Wednesday, 25 August 2010, பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜூம் அவரது மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்தனர்.
பின்னர் இந்திப்பட டான்ஸ் மாஸ்டர் போனிவர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றனர்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜூக்கும் போனிவர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. அங்குள்ள மலாடு விளை யாட்டு மைய அரங்கில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இயக்குனர்கள் ராதாமோகன், குகன், விஜி, குமரவேலு மற்றும் கப்பார், வெங்கட் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
Wednesday, 25 August 2010
Thursday, 19 August 2010
டாப் 10 உலகத் தலைவர்களில் மன்மோகனுக்கு முதலிடம்
அமெரிக்காவின் நியூஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் டாப் 10 தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறவில்லை.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.
உலக நாட்டு தலைவர்களின் ஆட்சியில் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலகின் சிறந்த தலைவர்களை தேர்வு செய்வதற்கான தலைவர்களை நேசிக்கும் தலைவர் என்ற தலைப்பில் கருத்தை மையமாக கொண்டு உலகில் உள்ள தலைவர்களை வரிசைப்படுத்தி தேர்வு செய்து அமெரிக்காவின் நியூஸ்வீக் பத்திரிகை கணித்து அறிவித்து உள்ளது.
இதில் மன்மோகன் சிங்குக்கு முதலிடத்தைக் கொடுத்துள்ளது நியூஸ் வீக். 2வது இடம் இங்கிலாந்தின் புதிய பிரதமர் டேவிட் காமரூனுக்கும், 3வது இடம், மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத்துக்கும் கிடைத்துள்ளது.
மன்மோகன் சிங்குறித்து நியூஸ்வீக் கூறுகையில், முன்னாள் பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் சிங், 21வது நூற்றாண்டின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர். தேங்கிக் கிடந்த சோஷலிச இந்தியாவிலிருந்து உலகப் பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றியவர்.
இந்தியாவின் இந்த மிகப் பெரிய மாற்றத்திற்கு மன்மோகன் சிங் மட்டுமே தனிப் பொறுப்பாவார். அவரது திறமையும், செயல்பாடுமே இதற்கு முக்கியக் காரணம். உலகளாவிய தலைவர்கள் மத்தியில் தனித்து தெரிகிறார் மன்மோகன் சிங்.
ஊழலற்ற, எளிமையான தலைவராக விளங்கி வருவது அவரது தனிச் சிறப்பு. ஒரு உலகத் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மன்மோகன் சிங் தான் சரியான உதாரணம் என்று முன்னாள் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குநர் எல்பராதே கூறியது குறிப்பிடத்தக்கது என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் பிரெஞ்சு அதிபர் சர்கோஸி, 5வது இடத்தில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உள்ளனர்.
உலகத் தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இடம் பெறாதது வியப்பளிக்கும் வகையில் உள்ளது.இதேபோல உலகின் 100 சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.
Wednesday, 28 July 2010
Nokia X6 8GB in India for 14,499 INR
Nokia continues to flood the Indian markets with new phone launches. The latest entrant in the lineup of new phones from Nokia is the X6 8GB. Priced at Rs. 14,499, the official announcement of the X6 8GB was made on Twitter by Nokia.
The device has a 3.2 inch capacitive touch screen with an aspect ratio of 16:9. It packs in a 5MP camera with dual LED flash and supports TV out and online share options. The X6 8GB runs on Symbian OS S60 5.0 and has Bluetooth, USB, WLAN connectivity features.
Basically a music phone, the X6 8GB plays various music formats like MP3, SpMidi, AAC, AAC+, eAAC+, WMA and MTP. It plays 35 hours of music and 4.5 hours of video. The talk time of the phone scores at 11.5 hours on GSM and 6 hours on 3G.
With other Nokia phones like C3, C6, E5 coming to Indian market soon, looks like it's raining phones for the Indian consumer who can well be spoilt for choice.
Tuesday, 20 July 2010
லண்டனின் பத்து பிரபல மொழிகளில் தமிழுக்கு இடம்!
லண்டன்: உலகத் தமிழர்களுக்கு இதோ ஒரு நற்செய்தி. லண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திக்கு இடமில்லை. மாறாக பெங்காலி, பஞ்சாபி ஆகியவை இடம் பிடித்துள்ளன.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.
இந்த தகவலை லண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் தினசரி கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை லண்டன்காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் என லண்டன் காவல்துறை சமீபத்தில்தான் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது.
ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை லண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் இதுகுறித்துக் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.
Saturday, 17 July 2010
சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, சனிக்கிழமை காலை அங்கு சென்ற சென்னை போலீசார், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சீமானிடம் அறிவித்தனர்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்தமைக்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமைக்காகவும் சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சீமான், நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)








