Thursday, 23 December 2010

கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் காலமானார்.

நீண்ட நாட்கள் நோய்வாய்பட்டிருந்த கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் இன்று காலமானார்.
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கருணாகரன்(93) , நீண்ட நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 10 ஆம் தேதியன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இநநிலையில் நேற்று மீண்டும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றதாகவும், இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மாலை மரணமடைந்தார்.
கேரள முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர் கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Friday, 10 December 2010

சீமான் இன்று விடுதலையானார்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து வேலூர் சிறையில் இருந்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலையானார்.
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமானை, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்தனர்.
இதனையடுத்து வேலூர் சிறையில் இருந்து சீமான் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்க பெரும் திரளான தொண்டர்களும், நடிகர்களும், இயக்குனர்களும், தலைவர்களும் வேலூர் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

Sunday, 5 December 2010

மழையால் எங்கும் தண்ணீர் - ஊரப்பாக்கம்

என் வீட்டை சுற்றி தண்ணீர் ஓடுகிறது..


Saturday, 20 November 2010

Amritha's transportation projects in her school project day




Monday, 15 November 2010

கலாநிதி மாறன் - ஸ்பைஸ்ஜெட் தலைவரானார்

ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் தலைவரானார் தமிழகத்தின் பெரும் தொழிலதிபரான கலாநிதி மாறன்.
மீடியா உலகின் ஜாம்பவனாகத் திகழும் கலாநிதி மாறன், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கினார். இப்போது அவரிடம் 38.66 சதவீத பங்குகள் அவர் வசம் உள்ளன. இதைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட்டின் இயக்குநர் குழுவில் புரமோட்டர் டைரக்டராக அவர் இணைந்தார். தொடர்ந்து மாறனின் சார்பில் எஸ் ஸ்ரீதரன், நிகோலஸ் மார்டின் பால், ஜெ ரவீந்திரன், எம் கே ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு வழி விடும் பொருட்டு, ஏற்கெனவே இயக்குநர் குழுவில் இருந்த பிஎஸ் கன்சாக்ரா (இவரது குடும்பம்தான் ஸ்பைஸ்ஜெட்டை நிறுவியது), கிஷோர் குப்தா, முக்காராம் ஜான் மற்றும் விஜயகுமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இப்போது ஸ்பைஸஜெட்டின் தலைவராக மாறன் பொறுப்பேற்றுள்ளார். இதனை மும்பை பங்குச் சந்தைக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முறைப்படி இன்று அறிவித்தது.
இயக்குநர் குழுவில், சார்பு இயக்குநராக கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறனும் இணைந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவாக நீல் மில்ஸ் என்பவரை நியமித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய வரலாற்றில் தமிழக தொழிலதிபர் ஒருவர் நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸின் உரிமையாளர் மற்றும் தலைவராக இருப்பது இதுவே முதல்முறை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குகிறது.