Monday 27 July, 2009

ஆஸ்திரேலியாவில் இந்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

ஜூலை 27- ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் மிரட்டப்பட்டதுடன் அவர் மீது தாக்குதலும் நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அவர் தான் பணியாற்றும் ""ஏபிசி டி.வி."" என்னும் தொலைக்காட்சிக்கு செய்தி அளித்திருந்தார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான ஆங்கிலத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவும், போலியான பணிச் சான்றிதழ் பெறவும் 2 ஏஜென்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளை அணுகினார். இதில், 3000 அமெரிக்க டாலர்கள் முதல் 5000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை செலுத்தினால் அத்தகைய சான்றிதழ்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த புலனாய்வுச் செய்தி ஏபிசி டி.வி.,யில் அண்மையில் வெளியானது.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளரை சிலர் மிரட்டியதாகவும் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பெண் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment