2014ம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உயர்வார் என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
தற்போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலர்களாகும். ஆனால் இன்னும் 4 ஆண்டுகளில் இது 62 பில்லியன் டாலர்களாக உயர்ந்து உலகிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுப்பார் முகேஷ். இதன் மூலம் உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்குத் தள்ளி விடுவார் முகேஷ் என்றும் போர்ப்ஸ் கூறியுள்ளது.
மெக்சிகோவில் நிலவி வரும் அரசியல் , பொருளாதார குழப்பங்களால் கார்லோஸின் சொத்து மதிப்பு குறைந்து விடும் எனவும் போர்ப்ஸ் கணித்துள்ளது.
53 வயதாகும் முகேஷ் தற்போது போர்ப்ஸின் உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday 12 September, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment