Saturday 27 June, 2009

சென்னையில் ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை

சென்னை, ஜூன் 27: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ஊராட்சித் தலைவர் ஜி.என்.ஆர். குமார் (47) குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.என்.ஆர். குமார். காஞ்சிபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தாராம்.

இன்று காலை 7.45 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலை அருகே காரனை கூட்ரோடு சந்திப்பில் தனது காரில் இருந்தபடி நண்பர் ஒருவருடன் குமார் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது இவரது காரை பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து இறங்கிய 7 பேர், குமார் இருந்த காரின் மீது 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மேலும், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.

No comments:

Post a Comment