Monday 5 April, 2010

பெங்களூர் மாநகராட்சியை கைப்பற்றியது பாஜக‍!

பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது இதுவே முதல் முறை. பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தமுள்ள 198 உறுப்பினர் பதவிகள் கொண்ட மாநகராட்சியில், மாலை நிலவரப்படி 112 இடங்களில் பாஜக வெற்றியடைந்து முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 62 வார்டுகளிலும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 இடங்களையும் பெற்றுள்ளன. மற்றவை 7 வாட்டுகளில் வெற்றியடைந்துள்ளன.
பெங்களூரில் வெற்றி முகத்துடன் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா, 'நன்றாக பணியாற்றினால், வளர்ச்சியில் உண்மையாக அக்கறை காட்டினால் மக்கள் உங்களை ஆசிர்வதிப்பார்கள் என்பதற்கு இந்த வெற்றியை விட சிறந்த உதாரணத்தை நாம் தேட வேண்டியதில்லை' என்றார்.

No comments:

Post a Comment