
சோபியான் படுகொலைகள் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று பெரும் அமளி நிலவியது.
இன்று வேறொரு விவகாரத்தால் அவை கொந்தளித்தது. இளம் பெண்களையும் சிறுமிகளையும் மிரட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சரணைடந்த பயங்கரவாதிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இன்று அவை தொடங்கியதும் இந்தப் பாலியல் மோசடி விவகாரத்தில் முதல்வர் உமர் அப்துல்லாவுக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் துணை முதல்வரும் பிடிபி மூத்த தலைவருமான முஸாபர் பெய்க் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து, கடும் உணர்ச்சிவசப்பட்டவரான உமர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தம்மால் சகித்துக் கொள்ள முடியாது எனவும் தம்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்வரை தம்மைக் குற்றவாளி எனக் கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.இதை ஏற்காத எதிர்கட்சியினர், இந்த வழக்கில் 102-வது குற்றவாளியாக உமர் பெயர் இருப்பதாகக் கூறினர். இதையடுத்து, ராஜிநாமா செய்யப் போவதாக உமர் தெரிவித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது எனக்குத் தெரியும். எனினும், தாம் நிரபராதி என நிரூபிக்கும்வரை தாம் பதவியில் இருக்க விரும்பவில்லை என்றார் அவர்.இவ்வாறு உமர் பேசியதும், அவை கொந்தளித்தது. கடும் அமளி ஏற்பட்டது. எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் உமரை சமாதானம் செய்ய முயன்றனர். அவரது ராஜிநாமாவை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது எனக் கூறினர். இதை ஏற்காத உமர் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
No comments:
Post a Comment