Monday 28 December, 2009

நாடு, மதம், மொழி... கடந்தது காதல்!

தருமபுரி, டிச. 27: தமிழ் கலாசாரப்படி, தருமபுரியில் ஆஸ்திரிய நாட்டுப் பெண்ணை நடனப் பயிற்சியாளர் திருமணம் செய்துகொண்டார் (படம்).
தருமபுரியை அடுத்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், மல்லிகா தம்பதியரின் மகன் செந்தில் (28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் சென்னையில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டின் அரசு விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் எலிசபெத் (25) சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு அண்மையில் வந்தார்.
சென்னையில் செந்திலிடம் நடனப் பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தமது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து, செந்தில் குடும்பத்தினர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எலிசபெத் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

Saturday 19 December, 2009

தோனிக்கு இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பந்துவீசிக் கொண்டிருந்த இந்திய அணியினர் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் முடிவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து ஐசிசி விதிப்படி நடுவர் ஜெஃப் க்ரோ தோனிக்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்தத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. உடனடியாகத் தடை அமலுக்கு வரும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. எனினும் தோனி இல்லாமல் போனால், அடுத்து இலங்கையுடன் ஆட வேண்டிய ஆட்டங்களில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இலங்கையுடனான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.

Monday 14 December, 2009

மக்கள் விரும்பினால் மாநிலங்களைப் பிரிக்கலாம்: அப்துல்கலாம்


இந்தூர்: மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். எனவே தனி மாநிலம் குறித்து அந்தந்த மாநில மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்வது நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து தெரிவித்தார்.
மாநிலங்களைப் பிரிப்பதைக் காட்டிலும் மக்களின் விருப்பமே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அப்துல் கலாமிடம் தனி மாநில கோரிக்கைகள் பரவலாக அதிகரித்து வருவது குறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்கையில்,
'இந்த மாநிலத்தை பிரிக்கலாம், இதை பிரிக்கக் கூடாது என்று சொல்வது மிகவும் சிரமம். என்னை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் கருத்து, விருப்பம் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவர்களின் விருப்பப்படியே செய்யவும் வேண்டும்.
ஏனெனில் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் வரை நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாத ஒன்று. தனித்தனி மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருவது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்றால், இதை வளர்ச்சிக்கான அரசியலாக பார்க்கவேண்டுமே தவிர, அரசியலின் அரசியலாக அணுகக்கூடாது.
தற்போது நாட்டில் இளம் தலைவர்கள் நிறைய வருவது நல்லது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் வளர்ச்சியை நோக்கி வீறுகொண்டு எழவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதமாக்கி அடுத்த 10 ஆண்டுகளிலும் அதை தக்க வைத்துக்கொண்டால், 2020 வல்லரசு என்ற இலக்கை எட்டிவிட முடியும்' என்று கலாம் கூறினார்.

Saturday 12 December, 2009

Volkswagen-Suzuki to roll out Rs 2.5-lakh car in India


The Volkswagen-Suzuki alliance plans to develop a brand new small car for the Indian market in the Rs 2-2.5 lakh range, which could replace the Alto when the Indian arm of Suzuki decides to retire its top-selling model.
"We will need a car in the Rs 2.5-lakh apiece range. First we had the M800, then the Alto. At some point we will need a replacement for the Alto. That price range is the entry level for Indian customers today, so we can't leave that segment open," Maruti Suzuki chairman RC Bhargava told ET.
Volkswagen and Japan’s Suzuki Motor had, on Wednesday, announced a deal which will see the German carmaker picking up a 19.9% stake in Suzuki for $2.5 billion. The companies plan to develop small cars and electric vehicles under both brands. The new car that will be priced at $4000-5000 in the European market will be the cheapest car from the Volkswagen stable below the Up, which carries a price tag of around $8800.

Friday 11 December, 2009

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா- 9 நாட்கள் நடக்கிறது

சென்னை: இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் இந்தாண்டு சர்வதேச திரைப்பட விழா சென்னை யில் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி தங்கராஜ் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
சென்னையில் இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் 7வது திரைப்பட விழாவை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க நாளன்று ஸ்பெயின் நாட்டு சினிமா திரையிடப்பட உள்ளது. விழாவில் மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.
பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கேன்ஸ் பட விழாவில் திரையிடப் பட்ட சில படங்களும் திரையிடப்படும். ஜெர்மனி இயக்குநர் ரோலான் ரிபர் பற்றி ஆய்வு நடைபெற உள்ளது.
விழாவில் வெளிநாட்டு இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் அமல் செய்யப்பட உள்ளது. 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பொக்கிஷம்', 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சலுகை அளிக்கப்படும் என்றனர்.

Sunday 6 December, 2009

கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் இந்தியா நம்பர்- 1

டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி 77 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக "நம்பர்-1' இடம் பெற்று புதிய வரலாறு படைத்தது. மும்பை டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என கைப்பற்றி, கோப்பை வென்றது. டெஸ்ட் போட்டி தரத்தில் இந்தியா உலக சாதனை படைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இலங்கை அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2-0 என்ற புள்ளியில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 77 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச அளவிலான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 124 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 122 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும், 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன.

Wednesday 2 December, 2009

Now Tata Nano goes green

One of the most prominent events for the automobile industry in the year was the launch of Tata Nano, the poor man’s car. The car is out there to fit in the budget of most people who desire to possess a car but are not financially in a position to do so.
Tata has now announced plans to produce a green version of the car. The car will be going hybrid. Mr Rattan Tata, Chairman of the Tata group and Tata Motors announced the ambitious plan on a visit to South Korea. Mr Tata is also believed to have said that the price war will continue and will soon see the low priced car emerging the winner.
Hybrid cars use dual power. The car runs on battery when possible and only falls back on primary power supply of petrol or diesel when there is a requirement. This leads to a very low consumption of fossil fuels and a high mileage. No further details were available but the project looks very interesting.

Tuesday 1 December, 2009

இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம்.

தேகப்பயிற்சி செய்யும் மாணவர் புத்திக்கூர்மை அடைகிறார்கள்..
ஆட்டுக்கொத்து சாப்பிடும் தமிழருக்கு வருகிறது ஆபத்து..
இன்றைய டேனிஸ் பத்திரிகைகளில் இரண்டு செய்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதில் முதலாவது இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் அபாயம் 30 வீதம் அதிகமாக உள்ளது என்பதாகும். உலகப்புற்றுநோய் ஆய்வுக்கழகமான ( டபிள்யூ.சி.ஆர்.எப் ) ஐ மேற்கோள்காட்டி முதலாவது செய்தி வெளியாகியுள்ளது.
அதேபோல சுவீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தினரால் பேராசிரியர் ஜோர்ஜ் குன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வின் பிரகாரம் தேகப்பயிற்சியை சிறந்த முறையில் செய்யும் 15 – 18 வயதுள்ள மாணவர்கள் நுண்ணறிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு அறிக்கைகளோடு, கடந்த மூன்று மாதங்களாக வெளிவரும் மருத்துவ ஆய்வு அறிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் உணவில் சரியான ஒழுங்கமைப்பையும், அத்தோடு தேகப்பயிற்சியையும் சரியாக நெறிப்படுத்தினால் கண்டிப்பாக ஆரோக்கிய வாழ்வை அடையலாம் என்பதே இன்றைய ஐரோப்பாவின் முக்கிய குரலாக ஒலிப்பது தெரியவருகிறது.
உலகப் புற்றுநோய் ஆய்வுக்கழகமும், அமெரிக்கா புற்றுநோய் ஆய்வுக்கழகமும் சென்ற மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இறைச்சியை அதிகமாக உண்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 வீதம் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளன. வாராந்தம் 1.100 கிராம் இறைச்சி சாப்பிடுவோரையும் அதேபோல வாரம் 150 கிராமிற்குக் குறைவாக இறைச்சி சாப்பிடுவோரையும் ஒப்பிட்டால் 1100 கிராம் சாப்பிடுவோருக்கு 30 வீதம் அதிக ஆபத்து என்றும் தெரிவிக்கின்றன. இறைச்சியால் பெருங்குடல், சிறுகுடல் இரண்டும் தாங்கமுடியாத களைப்படைந்து புற்று நோய்க்குள் விழுகின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிகமாக இறைச்சியை விரும்பி உண்போர் வாழும் முதலாவது நாடாக டென்மார்க் இருக்கிறது. மேலும் வருடாந்தம் 4000 டேனிஸ்காரர் பெருங்குடல் புற்றுநோய்க்கு உள்ளாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் டேனிஸ் ஆரோக்கிய வாழ்விற்கான உணவு வரையறைப் பிரிவினர் வாரந்தம் சாப்பிட வேண்டிய இறைச்சியின் அளவு எத்தனை கிராம் என்பதை இன்றுவரை துல்லியமாக வரையறை செய்யவில்லை. எனினும் வாராந்தம் 500 கிராம் இறைச்சிக்கு மேல் வேண்டாம் என்பதே பொதுவான ஆலோசனையாக உள்ளது. இறைச்சியில் இரண்டுகால் பறவைகள், காலில்லாத மீன் இவைகளின் ஊன் (சதை) நாலுகால் விலங்குகளின் இறைச்சிகளோடு ஒப்பிட்டால் சிறந்தது.

இறைச்சி உணவு என்றதும் நேரடியான இறைச்சி மட்டுமல்ல லிவர்பூஸ்ரேக் எனப்படும் ஈரல்பசை, பூல்சர், பேர்கர் என்று சகலவகை இறைச்சி உப உணவுகளும் இதற்குள் அடங்கும். அதேவேளை பெருங்குடல் மட்டுமல்ல உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும் புற்று நோய்களுக்கு இவை காரணமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
அதேவேளை இப்படியான ஆய்வுச் செய்திகள் இறைச்சி விற்பனைத் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இறைச்சி உண்போருக்கு விரக்தியையும் உண்டு பண்ணும். ஆகவே இரு தரப்பிலும் ஓர் அமைதியை ஏற்படுத்துமுகமாக டேனிஸ் விசேட வைத்திய நிபுணர் அனா ரியோனலான்ட் இன்னொரு கருத்தையும் முன்வைத்துள்ளார். பெருங்குடல் புற்றுநோய்க்கு இறைச்சி ஒன்றுதான் காரணமாக இருப்பதாகக் கூற முடியாது என்பது அவரது ஆறுதல் செய்தியாகும்.
அடுத்து சுவீடன் ஆய்வைப் பொறுத்தவரை கடந்த 1964 முதல் 1994 வரை கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்ட 1.2 மில்லியன் சுவீடிஸ் இளையோரின் நுண்ணறிவுத்திறனை மதிப்பீடு செய்து அறிக்கையைப் பார்த்தல் வேண்டும். இக்காலப்பகுதியில் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டு கடும் தேகப்பயிற்சிகள் வழங்கப்பட்ட இளையோரில் பெரும்பான்மை சிறந்த நுண்ணறிவுடையோராக மிளிர்வதாக தெரிவிக்கிறது. எனவே இளவயதில் தேகப்பயிற்சி நோயற்ற வாழ்வுக்கு மட்டுமல்ல நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கிறது. பெற்றோர் 15 – 18 வயதுக்கிடைப்பட்ட மாணவரை பிரத்தியேக வகுப்பிற்கு அனுப்பி அறிவாளியாக்க முயல்வது மட்டும் போதியதல்ல, அதுபோல தேகப்பயிற்சிக்கும் அனுப்புவது அவசியமானது என்ற கருத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
நிறையப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் ஆடு பிடித்து இறைச்சியடித்து வாரத்தில் பல தடவைகள் சமைக்கும் பழக்கம் உடையோராக இருக்கிறார்கள். ஆட்டுக் கொத்துறொட்டி அடிக்கடி கடைகளில் சாப்பிட எண்ணுகிறார்கள். அதுபோல பிள்ளைகளுக்கு மக்டொனால்ஸ் உணவில் ஆர்வத்தையும் பல பெற்றோர் ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயத்தை இந்த இரண்டு ஆய்வுகளும் தருகின்றன.