
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனி ஆணையம் ஒன்று உருவாக்கப்படுகிறது. திட்டக் குழு தலைமையில் இந்த ஆணையம் செயல்படும்.
அரசு செயல்படுத்தும் பிரபலமான திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைகிறதா என்பதை இந்த ஆணையம் ஆராயும். இந்த ஆணையம் நலத் திட்டங்கள் செயல்படுவதை கண்காணிப்பதோடு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தையும் படிப்படியாகச் செயல்படுத்தும்.
அரசு செயல்படுத்தும் முக்கியத் திட்டங்களான கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ -அனைவருக்கும் கல்வித் திட்டம்), தேசிய கிராமப்புற சுகாதார திட்டம், பாரத் நிர்மான் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்போது அதன் பலன் உரியவர்களைச் சேர்கிறதா என்பதையும் இக்குழு ஆய்வு செய்யும்.
No comments:
Post a Comment