Friday 18 February, 2011

சிட்டி கார்களை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா அறிவிப்பு

இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலின் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வீஸ் என்ஜினியர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.சரியான வடிவமைப்புடனும்,தரத்துடன் இல்லாததால் எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூன்றாம் தலைமுறை சிட்டி மாடலை திரும்ப பெறப் போவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவிலிருந்து 57,853 மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களை திரும்ப பெற ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற உள்ளது.
இதுதொடர்பாக,ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மூன்றாம் தலைமுறை சிட்டி கார் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கில் பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன.இதையடுத்து,2008 நவம்பர் முதல் 2009 டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சிட்டி கார்களில் புதிய லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கை இலவசமாக பொருத்தி தர முடிவு செய்துள்ளோம்.

சர்வதேச அளவில் 6,93,497 சிட்டி கார்களை திரும்ப பெறப்பட உள்ளது.இந்தியாவில் 57,853 சிட்டி கார்கள் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறி்த்து வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும்.
கார்களை திரும்ப பெறும் பணிகள் வரும் மார்ச் மாதம் துவங்கும்.லாஸ்ட் மோஷன் ஸ்பிரிங்கால், இதுவரை பெரிய பிரச்சினைகள் ஏதும் வரவில்லை.இருப்பினும்,வாடிக்கையாளர்களின் நலன் கருதி,முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment