skip to main |
skip to sidebar
தருமபுரி, டிச. 27: தமிழ் கலாசாரப்படி, தருமபுரியில் ஆஸ்திரிய நாட்டுப் பெண்ணை நடனப் பயிற்சியாளர் திருமணம் செய்துகொண்டார் (படம்).
தருமபுரியை அடுத்த ஈச்சம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், மல்லிகா தம்பதியரின் மகன் செந்தில் (28). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் சென்னையில் நடனப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரிய நாட்டின் அரசு விமானப் போக்குவரத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் எலிசபெத் (25) சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு அண்மையில் வந்தார்.
சென்னையில் செந்திலிடம் நடனப் பயிற்சி பெற்றபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தமது பெற்றோரிடம் சம்மதம் பெற்றனர்.
இதையடுத்து, செந்தில் குடும்பத்தினர் தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு எலிசபெத் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி அருகேயுள்ள நல்லம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இரு ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியபோது, பந்துவீசிக் கொண்டிருந்த இந்திய அணியினர் அடிக்கடி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனால், ஆட்டம் முடிவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதையடுத்து ஐசிசி விதிப்படி நடுவர் ஜெஃப் க்ரோ தோனிக்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்தத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறதா என்பது பற்றித் தெரியவில்லை. உடனடியாகத் தடை அமலுக்கு வரும்பட்சத்தில் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் கேப்டனாகச் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. எனினும் தோனி இல்லாமல் போனால், அடுத்து இலங்கையுடன் ஆட வேண்டிய ஆட்டங்களில் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இலங்கையுடனான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
இந்தூர்: மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சி அடைய முடியும். எனவே தனி மாநிலம் குறித்து அந்தந்த மாநில மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்வது நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கருத்து தெரிவித்தார்.
மாநிலங்களைப் பிரிப்பதைக் காட்டிலும் மக்களின் விருப்பமே முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அப்துல் கலாமிடம் தனி மாநில கோரிக்கைகள் பரவலாக அதிகரித்து வருவது குறித்து கேட்டபோது அவர் பதில் அளிக்கையில்,
'இந்த மாநிலத்தை பிரிக்கலாம், இதை பிரிக்கக் கூடாது என்று சொல்வது மிகவும் சிரமம். என்னை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் கருத்து, விருப்பம் என்ன என்பதை பார்க்க வேண்டும். அவர்களின் விருப்பப்படியே செய்யவும் வேண்டும்.
ஏனெனில் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் வரை நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாத ஒன்று. தனித்தனி மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருவது தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாதாரண மக்களுக்கு நல்லதைச் செய்யவேண்டும் என்றால், இதை வளர்ச்சிக்கான அரசியலாக பார்க்கவேண்டுமே தவிர, அரசியலின் அரசியலாக அணுகக்கூடாது.
தற்போது நாட்டில் இளம் தலைவர்கள் நிறைய வருவது நல்லது. ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் வளர்ச்சியை நோக்கி வீறுகொண்டு எழவேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதமாக்கி அடுத்த 10 ஆண்டுகளிலும் அதை தக்க வைத்துக்கொண்டால், 2020 வல்லரசு என்ற இலக்கை எட்டிவிட முடியும்' என்று கலாம் கூறினார்.

The Volkswagen-Suzuki alliance plans to develop a brand new small car for the Indian market in the Rs 2-2.5 lakh range, which could replace the Alto when the Indian arm of Suzuki decides to retire its top-selling model.
"We will need a car in the Rs 2.5-lakh apiece range. First we had the M800, then the Alto. At some point we will need a replacement for the Alto. That price range is the entry level for Indian customers today, so we can't leave that segment open," Maruti Suzuki chairman RC Bhargava told ET.
Volkswagen and Japan’s Suzuki Motor had, on Wednesday, announced a deal which will see the German carmaker picking up a 19.9% stake in Suzuki for $2.5 billion. The companies plan to develop small cars and electric vehicles under both brands. The new car that will be priced at $4000-5000 in the European market will be the cheapest car from the Volkswagen stable below the Up, which carries a price tag of around $8800.
சென்னை: இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் இந்தாண்டு சர்வதேச திரைப்பட விழா சென்னை யில் வரும் 16ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து அமைப்பின் நிர்வாகி தங்கராஜ் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
சென்னையில் இந்திய திரைப்பட திறனாய்வு அமைப்பு சார்பில் 7வது திரைப்பட விழாவை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.
துவக்க நாளன்று ஸ்பெயின் நாட்டு சினிமா திரையிடப்பட உள்ளது. விழாவில் மொத்தம் 40 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் திரையிடப்பட உள்ளன.
பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் படங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கேன்ஸ் பட விழாவில் திரையிடப் பட்ட சில படங்களும் திரையிடப்படும். ஜெர்மனி இயக்குநர் ரோலான் ரிபர் பற்றி ஆய்வு நடைபெற உள்ளது.
விழாவில் வெளிநாட்டு இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவும் அமல் செய்யப்பட உள்ளது. 'பசங்க', 'அச்சமுண்டு அச்சமுண்டு', 'பொக்கிஷம்', 'நாடோடிகள்' உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன.
திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விழாவில் சலுகை அளிக்கப்படும் என்றனர்.