலீடுகளைக் கவர திட்டமிட்டிருந்துத தமிழக அரசு. ஆனால் அந்த அளவை தாண்டிவிட்டது முதலீடுகளின் அளவு. இந்த நிதியாண்டு இறுதியில் ரூ.20,000 கோடி அளவை முதலீடுகள் தாண்டும் என எதிர்பார்க்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு கியா மோட்டார்ஸில் 35 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவுள்ள தொழிற்சாலையில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது கியா மோட்டார்ஸ். இங்கு 2012ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது.
கியா மோட்டார்ஸும், ஹூண்டாயும் இணைந்து இந்திய மார்க்கெட்டில் பெரும் பங்கை வகிக்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உலகப் புகழ் பெற்ற 10 ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது 2ம் நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் தமிழகம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

Wednesday 25 August, 2010

போனிவர்மா பிரகாஷ்ராஜூக்கு திருமணம்

Wednesday, 25 August 2010, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளை யாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

Thursday 19 August, 2010

டாப் 10 உலகத் தலைவர்களில் மன்மோகனுக்கு முதலிடம்

அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறவில்லை.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.

Wednesday 28 July, 2010

Nokia X6 8GB in India for 14,499 INR

Nokia continues to flood the Indian markets with new phone launches. The latest entrant in the lineup of new phones from Nokia is the X6 8GB. Priced at Rs. 14,499, the official announcement of the X6 8GB was made on Twitter by Nokia.
The device has a 3.2 inch capacitive touch screen with an aspect ratio of 16:9. It packs in a 5MP camera with dual LED flash and supports TV out and online share options. The X6 8GB runs on Symbian OS S60 5.0 and has Bluetooth, USB, WLAN connectivity features.
Basically a music phone, the X6 8GB plays various music formats like MP3, SpMidi, AAC, AAC+, eAAC+, WMA and MTP. It plays 35 hours of music and 4.5 hours of video. The talk time of the phone scores at 11.5 hours on GSM and 6 hours on 3G.
With other Nokia phones like C3, C6, E5 coming to Indian market soon, looks like it's raining phones for the Indian consumer who can well be spoilt for choice.

Tuesday 20 July, 2010

லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!

லண்டன்: உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

Saturday 17 July, 2010

சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday 10 July, 2010

Amritha - first number writings on 20th July 2009

Sunday 27 June, 2010

மாரடைப்பால் சட்டசபை காங். தலைவர் சுதர்சனம் மரணம்

தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவரும், பூவிருந்தவல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல.ஏவுமான சுதர்சனம் நேற்று கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
67 வயதாகும் சுதர்சனம், கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். 23ம் தேதி முதலே கோவையில் முகாமிட்டிருந்த அவர் 2 நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
24ம் தேதி இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள காங்கிரஸ் பிரமுகரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென சிறுநீருடன் ரத்தம் கலந்து போனது. உடலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சுதர்சனத்தின் நிலைமை மோசமானது. இரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சில விநாடிகளில் அவர் உயிரிழந்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மாநாட்டுத் திடலுக்கும் சுதர்சனம் இறந்த செய்தி பரவியதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தகவல் கிடைத்ததும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விரைந்து சென்று மலர்அஞ்சலி செலுத்தினர். கதறி அழுத சுதர்சனத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார்.
இன்று சுதர்சனத்தின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
மறைந்த சுதர்சனம், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராவார். காமராஜர் காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர். பின்னாளில் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் வலது கரம் போல திகழ்ந்தார். காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக 20 வருடங்கள் இருந்தவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ருட்டி கிராமத்தில் 1943ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தவர் சுதர்சனம். பத்தாவது வரை படித்துள்ளார். அடிமட்டத் தொண்டர் நிலையிலிருந்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி வரை உயர்ந்தவர்.
கடந்த 1991, 96, 2001 ஆகிய தேர்தல்களில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த தேர்தலிலும் பூந்தமல்லி தொகுதியிலேயே போட்டியிட்டு வென்றார்.
சுதர்சனத்திற்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

Friday 14 May, 2010

திமுகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார்.
கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலைவர்களும் பலமாக வரவேற்றிருந்தனர். குஷ்புவை வரவேற்பதாக தங்கபாலு, இளங்கோவன் , சுதர்சனம் ஆகியோர் மகிழ்ச்சி பொங்ககருத்து கூறியிருந்தனர்.
ஆனால், அதிரடித் திருப்பமாக திமுகவில் இணைய முடிவு செய்தார் குஷ்பு. இன்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
முதல்வர் கருணாநிதி மீது தனக்கு எப்போதும் பெரிய மரியாதை உண்டு என்றும், அதனால் திமுகவில் இணைவதாகவும், இனி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

Wednesday 12 May, 2010

4-வது முறையாக ஆனந்த் உலக சாம்பியன்

மே 11: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் (40) 4வது முறையாக பெற்றுள்ளார். நடப்பு சாம்பியனான அவர், பல்கேரியாவின் வெஸலின் டொபலோவை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.
 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் ஆனந்த் 6.5 - 5.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று பட்டம் வென்றார்.
11 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 5.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் கடைசி சுற்று ஆட்டம் செவ்வாய்க்கிழமை மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. கடைசி சுற்று ஆட்டத்தில் கறுப்பு காயுடன் விளையாடினார் ஆனந்த்.
கடைசி ஆட்டமும் டிரா ஏற்பட்டு, பின்னர் டைபிரேக்கரில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனந்த் அதிரடியாக விளையாடி பட்டத்துக்கான புள்ளிகளை வென்றார். 32வது நகர்த்தலின்போது செய்த சிறிய தவறால் டொபலோவ் நிதானம் இழந்தார். அதேசமயம் 40வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தாலும், அது அவரது ஆட்டத்தின் போக்கை மாற்றவில்லை. எனினும் 56 நகர்த்தலில் ஆனந்த் வென்று பட்டம் வென்றார்.
ஆனந்தின் சாதனைகள்: உலக சாம்பியன் பட்டங்கள் - 2000, 2007, 2008, 2010;
5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகள், 1987-ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. செஸ் ஆட்டத்தில் நாக்அவுட், டோர்ணமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 5 May, 2010

Nokia launches X2 @ Rs 5,000


Finnish cellphone maker Nokia has launched a low-priced handset X2 in the Indian market. 
The candybar X2 sports a 2.2-inch QVGA screen and weighs 81 grams. The phone packs dual speakers, dedicated music keys, FM stereo and support for up to 16GB of storage via microSD card. 
Other key features include Bluetooth 2.1, 3.5mm headphone jack and USB 2.0. The phone runs on Nokia's proprietary S40 OS. X2 also offers direct access to Facebook from the homescreen and comes with Nokia Messaging for email and Instant Messaging. 
Other notable feature include instant access to apps from Ovi Store, a 5 megapixel camera and a video recorder. The phone is priced at Rs 5,000 and is likely to be available from June. 
Nokia last week unveiled details of its first phone N8 with new Symbian 3 software, designed to challenge the iPhone and Blackberry at the high-end of the market. 
The company cut its profit outlook and delayed the sales launch of Symbian 3 phones until the third quarter, sending its shares sharply lower. "Nokia is reacting to the fire alarm," said Swedbank analyst Jari Honko.

Sunday 11 April, 2010

மொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் இந்நேரம்.காம் / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:
முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.
உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...
1. opera mini browser open செய்யவும்
2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)
3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும். மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். இந்நேரம்.காம் செய்தித் தளத்தினை அனுபவித்து மகிழவும்.
பின்குறிப்பு: நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.
Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

மாநிலங்களவையில் 100 கோடீஸ்வர எம்பிக்கள்

ஏப்.11: மாநிலங்களவை எம்பிக்களில் சுமார் 100 பேர் தங்களுக்கு 1 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒரு தனியார் தொண்டு நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் இந்த விவரங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல தொழிலதிபரும், சுயேச்சை எம்பியுமான ராகுல் பஜாஜ், தனக்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக 300 கோடிக்கு மேல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பின்படி மாநிலங்களவை எம்பிக்களில் அதிக சொத்து உள்ளவர்களில் பஜாஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக மதச்சார்பற்ற ஜனதாதள எம்பி எம்ஏஎம்.ராமசாமி தனக்கு ரூ 278 கோடி சொத்து இருப்பதாகவும், காங்கிரஸ் எம்பி சுப்ரமணி ரெட்டி தனக்கு ரூ 272 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்பி ஜெயா பச்சனுக்கு ரூ 215 கோடி மதிப்பிலும், சமாஜவாதிக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அமர்சிங் எம்பிக்கு ரூ 79 கோடியும் சொத்துக்கள் இருப்பதாக தனியார் தொண்டுநிறுவனத்தின் புள்ளிவிவரக் கணக்குகள் தெரிவித்தன.

Monday 5 April, 2010

தமிழகத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கலாநிதி மாறன்

தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார்.
44 வயதான கலாநிதி மாறனின் சொத்து 290 பில்லியன் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது. அதாவது சுமார் ரூ.13 ஆயிரத்து 630 கோடி. தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில் (ரூ.63,091.74 கோடி) 21.6 சதவீதம் கலாநிதி மாறனின் சொத்து.
தமிழக அரசின் கடன் தொகையுடன் ஒப்பிட்டால் (ரூ.74,858 கோடி) 19 சதவீதம். மாநிலம் முழுவதும் வீடில்லாதோருக்கு 21 லட்சம் குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு செலவழிக்கும் தொகையை விட கூடுதலானது கலாநிதியின் இந்த சொத்து மதிப்பு. சன் நெட்வொர்க்கின் 77 சதவீத பங்குகளை இவர் தன் வசம் வைத்துள்ளார்.
சன் டிவி நெட்வொர்க்கின் கீழ் 20 டிவி சேனல்கள், 46 எஃப் எம் ரேடியோ நிலையங்களை நடத்தி வருகிறார். அதோடு சன் டைரக்ட் டிடிஎச் சேவைகளை மலேசிய பெருங்கோடீஸ்வரர் அனந்த கிருஷ்ணனின் அஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து நடத்தி வருகிறார். இதில் 45 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ் மூலம் மெகா பட்ஜெட் படங்களையும் எடுத்து வருகிறார்.
இவை அல்லாமல் பல்வேறு தொழிலகங்களில் முதலீடு செய்திருக்கும் கலாநிதி மாறன், அடுத்ததாக விமான போக்குவரத்துத் துறையில் கால் பதிக்க உள்ளார்.

பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக‍!

பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது இதுவே முதல் முறை. பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 198 உறுப்பினர் பதவிகள் கொண்ட மாநகராட்சியில், மாலை நிலவரப்படி 112 இடங்களில் பாஜக வெற்றியடைந்து முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 62 வார்டுகளிலும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 இடங்களையும் பெற்றுள்ளன. மற்றவை 7 வாட்டுகளில் வெற்றியடைந்துள்ளன.
பெங்களூரில் வெற்றி முகத்துடன் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, 'நன்றாக பணியாற்றினால், வளர்ச்சியில் உண்மையாக அக்கறை காட்டினால் மக்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள் என்பதற்கு இந்த வெற்றியை விட சிறந்த உதாரணத்தை நாம் தேட வேண்டியதில்லை' என்றார்.

Saturday 3 April, 2010

அங்காடி தெரு - விமர்சனம்

நம்ம ஊர் பிள்ளைங்க, நம்ம ஜாதி பசங்க... என ஊரில் இருந்து படிக்கற பசங்களை பாதியில் அழைத்து வந்து தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டு அவர்களை அடிமைகளை விட கொடுமையாக நடத்தும் முதலாளிகளையும், அவர்களது ஏவல், கூவல் அதிகாரிகளின் முகத்திரைகளையும் கிழித்திருக்கும் வித்தியாசமான... அதேசமயம் விறுவிறுப்பான படம் அங்காடி தெரு!
கதைப்படி, சென்னையில் உள்ள ‌பெரி‌ய ஜவுளி மற்றும் பாத்திர, பலசரக்கு கடைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வேலைக்கு வரும் ஜோதிலிங்கத்துக்கும், அதே கடையில் அவனைப்போலவே விற்பனைப் பிரிவில் வேலை பார்க்கும் சேர்மக்கனிக்கும் முதலில் மோதல். அதன் பின் காதல். இந்நிலையில் மே‌னேஜரின் உருட்டல், மிரட்டலால் அதே கடையில் வேலைபார்க்கும் காதல் ஜோடி ஒன்று சித்ரவதைக்குள்ளாகிட, ஸ்பாட்டிலேயே காதலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கண்டு சேர்மக்கனியும், ஜோதிலிங்கமும் மிரள,,, ஒரு சமயம் அவர்களது காதலும் நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. அப்புறம்...? அப்புறமென்ன...., அடித்து உதைத்து மிரட்டி உருட்டி பிரிக்கப்படும் காதல் ஜோடி மீண்டும் இணைந்ததா, இல்லையா என்பது உருக்கமான மீதிக் கதை!
பகட்டான பலஅடுக்கு மாட மாளிகைகளின் ஏ.சி. அறையில் வேலை பார்க்கும் விற்பனையாளர்களின் வாழ்வியல் வேதனைகளையும், அவர்களது மற்றொரு புற சோக வாழ்க்கையையும் அலசி, ஆராய்ந்து அழகாக படம் பிடித்து காட்டியிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் நிச்சயம் பெரிய டைரக்டர்தான்.

ஜோ‌திலிங்கமாக மகேசும், சேர்மக்கனியாக அஞ்சலியும் வாழ்ந்திருக்கிறார்கள். இருவருக்குமிடையில் ஆரம்பத்தில் எழும் மோதல்களும் சரி, அதன்பின் வரும் காதலும் சரி., சபாஷ்... சரியான போட்டி என இருவரது நடிப்பாற்றலையும் மிக துல்லியமாக வெளிக்கொணர்ந்திருக்கிறது என்றால் மிகையல்ல! மகேஷ் - அஞ்சலி மட்டுமல்ல... அவர்களது நண்பனாக வரும் பிளாக் பாண்டி, காதலன் வேசி மகள் எனக் கேட்டதால் அத்தனை‌ பேர் கண் முன்னே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் தோழி அஞ்சலியின் த‌ங்கையாக ஒருசில காட்சிகளே வந்தாலும், உயர் சாதியினரின் ஆச்சாரம் அனுஷ்டானத்தால் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அனுபவிக்கும் கொடுமையை தோலுரித்து காட்டிட உதவிடும் கேரக்டர், பெரிய ஸ்‌டோர் முதலாளிகளுக்கு போட்டியாக பிளாட்பார்மில் கடை நடத்திடும் இஸ்லாமிய பெரியவர், முட்டை முழியும் - சோடா புட்டி கண்ணாடியுமாக வக்ரமும், ஆக்ரோஷமும் ஒரு‌ங்கே கொண்ட ஸ்டோர் முதலாளியாக இருக்குனர் ஏ.வெங்கடேஷ் கடை உரிமையாளர் அண்ணாச்சியாக பழ.கருப்பையா, ஸ்டோர் விளம்பரத்திற்காக நடிகையாகவே சில காட்சிகளில் வரும் சினேகா, குள்ள மனிதனின் உயர்ந்த பிள்ளைதாச்சி மனைவியாக வந்து ரசிகர்களின் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடிக்கும் சிந்து என ஒவ்வொரு பாத்திரமும் கேரக்டராகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட். அத்தனைக்கும் காரணம் இயக்குனர் என்பதும் புரிகிறது.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் என இரண்டு இசையமைப்பாளர்களின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். பின்னணி இசையும் நல்ல நாதம். ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவும், ஜெயமோகனின் வசனமும் படத்திற்கு கூடுதல் பலம்!

Thursday 18 March, 2010

குத்துச்சண்டை: இந்தியா சாம்பியன்

மார்ச்.18 (டிஎன்எஸ்) காமன்வெல்த் குத்துச்சண்டை தொடரில் இந்தியா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐந்தாவது காமன்வெல்த் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், தில்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த "மிடில் வெயிட்' 75 கி.கி., பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் இந்தியாவின் விஜேந்தர், இங்கிலாந்தின் பிராங்க் பக்லியானியை சந்தித்தார்.
போட்டி துவங்கிய சில வினாடியில் இங்கிலாந்து வீரர் விட்ட குத்தில், விஜேந்தருக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியது. இருப்பினும் மனஉறுதியுடன் விளையாடிய இவர், முதல் சுற்றில் 3-1 என முன்னிலை பெற்றார். அடுத்த சுற்றிலும் அசத்திய விஜேந்தர் 7-2 என, புள்ளிகள் பெற்றார்.
தொடர்ந்து மூன்றாவது சுற்றில் விஜேந்தர், பிராங்கின் மீது சரமாரியாக, தாக்குதல் தொடுத்தார். இறுதியில் 13-3 என்ற புள்ளிக்கணக்கில், விஜேந்தர் அசத்தல் வெற்றி பெற்று, சர்வதேச போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இத்தொடரில் இந்தியா சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 பேர் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர். மீதமிருந்த 6 வீரர்களும் வீரர்களும், தங்கம் வென்று சாதிக்க, இந்தியா (36 புள்ளி) ஒட்டுமொத்த அணிக்கான, சாம்பியன்ஷிப் கோப்பையை இங்கிலாந்திடம் (23 புள்ளி) இருந்து, தட்டிப் பறித்தது.
இதற்கு முன் கிளாஸ்கோவில் நடந்த (2005), காமன்வெல்த் தொடரில் இந்தியா சாம்பியன்ஷிப் கோப்பை வென்று இருந்தது. தவிர, இத் தொடரின் சிறந்த வீரராக விஜேந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தின் பிராங்க், வெள்ளியும், டான்சானியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றனர். (டிஎன்எஸ்)

Wednesday 24 February, 2010

ஏ-ஸ்டார் கார்களை வாபஸ் பெரும் மாருதி

டோயோட்டா, ஹோண்டா வரிசையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது குறிப்பிட்ட மாடல் காரில் கோளாறு ஏற்பட்டுள்ள காரணத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்த அவற்றை திரும்பப்பெற்று உதிரிபாகங்களை மாற்றித் தர முடிவு செய்துள்ளது.
'எரிசக்தி பம்ப்' குறைபாடு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது ஏ-ஸ்டார் மாடல் கார்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை இந்திய சந்தையில் இருந்து திரும்பப்பெற உள்ளது.
'கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏ-ஸ்டார் மாடல் கார்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில புகார் கள் வந்தன. எரிபொருள் டாங்க் தொடர்பாக ஒரே மாதிரியான புகார்கள் வந்தன.
இதையடுத்து மற்ற வாடிக்கையாளர்களையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ஆகஸ்ட் 22ம் ஆண்டுக்குள் விற்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களில் மட்டும் இந்த குறைபாடு இருந்தது தெரியவந்தது.
டாங்க்கில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எண்ணெய் நிரப்பப்படும் சமயத்தில், கசிவு ஏற்படக்கூடிய அளவுக்கு குறைபாடுகள் காணப்பட்டன.
இதனால் பெரிய பிரச்னை இல்லை என வாடிக்கையாளர்கள் கருதினாலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த காலகட்டத்தில் விற்கப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சுமார் ஒரு லட்சம் கார்களில் எரிசக்தி பம்ப் கேஸ்கெட் மற்றும் ரிங் ஆகியவற்றை மாற்றித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.

2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்

மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2010-2011ஆம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை இன்று (24-02-2010) தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
 * மேலும் 10 துரந்தோ ரயில்கள் அறிமுகம்
* பெண் பயணிகள் பாதுகாப்பு அதிகரிப்படும்.
* 93 ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.
* 21 ரயில் மார்க்கங்களின் தூரம் நீட்டிக்கப்படும்.
* விளையாட்டு வீரர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.
* 2011 நிதி ஆண்டில் புதிதாக 54 ரயில்கள் இயக்கப்படும்.
* வரும் நிதி ஆண்டிற்குள் மேலும் 117 ரயில்கள் இயக்கப்படும்.
* ஒரே ஆண்டில் 1000 கி.மீ., இரயில் பாதைகள் அமைக்கப்படும்.
* 16 வழித்தடங்களில் புதிதாக 16 சுற்றுலா ரயில்கள் இயக்கப்படும்.
* மும்பைக்கு புதிதாக 101 புறநகர் ரயில் நிலையங்கள் இயக்கப்படும்.
* காமன்வெல்த் 2010 போட்டிகளுக்காக சிறப்பு ரயில்கள் இ‌யக்கப்படும்.
* மேலும் பல மேம்படுத்தப்‌பட்ட சரக்கு காப்பகங்கள் உருவாக்கப்படும்.
* ஏ.சி., வகுப்பு சேவை கட்டணம் ரூ. 40ல் இருந்து ரூ. 20 ஆக குறைப்பு.
* ஐ.ஐ.டி., காரக்பூரில் ரயில்வே துறை குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* ரயில்வே பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுவர்.
 * சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனமயமாக்கப்படும்.
* பயணிகள் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்த 1300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் ரயில் டிக்கட் கவுன்டர் அமைக்கப்படும்.
* செகந்தரபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் விளையாட்டு அகடமிகள் தொடங்கப்படுகின்றன.
* ரயில் பெட்டிகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பரிசோதனை நிலையம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
* உணவு தானியம் மற்றும் மண்ணெண்ணெய் ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு.
* ரயில்வே பெண் ஊழியர்கள் வசதிக்காக அவர்கள் குழந்தைகளுக்கென பாதுகாப்புமையங்கள் அமைக்கப்படும்.
* ரயில்வே துறைக்காக குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அம்பாலா, திருவனந்தபுரம், அமேதி, நாசிக் உள்ளிட்ட 6 இடங்களில் தொடங்கப்படும்.
* ரவீந்தரநாத் ‌தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பாரத் தீர்தா என்ற பெயரில் நாட்டின் அனைதது முக்கிய யாத்திரை இடங்களுக்கும் ரயில் விடப்படும்.
* அடுத்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகத்துடன் இணைந்து வீடு கட்டித்தரப்படும்.
* மொபைல், இ. டிக்கெட் சேவையை ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் ஆகிய இடங்களில் பெற ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இன்று குவாலியரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் பெட்ச்மன் ஒருவர் அடிக்கும் முதல் இரட்டை சதமாகும். சச்சின் அடித்த 200 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோராகும்.
இதற்க்கு முன் பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் ஜிம்ப்பாவேயின் கோவன்ட்ரி ஆகியோர் அடித்த 194 ரன்களே ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஸ்கோராக இருந்து வந்தது. இன்று சிறப்பாக அடித்து விளையாடிய சச்சின் தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரான 186 ரன்களை கடந்தும், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

Thursday 18 February, 2010

மாருதி கிஸாஷி விரைவில் விற்பனைக்கு வரும்

சிறிய ரக கார் களுக்கு பிரசித்தி பெற்ற மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய மாடலான 'மாருதி சுசுகி கிஸாஷி'யை இந்தியாவில் இந்தாண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டில் ஃபிராங்க்பர்ட்டில் நடந்த மோட்டார் ஷோவில் இந்த மாடலுக்கான 'கான்செப்ட்' காரை மாருதி சுசுகி காட்சிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் இந்த மாடல் காணப்பட்டது.

இந்தாண்டு இந்தியாவில் இம்மாடலின் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் துவக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரவுன் இதுபற்றி கூறுகையில்,
'கிஸாஷி இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் விற்பனையை துவக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்று குறிப்பிட்டார்.
21 இன்ச் வீல்களைக் கொண்ட இந்த கிஸாஷி, ஸ்டைலான வடிவமைப்புடன் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதன் விலை சுமாராக ரூ.10 லட்சம் இருக்கும். இந்திய சந்தையில் ஆடி ஏ 4, டொயோட்டா கரோல்லா, அக்யூரா டிஎஸ்எக்ஸ், ஹோண்டா சிவிக், ஃபோர்ட் ஃபோகஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக கிஸாஷி அமையும்.
லிட்டருக்கு 10 முதல் 11 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Friday 12 February, 2010

Nokia's 3G Phone Launched for Rs. just 4,499

Nokia has launched its most affordable 3G handset in the country earlier today with the launch of the Nokia 2730 Classic. The phone, priced at just Rs. 4499, comes loaded with a host of features rarely seen on a device in is price range.
The 2730 Classic packs in Ovi Mail, Nokia Messaging, Nokia Life Tools, and full HTML browsing as well. It also comes with Opera Mini preloaded. The 2730 Classic has a 2-inch QVGA display that can display 262k colours. At just 88grams, the phone is quite light-weight. As expected, it runs Nokia's S40 interface. The 30 MB of internal memory can be augmented using a microSD card and the phone comes with a 1GB card - preloaded. It offers a maximum of 7.4 hours talk time and 16.5 days standby time. Music lovers on a budget can rejoice - thanks to the 3.5mm slot this one comes with. If that wasn't all, there is Bluetooth and microUSB support as well.
There is a decent 2 megapixel camera at the rear that should be good enough for casual imaging. Along with 3G, it also supports class 32 EDGE - making it a good device for browsing while on the move. There's FM Radio with RDS as well.
The 2730 Classic should make a decent buy for a feature packed, cheap first phone.

Thursday 4 February, 2010

பார்வையற்றோருக்கு தனி வெப்சைட்

http://www.socialjustice.nic.in/
அரசின் சார்பிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் சமூக விஷயங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் ஐயாயிரம் இணையதளங்கள் உள்ளன. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இப்போது கூட இவற்றில் ஒன்றேனும், உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக் கின்றன. குறிப்பாக, கண்பார்வையற்றோர், நிறங்களை அடையாளம் காண இயலாதோர், மங்கலான பார்வை உடையோர் போன்றோர் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலையில் தான் உள்ளன.
முதன்முறையாக சமூகநீதி மற்றும் அதிகாரத்துக்கான மத்திய அமைச்சகத்தின் இணையதளம் கண்பார்வையற்றோர் போன்றவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. “ஊனமுற்றவர்களுக்கும் இணையதளங்களைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்பதில் ஐயமில்லை’ என்கிறார் இத்துறையின் அமைச்சர் முகுல் வாஸ்னிக். “ஒரு அரசு இணையதளம் முதன் முறையாக இதுபோன்று இயங்குவதற்கு எனது துறையின் இணையதளம் வழிகாட்டியாக இருக்கிறது’ என்கிறார் அவர். படங்களுக்குப் பதில் மாற்று எழுத்து வடிவங்கள், மெதுவாகப் படிப்பவர்களின் வசதிக்காக எழுத் துக்களுக்கிடையில் போதுமான இடைவெளி, பெரிய வடிவ எழுத் துக்கள், தேவையான இணைப் புகள், வீடியோக்கள் என்பதாக அந்த இணையதளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மவுஸ் பயன்படுத்த இயலாதவர்கள் முழுக்க முழுக்க கீபோர்டை மட்டுமே பயன்படுத்தலாம். கடந்த 2008, டிசம்பர் 3ம் தேதி, தங்கள் உரிமைகளை வலியுறுத்தி டில்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இவர்களின் பிரதிநிதிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அரசு இணையதளங்களை ஊனமுற்றோரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச விதிகளின் அடிப்படையில் அமைக்கும்படி மத்திய தகவல் அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டது. “இது நடந்து ஒரு ஆண்டுக்குப் பின், முதன்முறையாக இப்போதுதான் ஒரு அரசு இணையதளம் எங்களுக்கும் சேர்த்து உருவாகியிருக்கிறது. இணையதளங்கள் வைத்துள்ள அரசின் 50 துறைகளுக்கு எங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்திருந்தோம். அவர்களில் ஒருவரும் இதுவரை அதற்குப் பதில் அனுப்பியதில்லை’ என்கிறார் தேசிய ஊனமுற்றோருக்கான மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் இயக்குனர் அபிதி.

வந்துவிட்டது ஆப்பிளின் புதிய ‘ஐபேட்’

பல மாதங்களாக எல்லோரும் எதிர்பார்த்திருந்த, மேம்படுத்தப்பட்ட புதிய “ஐபேட்’ விற்பனைக்கு வந்துள்ளது.இப்போது மொபைல்போனிலேயே எல்லா வசதிகளும் வந்துவிட்டாலும், வேறு சில காரணங்களுக்காக கம்ப்யூட்டரையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இப்போது ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “ஐபேட்’, மொபைல்போனாகவும், லேப்டாப்பாகவும் செயல்படும் என்பதுதான் அதன் விசேஷம்.
இதற்கு “டேப்லெட்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.அரை அங்குல தடிமன், 680 கிராம் எடை , 9.7 அங்குல திரை என்று சிறப்பம்சங்களோடு சந்தையில் உலாவரப் போகிறது ‘ஐபேட்’. இதன் பேட்டரி பத்து மணி நேரம் தாக்கு பிடிக்கும். எலக்ட்ரானிக் உலகில் இது ஒரு முக்கிமான சாதனையாகவும் கருதப்படுகிறது.ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபாட் டச் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றில் இல்லாத புதிய பல வசதிகளுடன் “ஐபேட்’ தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் செயல்வசதிகள் உள்ளன. 16 ஜி.பி., 32 ஜி.பி., 64 ஜி.பி., அளவுக்கு தகவல்களை வைத்துக் கொள்ளும் வகையில் பல மாடல்களில் கிடைக்கின்றன.இந்திய மதிப்பில் 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 41 ஆயிரம் ரூபாய் வரை விலையுள்ள “ஐபேட்’ டில் லேப்டாப் மற்றும் மொபைல்போன்களில் உள்ள சில வசதிகள் குறிப்பாக கேமரா, வீடியோ மற்றும் அனிமேஷன் மென்பொருள் கொண்ட இணையங்களைப் பார்க்கும் வசதி போன்றவை இதில் இல்லை. ஆனால், இ-புத்தகங்களைப் படிப்பதற்கும், இணையதளங்களைப் பார்ப்பதற்கும், வீடியோ விளையாட்டுகளுக்கும் இக்கருவி பெரிதும் பயன்படும். இது பெரிய அளவிலான ஐபாட் ஆக இருந்தாலும், லேப்டாப் போன்று இடத்தை அடைக்காமல் கையடக்க அளவிலேயே இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற டேப்லெட் கருவிகளை வெளியிட்டாலும் ஆப்பிளின் மார்க்கெட்டைப் பிடிப்பது என்பது சற்றுக் கடினம்தான் என்கின்றனர் இத்துறை நிபுணர்கள். வரும் மார்ச் மாதத்திலிருந்து இது மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday 3 February, 2010

Ford Figo rollout from Chennai plant on Feb 5th

Having successfully completed the trial production of its first subcompact car-Figo-recently, Ford India is now gearing up to begin its commercial rollout from its Chennai facility on 5th February, 2010. Furthermore, Tamil Nadu’s chief minister M Karunanidhi and deputy chief minister Stalin would inaugurate the plant on Friday, as claimed PTI. It may be recalled that Ford India, which currently rolls out Fiesta, Ikon, Endeavour, had inked an MoU with the Tamil Nadu government last year, under which it would invest an additional Rs. 1,500 crore to expand the M.M.Nagar facility. The investments also involved enhancing making new engines and Figo’s production.
Despite being absent from the high-decibel 2010 Auto Expo, Ford India is gearing up to introduce its first semi-compact car-Figo- by March this year. Based on the Fiesta’s platform, Ford Figo will be built exclusively in India and exported to Asia-Pacific and Africa regions. Ford Figo will be the made for India car and it will be launched in both petrol and diesel engine options which will be specially made by keeping in mind Indian road conditions and traffic. The car will be equipped with a 1.2L Rocam engine (known as Duratec to new buyers) or 1.4L diesel engine (Duratorq). Figo’s 1.2L which is essentially a stripped down unit of Fiesta’s duratec produces 70bhp of peak power at 6250rpm and a maximum torque of 104Nm at 4000rpm. Ford Figo 1.4L diesel engine pumps out 68bhp of peak power at 4000rpm and 160Nm of peak torque at 2000rpm.
The car will come in three variants – base, mid and high end (called platinum). The Titanium variant will have an optional pack (high plus). The 5-door hatchback car will come in seven colours: Diamond white, Panther Black, Moondust Silver, Chille, Sea Grey, Squeeze and Colorad Red. Although the price range of the model has yet not been announced by the company yet, there is a lot of buzz that the model would be available between Rs. 3.5-4.5 lakh (depending on the versions and the variants).
It may be recalled that the Ford Figo model was first unveiled in New Delhi in September this year. To facilitate the manufacturing of this model and also to double its manufacturing capacity to 2 lakh units the company is spending US$500 million on the Chennai plant. A senior company official had earlier indicated that Ford Figo will feature an array of advanced third generation safety features like Dual Front Airbags that offers safety in case of front collision, ABS (Antilock Brake System) with EBD (Electronic Brake-Force Distribution) that enhance the stability of the car and provides more comfortable driving experience. Belt tensioners and Belt Force limiters, Seatbelt warning indicator, Door-ajar warning and many more safety features will be available with Ford Figo.
News from - Wheels Unplugged Automobile Industry News

Tuesday 26 January, 2010

சோழர் வரலாறு

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபு வழிச்செய்தி வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன.
சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணீ வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள். கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளரினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராஜராஜ சோழனும், அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி பத்தாம், பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராஜராஜன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராஜேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் தாக்கித் தோற்கடித்ததாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. அவர்கள் சூடும் மலர் ஆத்தி

Monday 25 January, 2010

2010 இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதம் பூஷண் விருது

இந்த ஆண்டிற்காக விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னர் வேணுகோபால் ரெட்டி உள்ளிட்டோ ர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமீர்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இளையராஜா மற்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரமாகாந்த பண்டா உள்ளிட்டோ ர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகை திவா ரேகா, அனு ஆகா, ஹாக்கி வீரர் இக்னேஷ் திர்கி, பார்முலா ஒன் வீரர் நரேன் கார்த்திகேயன், பாட்மிடன் வீராங்கனை செய்னா நேவால் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் குரு ரமாகாந்த ஆச்ரேகர் உள்ளிட்டோ ருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.

Sunday 24 January, 2010

ரூ. 1,700 கோடி முதலீடு: மாருதி சுஸýகி திட்டம்

ஜன.23: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸýகி நிறுவனம் ரூ. 1,700 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இரண்டாவது ஆலை மானேசரில் உள்ளது. இந்த ஆலையில் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டு உற்பத்தி2.5 லட்சம் காராக உயரும். இந்த இலக்கு 2012-ம் ஆண்டில் எட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து இப்புதிய முதலீட்டு அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி அஜய் சேத் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ. 687 கோடியாகும்.
நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 7,333.77 கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்டதைக் காட்டிலும் 62 சதவீதம் கூடுதலாகும். முந்தைய ஆண்டு நிறுவனத்தின் வருமானம் ரூ. 4,512.64 கோடியாகும்.
வாகன விற்பனை 37 சதவீதம் அதிகரித்து 2,18,910 ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை நிலவியபோதிலும் மாருதி கார் விற்பனை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவாக லாபம் உயர்ந்துள்ளது. அதேபோல விற்பனையும் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் கார் விற்பனை அதிகரித்ததற்கு அரசு அளித்த வரிச் சலுகை முக்கியக் காரணம் என்று அஜய் சேத் கூறினார்.
மூன்றாம் காலாண்டில் நிறுவன ஏற்றுமதி 167 சதவீதம் அதிகரித்து 39,116 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 14,634 ஆகும்.
மாருதி நிறுவனத்தின் குர்காவ்ன் ஆலையில் ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மானேசர் ஆலை 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இந்நிறுவன கார் உற்பத்தி ஆண்டுக்கு 15 லட்சமாக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.

Saturday 23 January, 2010

2009 தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா

2008ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகைக்கான விருதை ‘ஃபேஷன்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.
இதேபோல் மராத்திய மொழிப் படமான ‘ஜோக்வா’வில் நடித்த உபேந்திரா லிமேய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
PTI PhotoFILEதேசிய அளவில் சிறந்த இயக்குனருக்கான விருதை ‘நான் கடவுள்’ படத்தை இயக்கிய பாலா வென்றுள்ளார். இதே படத்தில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றிய மூர்த்திக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சேது, நந்தா, பிதாமகன் வரிசையில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘நான் கடவுள்’ படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் சிறந்த ஜனரஞ்சகப் படமாக ‘ஓய் லக்கி! லக்கி ஓய்’ திரைப்படமும், சிறந்த படமாக ராகுல் போஸ் நடித்த வங்க மொழித் திரைப்படமான ‘அந்தாஹீன்’ படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கினார்.
மதூர் பண்டார்க்கரின் ‘ஃபேஷன்’ படத்தில் நடித்த கங்கனா ரனவத்திற்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ‘ராக் ஆன்’ படத்தில் நடித்த அர்ஜுன் ராம்பால் சிறந்த துணை நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
கன்னட மொழிப் படமான ‘குப்பசிகலு’ (Gubbachigalu) சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதை வென்றுள்ளது. பாலிவுட் படமான ‘ஹிந்தி மா’வில் நடித்த ஷாம்ஸ் படெலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 6 January, 2010

Volkswagen’s launces new car 'Polo'

The VW Polo is the company’s first small car in India, and will compete against A2 segment cars like the Suzuki Swift, Fiat Punto in India. The company has booked a 1500 sq. m. hall at the Auto Expo to show off its new cars and existing range.
Volkswagen Polo production started last week, and pre-series and trial production had started much earlier. There has been a lot of talk about the price of the Polo – that the company would have shock pricing that would make it an irresistible buy.