Monday 10 January, 2011

அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்பேன்: சீமான்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்தார்.

 மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் "நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமான் திங்கள்கிழமை சந்தித்தார். சுமார் 40 நிமிஷ சந்திப்புக்குப் பிறகு வைகோ நிருபர்களிடம் கூறியது: "தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது, இலங்கை ராணுவத்தால் கொல்லப்படுவது குறித்து சீமான் பேசியதற்காக அவரைத் தமிழக அரசு கைது செய்தது. அதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. 
சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டப்படியான வழகு தவறு என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. சீமான் எந்தத் தவறும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிப்பதை யாராலும் தடுக்க முடியாது. வரப்போகும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்' என்றார். 
இதைத்தொடர்ந்து சீமான் கூறியது: "தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அதற்கு நன்றி சொல்வதற்காக அவரைச் சந்தித்தேன். 
வரப்போகும் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். வைகோ பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் இருந்துவிட்டார். அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற என் ஆசையை அவரிடம் கூறினேன். யோசிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
காங்கிரஸ், திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு பெரிய கட்சி அதிமுக தான். எனவே இந்த முறையும் அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்பேன்' என்றார்.

No comments:

Post a Comment