
ராஜன் தேவ் கல்லீரல் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அங்காமலையில் உள்ள செயின்ட் சேவியர் சர்ச்சில் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.
ஆலப்புழா மாவட்டம் சேர்தலாவில் பிறந்த தேவ், 1980ல் சிறுசிறு வேடங்களுடன் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துவந்த தேவ், இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்துள்ளார்.
1 comment:
நல்ல நடிகர்,சூரியன் படத்தில் இவரின் நடிப்பு நினைவில் வந்து போனது.
Post a Comment