Monday 21 September, 2009

ஐநா சபைக்கூட்டத்தில் இந்திய சிறுமி உரை

நியூயார்க்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலகின் 100 முக்கிய தலைவர்கள் முன்னிலையில், சுற்றுச் சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் இந்தியாவின் லக்னோ நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பங்கேற்று உரையாற்ற இருக்கிறாள்.
யுக்ரத்னா ஸ்ரீவஸ்தவா என்ற அந்த சிறுமி, லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறாள.
ஐக்கிய நாடு சபையில் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் அவர் மூன்று கோடி இளம் குழந்தைகளின் சார்பாக "புவி வெப்பமடைதல்" குறித்து பேச உள்ளாள் இந்த சிறுமி.
இந்த கூட்டத்துக்கு ஐ.நா.பொது செயலாளர் பான் கி மூன் தலைமை தாங்குகிறார்.இந்தியா சார்பில் அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, சுற்றுப்புற சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஐநாவின் சுற்றுப்புற திட்டமிடுதல் அமைப்பின் இளைஞர்களுக்கான அங்கமான துன்சாவின் இளம் ஆலோசகராகவும் இருக்கிறாள் யுக்ரத்னா.
ஐ.நா.வில் உரையாற்ற உள்ளது குறித்து சிறுமி யுக்ரத்னா கூறுகையில்," ஒபாமாவிடம் உங்களின் கொள்கைகள் எங்களை பாதிக்கலாம். நீங்கள் இப்போதே சரியான முடிவை எடுத்தால் எங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் " என தாம் கூற இருப்பதாக தெரிவித்தாள்.

No comments:

Post a Comment