Thursday 2 September, 2010

சென்னைக்கு வரும் கியா மோட்டார்ஸ்

தென் கொரியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனம், சென்னை அருகே தனது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. ரூ. 7000 கோடி மதிப்பில் இந்த தொழிற்சாலையை அமைக்கவுள்ளது கியா.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ரூ. 12,000 கோடி அளவுக்கு முதலீடுகளைக் கவர திட்டமிட்டிருந்துத தமிழக அரசு. ஆனால் அந்த அளவை தாண்டிவிட்டது முதலீடுகளின் அளவு. இந்த நிதியாண்டு இறுதியில் ரூ.20,000 கோடி அளவை முதலீடுகள் தாண்டும் என எதிர்பார்க்கிறது தமிழக அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே தயாரிப்பு தொழிற்சாலையை வைத்துள்ள ஹூண்டாய் நிறுவனத்திற்கு கியா மோட்டார்ஸில் 35 சதவீத பங்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கவுள்ள தொழிற்சாலையில், ஆண்டுக்கு 3 லட்சம் கார்களைத் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது கியா மோட்டார்ஸ். இங்கு 2012ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கும் எனத் தெரிகிறது.
கியா மோட்டார்ஸும், ஹூண்டாயும் இணைந்து இந்திய மார்க்கெட்டில் பெரும் பங்கை வகிக்கும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உலகப் புகழ் பெற்ற 10 ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது 2ம் நிலை ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் தமிழகம் ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

No comments:

Post a Comment