Saturday, 20 November 2010
Monday, 15 November 2010
கலாநிதி மாறன் - ஸ்பைஸ்ஜெட் தலைவரானார்
ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.
Wednesday, 10 November 2010
தமிழகத்திற்கு வரும் மகிந்திராவின் கார் தொழிற்சாலை
நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அன்ட் மகிந்திராவின் கார் தயாரிப்புத் தொழிற்சாலை தமிழகத்தில் அமையவுள்ளது.
இத்தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.4 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்ற செய்தி மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட பிற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் எவ்வளவு முதலட்டை மகிந்திரா மேற்கொள்ளவுள்ளது என்பதும் தெரியவில்லை.
இருப்பினும் 400 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது மகிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ. 4000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முதல் 7 ஆண்டுகளுக்கு பல்வேறு சலுகைகள் தரப்படும் என சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. இதையடுத்தே தற்போது மகிந்திரா அன்ட் மகிந்திரா தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்தில் அமைந்தால், தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.4 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்திரா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை தமிழகத்திற்கு வரவுள்ளது என்ற செய்தி மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்கு வருகிறது என்பது உள்ளிட்ட பிற விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் எவ்வளவு முதலட்டை மகிந்திரா மேற்கொள்ளவுள்ளது என்பதும் தெரியவில்லை.
இருப்பினும் 400 ஏக்கர் நிலப்பரப்பை தற்போது மகிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். கூடுதல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான பணிகளிலும் அது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ரூ. 4000 கோடி அளவுக்கு முதலீடு செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு முதல் 7 ஆண்டுகளுக்கு பல்வேறு சலுகைகள் தரப்படும் என சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு. இதையடுத்தே தற்போது மகிந்திரா அன்ட் மகிந்திரா தமிழகத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, 9 October 2010
எஸ்.எஸ். சந்திரன் காலமானார்
தமிழ் திரையுலகின் முன்னாள் நகைச்சுவை நடிகரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். சந்திரன் அவர்கள், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைஅருகே உள்ள இடும்பாவனம் என்ற ஊரில் வெள்ளிகிழமையன்று அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் சந்திரன். அதன் பிறகு நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோதே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் திரையுலகில் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள எஸ்.எஸ். சந்திரன், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரில் இருந்து இன்னாள் நடிகர்கள் வரை உடன் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி, குணச்சித்திர வேடங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ். சந்திரன்.
திரைப்படங்களில் மட்டுமன்றி, அரசியலிலும் ஈடுபாடு காட்டிய எஸ்.எஸ். சந்திரன், துவக்கத்தில் திமுகவில் செயல்பட்ட போதிலும், அதன்பிறகு அதிமுகவில் இணைந்தார். அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். மாநிலங்களவையில் எந்தப் பிரச்சினையிலும், தமிழிலேயே பேசி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன்.
திருவாரூரில் இருந்து அவரது உடல், சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sunday, 12 September 2010
Subscribe to:
Posts (Atom)