Wednesday 24 February, 2010

ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம்

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக இன்று குவாலியரில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் பெட்ச்மன் ஒருவர் அடிக்கும் முதல் இரட்டை சதமாகும். சச்சின் அடித்த 200 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப் பட்ட அதிக பட்ச ஸ்கோராகும்.
இதற்க்கு முன் பாகிஸ்தானின் சயீத் அன்வர் மற்றும் ஜிம்ப்பாவேயின் கோவன்ட்ரி ஆகியோர் அடித்த 194 ரன்களே ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஸ்கோராக இருந்து வந்தது. இன்று சிறப்பாக அடித்து விளையாடிய சச்சின் தன்னுடைய அதிக பட்ச ஸ்கோரான 186 ரன்களை கடந்தும், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை ஏற்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment