Saturday 4 July, 2009

கிட்னியில் கல் - சிகிச்சை அனுபவம்

இன்று டியுப் எடுபதர்காக சென்றேன் , டாக்டர் செக் செய்துவிட்டு டியுப் எடுக்கலாம் என்று உறுதி . நர்ஸ் டிரெஸ்ஸை மாற்ற சொன்னார், நானும் பச்சை கலர் உடைக்கு மாறினேன். மனதில் சிறு பயம் இருந்தது , அதை வெளிக்காட்டவில்லை. ஆபரேஷன் தியேட்டரில் கால்களை தூக்கி சரியாக படுத்துக்கொண்டேன். டாக்டர் மயக்க மருந்து கொடுக்காமல் தன் வேலையை தொடங்கினார். முதலில் உறுப்பை சுற்றி மருந்து தடவினார், அடுத்து வேறு மருந்தை உறுப்பினுள் செலுத்தினர். அப்பொழுது கொஞ்சம் வலி இருந்தது பொறுத்துக்கொண்டேன். அடுத்து ஒரு இரும்பு குச்சிபோல் இருந்த ஒன்றை வைத்து உறுப்பில் உள்ள டியுபை எடுத்தார், வலி பொறுக்கவில்லை. டாக்டர் அந்த டியுபை என்னிடம் காண்பித்தார், அதை வெறுப்பாய் பார்த்தேன். நர்ச்ஸ் உதவியுடன் எழுந்து பாத்ரூமுக்கு சென்றேன், சுத்தமாக கிளீன் செய்தேன். இந்த அனுபவம் வெறுப்பாய் இருந்தது, ஆனால் தவிர்க்க முடியாதது. வழியை விட சிகிச்சை முறை வெறுப்பாய் இருந்தது. கடைசியில் டாக்டருக்கும் நர்ச்சுக்கும் நன்றியை சொல்லி பணத்தை கட்டி கிளம்பினேன்.

No comments:

Post a Comment