
முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி, 2-1 என முன்னிலை பெற்றது. 4வது போட்டி நேற்று முன் தினம் செயின்ட் லூசியாவில் நடந்தது. மழையின் காரணமாக வெறும் 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி தொடரை வென்றது. இதன் மூலம் கரீபிய மண்ணில் 2வது முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதற்கு முன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2002 ம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீசில் சாதித்திருந்தது.
ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வெற்றி நடை தொடர்கிறது. கடந்த 2008 ம் ஆண்டு முதல் தொடர்ச் சியாக ஐந்து ஒரு நாள் தொடர்களில் கோப்பை (எதிர்-இலங்கை (2008), இங்கிலாந்து (2008), இலங்கை (2009), நியூசிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2009)வென்று அசத்தியுள்ளது.
No comments:
Post a Comment