Thursday 13 January, 2011

தமிழக மீனவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து துப்பாக்கி சூடு குறித்த விவரங்களை இந்திய வெளியுறவுச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கோரியுள்ளார். கதாப்பட்டிணம் மீனவர் பாண்டியன் நேற்று இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்தார்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment