Friday 25 September, 2009

குட்டி கார் தயாரிப்பில் இறங்கிய போர்ட் - ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம்

செப்டம்பர் 24,இன்று டெல்லியில் நடந்த விழாவில் தனது குட்டி காரான பிகோவை போர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. காரை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் முலாலி அறிமுகம் செய்தார்.
இந்திய சந்தையில் விற்பனையாகும் கார்களில் 75 சதவீதம் குட்டி கார்கள் என்பதால் சூசுகி, டாடாவுக்கு போட்டியாக போர்டும் பிகோ கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார்கள் சென்னை போர்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
போர்டு நிறுவனம் 1996ம் ஆண்டில் சென்னை மறைமலைநகர் கீழக்கரணை கிராமத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இதில் 2,100 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தத் தொழிற்சாலையை ரூ. 1,500 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவவும் போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது.
இதனால் சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவுள்து.
இதன்மூலம் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் என்பதை 2 லட்சம் கார்கள் என உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த முதல்வர் கருணாநிதி , துணை முதல்வர் ஸ்டாலின் , இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திமோத்தி ஜே.ரோமர் ஆகியோர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது

No comments:

Post a Comment